Showing posts with label ஊர் தகவல். Show all posts
Showing posts with label ஊர் தகவல். Show all posts

Thursday, July 1, 2010

Is that foreplay

நித்தி மற்றும் உங்கள் அபிமான ரஞ்சிதா ..


அந்த சரித்திர நிகழ்வு நடந்த பொழுது நான் இந்தியாவில் இருந்தேன் அன்று வெளியே சென்றுவிட்டதால் அந்த நீலப்படத்தை பார்க்க முடியவில்லை . மறு நாள் அபுதாபியில் இருந்து என் நண்பர் அழைத்து விசையத்தை சொன்னார் . அவர் சொன்ன விசையத்தை விட அந்த காவியம் அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்புவதாக சொன்னார் . எனக்கு ஒரே ஆச்சரியம் செக்ஸ் கல்வியே வேண்டாம் என்ற சொன்ன ஊரில் குழந்தைகள் , பெண்கள் என்று குடும்பத்துடன் பார்க்கும் ஒரு தொலைக்காட்சியில் செக்ஸ் படமா அட தமிழகம் முன்னேறி விட்டதே என்று பெருமைப்பட்டேன் .


என்ன தான் ஒரு மாற்றம் என்றாலும் ஒரு நீலப்படத்தை குடும்பத்துடன் பார்ப்பது என்பது ஓனானை எடுத்து வேட்டியில் விட்ட நிலைதான் . ஒரு சாதாரண குடும்பஸ்தர் சம்பவத்தன்று வழக்கம் போல் தொலைக்காட்சியை போட [சூழல் : தனது மனைவி , மகளும் தன்னுடன் இருக்க] அங்கு ஒரு நீலப்படம் ஓடிக்கொண்டு இருந்தால் அவர் மனம் எப்படி இருத்திருக்கும் கஷ்ட காலம் தான் .பிறகு நான் யோசித்து பார்த்தேன் குடும்பத்துடன் பார்க்கும் பொழுது அந்த மகளும் பார்த்து "what they are doing dad ?" என்று கேட்டு இருந்தால் அவர் என்ன சொல்லி இருப்பர் என்று

அந்த சூழலில் எனக்கு தோன்றிய கேள்வி செக்ஸ் கல்வியே குழந்தைகளை கெடுத்துவிடும் என்று சொன்ன நம் சமுதாயம் தான் வீட்டு வரவேற்ப்பு அறையில் குடும்பத்துடன் ஒரு சுமாரான நீலப்படத்தை பார்த்து மகிழும் அளவிற்கு முன்னேறி இருக்கிறதே என்று நினைக்கும் பொழுது பெருமையாக இருக்கிறது . இத்தனை நாளாக கலாச்சாரம் , பண்பாடு என்று சொல்லிக்கொண்டு இருந்த அந்த சமுதாய காவலர்கள் எங்கே . திரைப்படத்தில் புகை பிடித்தால் சமுதாயம் கெட்டுவிடும் என்று சொன்னன கேனைகள் எங்கே . சாமி சிலை முன்பு கால்மேல் கால் போட்டு அமர்ந்தாள் தவறு என்று வழக்கு தடர்ந்த முட்டாள்கள் எங்கே .செக்ஸ் கல்வி வேண்டாம் என்று போராட்டம் செய்த பன்னாடைகள் எங்கே . இதை ஒளிபரப்பு செய்தவர்கள் வீட்டு குழந்தைகள் இதே கேள்வியை கேட்டுஇருக்குமே ஆனால் என்ன பதிலாக இருக்கும் “ they are doing foreplay dear என்று சொல்லி இருப்பார்களோ அவர்கள் எல்லாம் படித்த பண்பட்ட சமுதாயம் அயிற்றே , சமுதாயத்தில் எங்கு கொடுமைகள் நடந்தாலும் அதை வெளிச்சம் போட்டுக்காட்டும் God Father அல்லவா சொன்னாலும் சொல்வார்கள்


ஏன் ஒரு கண்டனக்குரல் கூட எழவில்லை அது ஒரு சிறப்பான படம் என்பதாலா இல்லை இத்தனை நாளாக ரகசியமாக பார்த்த ஒன்றை இன்று குடும்பத்துடன் பார்க்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்ததாலா என்ன ஒரு கேவலம் . இதற்கு நடுவில் ஒரு எழுத்தாளன் அந்த சாமியாரை பற்றி எழுதி விட்டார் அதற்காக அவரை மனிப்பு கேட்க வைத்த ஒரு தொலைக்காட்சி , அந்த நீல படத்தை ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சியை என்ன செய்ய சொல்லி இருக்க வேண்டும் . சொல்ல பயமா இல்லை , இந்த சமுதாயம் என்ன ஆனால் என்ன நம்ப கல்லா கட்டினால் போதும் என்ற சுயநலமா , ஆனால் ஒன்று மட்டும் உண்மை தாங்கள் இரவில் போடும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை பகலில் போட்டு விட்டானே என்று வருத்தப்பட்டு இருப்பார்கள் . இந்த சம்பவம் சொல்லும் உண்மை என்ன என்றால் , செக்ஸ் மற்றும் செக்ஸ் கல்விக்கு நாம் மக்களிடையே பெரும் ஆதரவு இருக்கு என்று . அரசாங்கம் இதை கவனிக்க வேண்டும்

இதற்கு நடுவில் இணையத்தளத்தில் பல அரவேக்காடுகள் செய்யும் அட்டுழியம் தாங்கமுடியவில்லை . ஓசியில் கிடைத்தால் --------------- செய்யும் மக்கள் . அதை எழுதுவதிலும் , கருத்து தெரிவிப்பதிலும் காட்டுவது வெட்ககேடான செயல் .


இப்படி எழுதுவதால் நான் அந்த சாமியாரையோ அல்லது அந்த நடிகையையோ ஆதரிப்பதாக என்ன வேண்டாம் தவறு என்பது யார் செய்தாலும் தவறு தான் ஆனால் அது ஒருவரை மட்டும் சாடும் பொழுது அதுவும் தவறு தான் . ஆகையால் அந்த இருவர் மட்டும் அல்லாமல் , ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி , மற்றும் தன் சுயநலத்திற்காக கண்டும் காணாமல் இருந்த , இருக்கும் , பத்திரிக்கையும் தான் காரணம் . ஒரு நடிகையை மூன்று மாதமாக பிடிக்க முடியாத காவல் துறையை என்ன சொல்வது .
என்னை பொறுத்த வரை அந்த சாமியாரோ அந்த நடிகையோ வருத்தப்படவோ , வெட்கப்படவோ ஒன்றும் இல்லை. செக்ஸ் என்பது தீண்டத்தகாத வார்த்தை என்று இருந்த ஒரு சமுதாயத்தில் குடும்பத்துடன் பார்க்கும் ஒரு வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி . ஒரு நீலப்படத்தை வரவேற்ப்பு அறைக்கு கொண்டுவந்த பெருமை அந்த படத்தில் தோன்றிய அந்த சாமியாருக்கும் , நடிகைக்கும் தான் . பிறகு இந்த சமுதாய புரட்சியை செய்த அந்த தொலைக்காட்சிக்கு நன்றி .

Monday, May 4, 2009

அரசியல் - தீவிரவாத தொழில்சாலை

என்ன கேவலம் நடக்கிறது நம்ப ஊரில் ...ஆட்சியில் இருக்கும் பொழுது ஈழம் பற்றி கேட்டால் அது அண்டை நாட்டு பிரச்சனை நாம் எப்படி மூக்கை நுழைப்பது என்று சொன்ன மத்திய அரசு இன்று ஏன் இவளவு அக்கறை காட்டுகிறது .. மக்கள் என்ன அவளவு முட்டாள்கள் ஆகிவிட்டார்களா ..

இதற்கு நடுவில் டாக்டர் காலை உணவு உன்ன வேண்டாம் என்று சொன்னதை .. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று மெரினாவில் வந்து அமரும் தலைவன்

ஈழம் என்ற வார்த்தையை கேள்விப்படாத மாதிரி தனி ஈழம் வேண்டும் என்று குரல் கொடுக்கும் தலைவி ..

இந்த ராமதாஸு சரியான பச்சோந்தி, அவன மாதிரி ஒரு பொறம்போக்கை பார்க்கவே முடியாது , கடைசி நாள் வரைக்கும் ஆட்சியில் பங்கு வகிப்பார்கள் அப்புறம் எங்களுக்கும் அவங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பார்களாம் அதையும் நாம் நம்பனும் பன்னாடை ..

இதற்கு நடுவில் சினிமா காமடியன்கள் வேறு [கார்த்திக் ,மன்சூர் அலி கான் , TR, சரத், விஜயகாந்த் அட நாம்ப ரித்திஷ்].. இந்த கேவலம் நம்ப ஊரில் என்றால் வடக்கே இதை விட கொடுமை ..

இங்கிலீஷ் வேண்டம் என்கிறான் ஒருத்தன் ..

இரண்டு ரூபாய்க்கு 35 கிலோ அரிசி என்கிறான் ஒருத்தன் . எற்கனவே தமிழ் நாட்டில் கொடுத்து குட்டிச்சுவர் ஆக்கியாச்சு தேசம் முழுவதையும் கெடுத்துவிடலாம் என்று ஆசை போல

அட நம்ப நக்மா எல்லாம் election நிக்குதாம் நாடு உருப்பட்ட மாதிரித்தான்

அதை விட கொடுமை என்ன என்றால் இவனுக காட்டி இருக்கும் சொத்து மதிப்பை பார்த்திங்களா .. பன்னாடைக 60000 கோடி 40000 கோடி என்று சுருட்டிவிட்டு மூன்று கோடி நாலு கோடி என்று கணக்கு காட்டறாங்க.. இன்னமும் என்ன கொடுமை என்றால் அதையும் நம்ப election commission நம்புவது ,,

என்ன இவனுக எல்லாம் என்ன நினைக்கிறாங்க மக்கள் எல்லாம் கேனப்பசங்க என்றா . இல்லை இவனுக ரொம்ப நல்லவங்க என்ன சொன்னாலும் நம்புவாங்க என்றா .. போங்க டா பொறம்போக்குகளா ....
இந்த மாதிரி கொடுமை எல்லாம் தாங்க முடியாம தான் தீவிரவாதிகளும் naxlites களும் உருவாகுகிறார்கள் என்று நினைக்கிறேன் . இந்த மாதிரி சம்பவங்களை பார்க்கும் பொழுது நம்மில் பலருக்கு கடும் கோபம் வரும் ஆனால் என்ன நம்மால் என்ன பண்ண முடியும் என்று நினைத்துக்கொண்டு சும்மா நம் வேலையை பார்க்க போய்விடுகிறோம் , வேலையே இல்லாதவன் என்ன செய்வான் இடுப்பில் குண்டை கட்டிக்கொண்டு தான் திரிவான் ..

நாம் தேசம் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று நமக்கெல்லாம் வரும் சிந்தனை அவர்களுக்கு கொஞ்சம் கூட வராத ..

பன்னாடை பசங்க இவளவு கொள்ளை அடித்து என்ன பண்ண போறாங்க . என்ன கருமமோ போங்க .. ஒரே கோபம் நாம் ஊர் செய்தியை படித்தால் அது தான் இந்த பதிவு

Wednesday, April 8, 2009

வணக்கம் மக்களே ...

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் என் ப்லோக் பக்கம் வருகிறேன் ..ஒரு 20 நாள் பயணமாக ஊருக்கு சென்று இருந்தேன் நேற்று தான் அபு தாபி திரும்பினேன் ..இது ஒரு நல்ல இனிமையான பயணமாக அமைந்தது .பயணத்தின் சுவாரசியம் என்ன என்றால் , இந்த முறை அப்பா அம்மா விடம் சொல்லாமல் சென்றேன் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று ஆனால் ,சென்னை விமான நிலையத்தில் இறங்கிய வுடன் ஒரு 1000 வாட்ஸ் பல்பு ஆகிவிட்டது எனக்கு . என்ன என்றால் என் பொட்டி படுக்கைகள் எல்லாம் வரவில்லை ...அட போங்க டா என்று ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டு சென்றேன் அடுத்த நாள் இரவு ஒரு விமானத்தில் வந்து சேர்ந்தது பிறகு அதை வாங்கிக்கொண்டு அடித்து பிடித்து அடுத்த நாள் ஊரு போய் சேர்ந்தேன் .ஈரோடு போய் சேர இரண்டு நாள் ஆகிவிட்டது

என்னை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் திட்டும் விழுந்தது , மற்ற படி மிகவும் அருமையான பயணமாக அமைந்தது .இருந்தும் எப்பவும் போல் பல நண்பர்களை பார்க்க முடியவில்லை . பெங்களூர் செல்லலாம் என்று இருந்தேன் . கடைசி நிமிடத்தில் முடியவில்லை .. ஜூன் மாதத்தில் சகோதரர் திருமணம் அதற்கு செல்ல வேண்டும் ஆகையால் இந்த மாதமும் அடுத்த மாதமும் அதிக நேரம் பொட்டி தட்ட வேண்டும் .
கட முட கட முட ....

Friday, January 9, 2009

பிரிவு



உறவுகளை விட்டு பிரியும் ஒவ்வொருவரும் வருத்தப்பட ஒரு நேரம் வரும் என்றால் அது நம் உறவுகளின் மறைவு தான் . நேற்று வரை நம் உறவு என்று நினைத்தவர் இன்று இல்லை , அவர்களோடு பழகிய நாட்கள் அவர்களிடம் இருந்த புரிதல் . என்று அவர்கள் விட்டு செல்லும் சுவடுகள் எளிதில் மறப்பது அல்ல

இப்படி பட்ட சூழலில் பிரிவால் வாடுபவர்களுக்கு தொலைபேசியில் துக்கம் விசாரிப்பது என்பது அதை விட கொடுமை . கண்ணிரால் சொல்ல வேண்டிய வலியை வார்த்தையால் சொல்ல முடியாது , சொல்லவும் வார்த்தை வராது , நம் வருத்தத்தை வெளிபடுத்த முடியாத வலி அதை விட ரொம்ப கொடுமை



கண்ணிர் துளி ஒன்று
நாக்கில் பட
சீசீ ஒரே உப்பாக இருக்கிறது
என்றதாம் நாக்கு
அதற்கு கண்கள் சொன்னதாம்
அது தான் என்னிடம் இருந்த
கடைசித்துளி என்றதாம்
பாளைவனத்தில் பயணிக்கும் ஒரு
வழிப்போக்கனின் கண்கள்

இப்படி தான் நம்மில் பலரின் நிலைமை .. ஆறுதல் என்று நாம் சொல்லும் வார்த்தைகள் . நாக்கில் பட்ட கண்ணிர் துளி ஆகி விடக்கூடாது. என்ற பயத்தில் நான் அவர்களை அழைக்கவே மிகவும் தயங்குகிறேன் அதையும் மீறி அழைத்தாலும் வார்த்தைகளை தேடுவதில் போய்விடுகிறது

வார்த்தைகள் தேடுகிறேன்
வலியை சொல்ல
வழி ஒன்றும் தெரியவில்லை
என் கண்ணிர் கதை சொல்ல !
ஓடி வரும் தூரத்தில் நானும் இல்லை !
ஓ என்று அழவும் யாரும் இல்லை !
இப்படி பல தருணங்களில் தேடுகிறேன்
என் வாழ்க்கை பயணத்தை ..

Sunday, December 28, 2008

மீண்டும் இம்சை ஆரம்பம்

பல நாட்களாக ப்லோக் பக்கமே வர முடியவில்லை .. அடுத்த மாதம் பொங்கலுக்கு ஊருக்கு போகலாம் என்று இருந்தேன் அதனால் மீதம் இருந்த வேலைகளை முடித்துக்கொண்டு இருந்தேன் ஆனால் இப்பொழுது பார்த்தால் , அது நடக்காது போல் தெரிகிறது .. அது தான் இன்று எல்லா வேலைகளையும் விட்டு விட்டு ப்லோக் பக்கம் வந்து விட்டேன் ..

Thursday, November 6, 2008

வெள்ளை பன்றிகளும் வெட்டி பேச்சும் ...

சென்ற வாரத்தில் ஒரு நாள் என் நண்பர் ஒருவருக்கு பிறந்தநாள் , அதற்காக ஹோட்டல் க்கு செல்வதற்காக டாக்ஸி க்காக நின்று கொண்டு இருந்தோம் ,அப்பொழுது ஒரு டாக்ஸி வந்தது எங்களுக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த ஒரு வெள்ளைக்காரன் , எங்களுக்கு முன்னால் ஏற முயன்றான் , நானும் என் நண்பரும் what is this man ? என்றோம் பெரிய தொரை கணக்கா அதற்க்கு அவன் நடு விரலை மட்டும் காட்டி F என்று தொடங்கும் ஒரு வார்த்தையை சொன்னான் . same same puppy same ஆகிவிட்டது

அதை கேட்டதும் எங்களுக்கு கடுப்பாகியது , போட ங்கோ _ _ என்று தான் முதலில் சொன்னேன் , அதன் பிறகு தான் அது வெள்ளை பன்றி என்று சுதாரித்துக்கொண்டு , அவன் சொன்ன வார்த்தையை கொஞ்சம் மாற்றி , நடு விரலை காட்டி U அம்மா F என்ற வார்த்தையை சொன்னேன் .

அவன் கடுப்பாகி இறங்கினான் நானும் என் நண்பரும் அவனிடம் சென்றோம் ,, பன்னாடை புல்லா குடித்திருந்தான் , அது மட்டும் இல்லாமல் சைடு பிட்டிங் வேறு .

அடிடா சக்க எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது ...ஐயொ மக்களே நீங்க தப்ப நினைக்க வேண்டாம் , இங்கு அப்படி இருந்தால் நான் போலீஸ் யில் கம்ப்ளைன்ட் பண்ணினால் அவன் வசமாக மட்டிக்கொள்வான் , அதனால் நானும் எகிறினேன் .சிறிது நேரத்தில் அவன் நண்பர்கள் வந்து எங்களிடம் மனிப்பு கேட்டு . அவனை விட்டுவிடுமாறு கேட்டுக்கொண்டர்கள் . நாங்களும் போன போகிறது என்று சொல்லி விட்டு விட்டோம் .


இதில் பாருங்க நானும் ஆங்கில படம் பார்க்கும் பொழுது எல்லாம் அதில் வரும் வார்த்தைகளை மனப்பாடம் செய்து வைத்து இருந்தேன் ஆனால் பாருங்கள் அவனை திட்டும் பொழுது எனக்கு பாதி வார்த்தை மறந்து போய்விட்டது . ஏன் என்றால் ஆங்கிலத்தில் திட்டுவதற்கு என்றைக்காவுது ஒரு நாள் தான் இந்த மாதிரி கிடைப்பார்கள் அதையும் நழுவ விட்டு விட்டால் .. என்ன பண்ணுவது . நேற்று ஒரு படம் பார்த்தேன் அதில் ஹீரோ ஒருவனை , வித்தியாசமாக திட்டினான் . அடுத்த முறை எவனாவுது கிடைத்தால் அவனுக்கு அந்த வார்த்தை தான் :)

Tuesday, November 4, 2008

பிளாக்கர் பொலிடிக்ஸ் ..


நேற்று சும்மா வெட்டியாக இருந்தேன் பல பிளாக்கிற்கு சென்றேன் .ஒரு பிளாக்கிற்கு சென்ற பொழுது .. அட ஒரே அடி தடி தான், நம்ப அரசியல் வாதிகள் மாதிரி எல்லாம் அறிக்கை போர்கள் பல நடக்குது , இவரு ஒருத்தரை பற்றி எதாவுது எழுதி வைக்க இவருக்கு ஒரு கோஸ்டி , அமாம் சாமி போட ..இவரால் அடி வாங்கினவரு சும்மா இருப்பாரா அவடோட பிளாக்கிளே இவர திட்ட அவருக்கும் ஒரு கோஸ்டி சேர்ந்து விடுகிறது

பிளாக்கிற்கு எப்பாவது வருபவர்களுக்கு எதுவும் புரியாது ஏன் என்றால் . கிசு கிசு எழுவது போல் பல விடு கதைகள் சொல்லி அவரு தான் இவரு தான் என்று சொல்கிறார்கள் அது இவரு தான் என்று கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது . இதில் யாரு இவரு அவரு என்று குழம்ப வேண்டாம் . நான் யாரையும் குறிப்பிடவில்லை

ஒரு பிரபல எழுத்தாளர் இருக்கிறார் , அவர் ஒரு தடவை அவருடைய இணைய தளத்தில் பிளாக்கர்ஸ் பற்றி கொஞ்சம் காட்டமாக விமர்சனம் செய்து இருந்தார் . அதற்க்கு பல கண்டன பதிவுகள் பலர் எழுதினார்கள் . ஆனால் இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் அவர் சொன்னது தவறு இல்லை என்று எனக்கு தோன்றுகிறது .

நண்பர்களே முதலில் நீங்கள் பெரிய எழுத்தாளர் என்று நீங்களே நினைத்தால் , விமர்சனங்களையும் ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் உங்களுக்கு வர வேண்டும் அந்த விமர்சனத்திற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் அதை மற்றவர்கள் மனம் புண் படாமல் தெரிவிக்க கற்றுக்கொள்ளுங்கள்

கண்ணுகளா இதை படித்து விட்டு இங்கு வந்து கும்மியெல்லாம் அடிக்கப்பிடாது சொல்லிப்புட்டேன் ..:) :)

அபுதாபியில் இந்திய திரைப்பட விழா

இங்கு அபுதாபியில் இந்திய திரைப்பட விழா நடந்து கொண்டு இருக்கிறது . அதற்கு செல்லலாம் என்றால் ,ஆபீஸ் வந்து ஆப்பு வைத்து விட்டது . ஆபீஸ்யில் லீவ் போடலாம் என்றால் என் மேனேஜர் என் தில்லாலங்கடி எல்லாம் தெரிந்தவர் அதனால் மாட்டிக்கொள்வேன் , இந்த வார இருதியில் தான் செல்ல வேண்டும் . இன்று தமிழ் படம் போட போகிறார்கள் அதுவும் பருத்திவீரன்.

Saturday, November 1, 2008

ஏகன்



ஏகன்


மே ஹூ நா என்ற ஹிந்தி படத்தின் காப்பி தான் ,, ஆனால் அட்டர் காப்பி இல்லை என்று சொல்வதற்காக , படத்தை சொதப்பி இருக்கிறார்கள் ,

அஜித்



ஸ்மார்ட் , ஸ்டைல் டான்ஸ் எல்லாம் ஓகே ஆனால் படத்தில் அங்கங்கே சொதப்பல் .அது அஜித்தின் தவறு கிடையாது , ஆனால் கதை தேர்வு செய்யும் பொழுது தல கொஞ்சம் கவனம் தேவை .. அவன் அவன் ஒரு படம் ஓடிவிட்டால் புதுமுக டைரக்டர்க்கு சான்ஸ் கொடுக்க தயங்கும் பொழுது நீங்கள் மட்டும் தயங்காமல் சான்ஸ் கொடுப்பது அருமை தான் ஆனால் அவர்கள் சொதப்பினால் சேதாரம் உங்களுக்கு தான் அதிகம் .பார்த்துக்கொள்ளுங்கள் ,இன்னமும் பில்லா body language யில் இருந்து வரவில்லை


நயன்தாரா

படம் கொஞ்சம் லோ பட்ஜெட் படம் போல் தெரிகிறது .ஏன் என்றால் நயன்தாராவுக்கு அப்படி ஒரு துணி தட்டுப்பாடு இவருக்கு ஒரு இரண்டு மீட்டர் துணி எக்ஸ்ட்ரா எடுத்து கொடுத்து இருக்கலாம் .இவளவு செக்ஸ்சியாக ஒரு டீச்சர் தமிழ் படத்தில் இது வரை நான் பார்த்தது இல்லை .

மைனஸ்

கிளைமாக்ஸ்
மொக்கை தனமாக போலீஸ் ஐ காட்டுவது
ஜெயராமின் மொக்கை காமடிகள்

பிளஸ்
தல அஜித்
தல அஜித்
தல அஜித்
செக்ஸ் பாம் நயன்தாரா


ராஜு சுந்தரம் ஐயா சாமி நீங்க டான்ஸ் மட்டும் பார்த்துக்கொள்ளலாம் , அப்படியும் முடியவில்லை என்றால் ஒழுங்காக காப்பி அடியுங்கள் ,கணக்கு பரீட்சையில் பார்முலா மற்றும் ஸ்டெப்ஸ்யை விட்டு விட்டு பிட்டு அடிப்பது போல் இருக்கு உங்கள் கதை .. ஐயா கணக்கு பரீட்சை என்றால் ஸ்டெப் மார்க்கும் இருக்கு மறந்து விடாதிங்க . அதனால் சரியாக காப்பி அடியுங்கள் வரும் காலத்தில் .

Tuesday, October 28, 2008

பிச்சை எடுக்கும் அமெரிக்கா

இன்று காலை என்னால் தூங்க முடியவில்லை . ஐயா ஷேக் சாமி பிச்சை போடுங்க ஷேக் சாமி என்று அமெரிக்கர்களின் சத்தம் வலைகுடா எங்கும் கேட்டது . பேப்பரை பார்த்த பொழுது . அடி சக்க சந்தோஷமாக இருந்தது ஏன் என்றால் அமெரிக்கா வளைகுடா நாட்டிடம் பிச்சை கேட்டுள்ளது , இதற்கு ஒவ் ஒருத்தனும் எவளவு பிச்சை போட்டார்கள் தெரியுமா


saudi arabia - 2896

kuwait - 2136

uae - 8756

qatar - 506

oman -26

[எல்லாம் பில்லியன் டாலர்ஸ் ]இது தான் ஆசியாவின் பொற்காலம் இப்பொழுது முழித்துக்கொண்டால் தான் உண்டு . இல்லை என்றால் , இன்னமும் வரும் காலத்தில் நாம் அவர்களை சார்ந்து தான் இருக்க வேண்டும் . இங்கு UAE யில் டாலர் மதிப்பு எவளவு இருந்தாலும் இங்கு மட்டும் 1 Dollar = 3.65 AED தான் , இது UAE க்கும் அமெரிக்காவிற்கும் உள்ள ஒப்பந்தம் .


இங்கு ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் சதாம் உசேன்யை ஏன் அமெரிக்கா கொன்றது , இன்று ஏன் ஈரான் பக்கம் அதன் கவனத்தை திருப்புகிறது ,, ஏன் என்றால் இவர்கள் எண்ணை வர்த்தகத்தை euro விற்கு மாற்றினார்கள் அது தான் முக்கிய காரணம் , ஈரானில் kish என்ற ஒரு இடம் உண்டு இங்கு தான் euro வர்த்தகத்திர்காக ஒரு மிக பெரிய அலுவலகத்தை தொடங்கி இருக்கிறது ஈரான். இது தான் அமெரிக்காவின் எரிச்சலுக்கு காரணம் .


இன்னோரு உண்மையும் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே . ஒரு நாட்டின் பணவீக்கம் அதன் தங்கத்தின் கை இருப்பை பொருத்து தான் என்பது அனைவருக்கும் தெரியும் , இன்று நம்ப ஊரில் ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா , தங்கத்தை வெளிட்டுள்ளது இந்த சூழ்நிலையை சமாளிக்க , ஆனால் அமெரிக்கா வில் இருப்பது எல்லாம் பேப்பர் கோல்ட் அதாவுது டாலர் தான் அது தான் இந்த பிரச்சனைக்கே காரணம்


என்னங்க பண்றது இங்கு இருக்கும் மக்களிடம் ஒற்றுமை இல்லை , அப்படி இருந்தால் . இந்த நுற்றாண்டு நாம் கைகளில்

தீபாவளி

இதை சனி கிழமை இரவே எழுதிவிட்டேன் ஆனால் பதிவிட மறந்து விட்டேன்

மக்களே நேற்று முதல் தீபாவளி விடுமுறை என்று கேள்விப்பட்டேன் எலோருக்கும் என் வாழ்த்துக்கள் . official யாகவும் unofficial யாகவும் தலை தீபாவளி கொண்டாடும் நண்பர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் .

புது மாப்பிளைகளா [official] இது தான் சான்ஸ் இந்த தீபாவளிக்கு கிடைக்கும் மரியாதை அடுத்த தீபாவளிக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது ஆகையால் உங்கள் சீன் எல்லாம் இந்த தீபாவளியோடு முடித்துக்கொள்ளுங்கள் .

ஓல்ட் அங்கிள் . அடி வாங்கி அடி வாங்கி உங்களுக்கு பழக்கம் ஆகியிருக்கும் அதனால் உங்களுக்கு நிறைய சொல்ல வேண்டியது இல்லை .இருந்தாலும் நம்ப வடிவேலு மாதிரி சூனா பாணா maintain பண்ணுங்க .

என்னுடைய தீபாவளி , நாளை அல்லது நாளை மறுநாள் இங்க எதாவுது ஒரு புது படம் ரிலீஸ் ஆகும் அதை போய் பார்த்துட்டு .. சங்கீதாவோ அல்லது செட்டினாட்டிலோ போய் சாப்பிட்டால் முடிந்துவிடும் .இப்படி எழுதினேன் ஆனால் என்ன நடந்தது , காலையில் ஜத்தார் [இது ஒரு அரபிக் ரொட்டி ] சாப்பிட்டு விட்டு office க்கு ஓடினேன் அப்படியே போய் விட்டது இரவு வரை , ஆனால் வீட்டில் கேட்டவர்களிடம் பொங்கலும் வடை பலகாரம் தின்னதாக ஒரு கதை விட்டு வைத்தேன் , இரவில் வீட்டில் ஒரு நண்பர் பொங்கலும் உளுந்து வடையும் செய்தார் , நன்றாக இருந்தது . இப்படி தான் என் தீபாவளி .

ஒரு பிளாஷ் back .

பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது தீபாவளிக்கு ஒரு 20 நாள் முன்பாகவே அதன் பற்றிய பேச்சு பள்ளிக்கூடத்தில் துவங்கிவிடும் , புது டிரஸ் , பட்டாசு மற்றும் நம் பள்ளி எத்தனை நாள் விடுமுறை விடுவார்கள் .. பக்கத்து பள்ளிக்கு எத்தனை நாள் விடுமுறை என்ற பல விவாதங்கள் தொடங்கிவிடும் .. வகுப்பறை கரும் பலகையில் தீபாவளி countdown வேறு

தீபாவளிக்கு ஒரு நாள் முன்பே நாங்கள் எங்கள் அம்மாயி [அம்மாவோட அம்மா ] வீட்டிற்கு செல்வோம் காலை ஒரு 5 மணிக்கு எழுந்திரித்து குளித்துவிட்டு கோவிலுக்கு செல்வோம் . இந்த நேரத்தில் மனம் எல்லாம் வீட்டில் இருக்கும் பட்டாசு மேல் தான் இருக்கும் ஆனால் கோவிலுக்கு சென்று வந்த பிறகு தான் வெடிக்க முடியும்..

அதைவிட தீபாவளி முடிந்து அடுத்த நாள் பள்ளிக்கு தீபாவளி டிரஸ்யில் செல்லலாம் . அன்று ஒரு பாடமும் நடக்காது .. வரும் ஆசிரியர்கள் எல்லாம் "Tell about your Diwali experience ?" என்று கேள்வி கேட்பார்கள் ... ஒரு சில பேர் Essay எழுத சொல்வார்கள் Essay யின் தலைப்பு "My Diwali " . அட கொடுமையே இதுக்கு பாடமே எடுக்கலாம் என்று எனக்கு தோன்றும். இப்படி இருந்தது ஒரு கலாம் .பிறகு ..

கல்லூரி காலத்தில் ஏனோ தானோ என்று எழுந்திரிச்சு குளித்துவிட்டு .. கோவிலுக்கு செல்லவேண்டும் அதன் பிறகு நல்ல சாப்பாடு. பிறகு என்ன தொலைக்காட்சியில் / தொல்லைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி இப்படி கழிந்தது ஒரு கலாம் ..

ஆனால் இப்பொழுது ஈமெயில் "Happy Diwali " என்று அனுப்பிவிட்டு வேலையை பார்க்க போய் விடுகிறேன் .. உங்கள் அனைவருக்கும் "Happy Diwali "

Friday, October 24, 2008

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

நேற்று என் துறை தலைவரை பார்த்தேன் .. ஒரு 8 வருடத்திற்கு பிறகு .எனக்கு 1997 யில் இருந்து அவரை தெரியும் .. 2000 த்தில் நான் கல்லூரி [polytechnic ] முடித்த பொழுது .. எங்கள் கல்லூரி கடைசி நாள் அன்று அவரும் துறை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் .. அப்பொது அவரிடம் நாங்கள் கேட்ட பொழுது அவர் அதற்காண காரணத்தை சொல்லவில்லை .. சொந்த காரணம் என்று நினைத்துக்கொண்டோம் ...அதன் பிறகு 2003 வருடம் அவருடைய இன்னொரு நண்பர் மூலம் அவர் சிங்கப்பூரில் இருப்பதாக தெரிந்து கொண்டேன் அவருடைய ஈமெயில் முகவரியை வாங்கி .. மெயில் அனுப்பினேன் ஒரு மாதம் கழித்து ஒரு பதில் வந்தது .. அதன் பிறகு அவப்பொழுது அவரும் அழைத்தார்.. ஆனால் சந்தித்துக்கொண்டது இல்லை .. அதன் பிறகு 2005 சிங்கப்பூரில் இருந்து Australia சென்று விட்டதாக ஒரு நாள் அழைத்தார் .. நேற்று தான் அவரை துபாயில் சந்தித்தேன் ஒரு நாள் துபாயில் transit அவருக்கு . நேற்று முழுவதும் அவருடன் இருந்தேன் .. அன்று கண்டிப்பாண ஆசிரியர் இன்று ஒரு நல்ல நண்பர் என்று சொல்லாம் ..

துபாயில் இருப்பது ஒரு வசதி என் நிறைய நண்பர்களை இங்கு தான் transit யில் பார்ப்பேன் . நண்பர்கிளிடம் பேசுவதற்கு நிறைய இருக்கும் .. ஆனால் எதை பேசினாலும் கடைசியில் பேச்சு கல்லூரி வாழ்க்கையில் வந்து தான் நிற்கும் .. ஓவ் ஒருத்தனுடைய பட்டப்பெயரை சொல்லி அவன் எங்கு இருக்கான் இவன் எங்கு இருக்கான் என்று பேச்சு தொடரும் ..

பிறகு திருமணம் ஆகாதவனாக இருந்தால் கல்லூரி தோழிகள் பற்றி அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கேட்பது உண்டு ,[ ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று ஒரு பாட்டு ஓடிக்கொண்டே இருக்கும் ] . பல உள்விவகாரம் இருக்கும் பிறகு ஒரு enquiry போட்டால் சொல்வார்கள் . பாவி மக்கா காலேஜ்யில் படிக்கும் பொழுது அதை பத்தி மூச்சே விட்டிருக்க மட்டார்கள்

அதைவிட முக்கியமானது நண்பர்களில் பலருக்கு திருமணம் ஆகிவிட்டது .. அவர்களின் திருமணம் வாழ்க்கை .. அவன் குழந்தைகளை பற்றி பேசுவது .. அது ஒரு சொல்ல முடியாத அனுபமாக இருக்கும் .. இதை எல்லாம் பேசி முடிப்பதற்குள் நேரம் ஆகிவிடும் அவர்களும் கிளம்பி விடுவார்கள் .. ஒரு 10 மணி நேரத்தில் பத்து வருட கதை பேசுவோம் . பிறகு அவர்களை வழி அனுப்பிவிட்டு நான் ஒரு இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் .கல்லூரி நினைவுகளில் அந்த இரண்டு மணி நேரம் கரையும் .....

Tuesday, October 21, 2008

பொருளாதார புயலில் இருந்து தப்பிக்குமா வளைகுடா

துபாய் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று .. இங்கு இருக்கும் தொழில் முறை circular flow எனலாம் ..முதலில் எண்ணையை கண்டு பிடித்தான் வெள்ளைக்காரன் . எண்ணை கிணத்தில் [Oil and chemical industry ] வேலை செய்ய வெளிநாட்டில் இருந்து ஆட்கள் வந்தார்கள் .. அவர்கள் தங்குவதர்காக வீடுகள் கட்டப்பட்டன [Real Estate industry ] இதனை நம்பி கட்டுமான துறை வளர்ந்தது [construction industry ] , இந்த மூன்று துறைகளையும் வளர்க்க உள் கட்டமைப்பு தானாக வளர்ந்தது [infrastructure industry]. இந்த நான்கையும் சுற்றி தான் இதர துறைகள் என்று இருந்தது 2000 வரை . இதில் எங்கு அடிவாங்கினாலும் அது மற்ற துறைகளையும் பாதிக்கும்

2000 த்திற்கு பிறகு .. துபாயை ஒரு வர்த்தக நகரமாக[Retail] மாற்ற நினைத்தார் துபாயின் மன்னர் .. அதன் விளைவு தான் துபாயின் இந்த அசுர வளர்ச்சி .. அதுவும் முக்கியமாக துறைமுகங்களும் , கட்டுமான துறை .

அதன் விளைவு .. வெள்ளையர்கள் இங்கு நிறைய முதலிடு செய்தார்கள் அதுவும் முக்கியமாக Real estate துறையில் . இன்று உலகையே ஆடவைத்திருக்கும் இந்த பொருளாதார புயல் துபாயையும் விட்டுவைக்க வில்லை .. அவர்கள் ஊரில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக இங்கு இருந்த முதலிடுகளை வெளியே எடுக்க தொடங்கிவிட்டார்கள் சில கம்பனிகள் .


சில கம்பனிகள் முதலிடுகளை தர்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டார்கள் அதன் விளைவு . Real Estate துறையில் பெரும் விழ்ச்சி .. துபாய் பங்கு சந்தியில் சென்ற வாரத்தில் மட்டும் ஒரே நாளில் 230 பில்லியன் டிர்தம்ஸ் நிஷ்டம் .அமெரிக்காவில் மூடப்பட்ட பல நிதி நிறுவங்களில் முதலிடு செய்தது எங்கு இருக்கும் ஷேக்குகள் தான் அதிகம் .

சென்ற மாத துவக்கத்தில் ஒரு டிர்தம்ஸ் 11.35 ரூபாய் யாக இருந்தது ஆனால் இன்று நாம் பணத்தில் மதிப்பு குறைந்து 13.15 யாக இருக்கிறது இது நம் நாட்டில் வீசும் பொருளாதார புயலும் தான் காரணம் . இண்ணமும் வரும் காலத்தில் அதன் மதிப்பு 15 யை தொட்டாலும் தொட்டுவிடும் என்று கூரப்படுகிறது .இது இங்கு வேலை செய்யும் NRI களுக்கு சந்தோஷமான விசையம் தான் . ஆனால் முதலிடு செய்தவர்களுக்கு இது ஒரு சொதனைக்காலம் தான் . இந்த பதிவை நான் ஏன் போட்டேன் என்றால் இன்று காலை பேப்பரை பார்த்தால் .. கூகிள் , யாஹூ மற்றும் ebay யில் layoff என்ற தகவல் ,இன்று இருக்கும் சூழ்நிலையில் வளைகுடா ஒரு பாதுகாப்பான இடம் தான் .. பார்ப்போம் வரும் கலாம் எப்படி இருக்கும் என்று. ஆனால் ஒரு நல்ல விசையம் என்ன வென்றால் மற்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது இங்கு layoff குரைவு தான் . அதற்க்கு முக்கிய காரணம் இன்னமும் ஒரு 50 வருடத்திற்கு இங்கு எண்ணை இருக்குமாம். அது ஒரு நிம்மதி பெருமூச்சு ...

Tuesday, October 14, 2008

சாப்ட்வேர் இஞ்சினியர்களுக்கு சில டிப்ஸ்

இது நம்ப வெட்டிப்பயல் அவர்களின் பதிவிற்கு சில add-ons
  • உசார் உசார் ஐயா உசார் FAKE போட்டவங்கெல்லாம் உசார்
  • APRISEL சரி இல்லை என்று ஓவர் சீன் போட வேண்டாம் ..அந்த OFFER இருக்கு இந்த OFFER இருக்கு என்றால் .. சரி தம்பி டாட்டா பாய் பாய் என்று சொல்ல வாய்ப்புக்கள் அதிகம் .
  • கரெக்ட் டைம்க்கு ஆபீஸ் போங்க ..
  • கொஞ்சம் வொர்க் பண்ற மாதிரி சீன் CREATE பண்ணுங்க .... ஆனால் உசார் .. சீன் CREATE பண்றோமேன்னு தெரியக்கூடாது..
  • ஆபீஸ்லே இருக்க கூடிய மொக்க தனமான ரூல்ஸ் எல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ளுங்க , அப்படியே follow பண்ற மாதிரி ஒரு சீன் ...
  • ஷேர் யில் கொஞ்சம் சில்லரை பார்த்துக்கொண்டு இருந்த நண்பர்களே .. உங்களுக்கு இது கெட்ட காலம் ..ஆகையால் .. முதலிட்டை குறைக்கவும் .
  • week end பார்ட்டியை குறைக்கவும் . அப்படியும் முடியா விட்டால் பார்ட்டியை ரூம்லே வைத்துக்கொள்ளவும் வெளியே ஹோட்டலுக்கு செல்லவேண்டாம் ..
  • நம்ப வெட்டி officer சொன்ன மாதிரி .. "வரவு எட்டணா, செலவு பத்தனா " பாட்டை தினம் தினம் கேட்கவும் .
  • ஏற்கனவே சாப்ட்வேர் இன்சினியர் றால் தான் எல்லா விலையும் எகிறி போய்டுச்சுன்னு மக்கள் மத்தியில் பெரும் அவப்பெயர் இருக்கு .. முடிந்த அளவு அது வளராமல் பார்த்துக்கொள்ளவும்
  • இந்த பிரச்சனை அமெரிக்காவில் Election முடியும் வரை இப்படி தான் இருக்கும் . அதுவும் அங்கு எவன் ஆட்சிக்கு வருகிறானோ அதை பொருத்து தான் .. இந்த பிரச்சனை கொஞ்சம் Stablish ஆகும்

அப்புறம் என்னங்க சொல்ல போறேன் .. எப்பவும் உங்கள் ஆதரவும் நட்பும் தான் ..

Saturday, October 11, 2008

அருமையான வீடியோ

மிக அருமையான வீடியோ .. நமது போலீஸ் காரர்கள் பார்க்க வேண்டியது .. அடுத்த சுகந்திர தினம் அல்லது குடியரசு தினத்திற்கு பண்ணலாம் ..:) எவளவு காலம் தான் தீக்குள் தாண்டுவது , வயிறு மேல் பைக் ஏற்றுவது.


Sunday, September 28, 2008

FAKE EXPERIENCE போடுபவர்கள் எல்லாம் கோட்சேவும் இல்லை போடாதவர்கள் எல்லாம் காந்தியும் இல்லை

சென்ற வாரத்தில் என் நண்பர் ஒருவருக்கு வேலை போய்விட்டது , அவர் இதற்கும் அந்த கம்பனியில் கடந்த இரண்டு வருடமாக வேலை செய்கிறார் , அவர் செய்த ஒரு தவறு ஒரு மாதம் தனது experience யை சேத்தி போட்டது . இந்த சம்பவம் என்னை மிகவும் யேசிக்க செய்தது ..


எதற்காக தூக்கினார்கள் fake போட்ட காரணத்தால இல்லை ஒழுங்காக வேலை செய்யாத காரணத்தால ,அவர் வேலை செய்யவில்லை என்று அவர்களால் சொல்ல முடியாது ஏன் என்றால் இரண்டு வருடம் அவர் அங்கு தான் வேலை செய்கிறார் ,நன்றாக வேலை செய்யாவிட்டால் என்றோ தூக்கியிருப்பார்கள். அப்படி என்றால் அந்த ஒரு மாதம் fake போட்டது தான் காரணமா என்றால்..

ஆமாம் ..


பொய் சொல்வது தவறு என்றால் , முதலில் நீங்கள் சேய்வது எல்லாம் சரியா . மாத சம்பளம் 20000 ஆயிரம் 25000 ஆயிரம் என்று கொடுக்கும் நீங்கள் பண்ணும் billing சமாச்சாரம் எல்லாம் உங்கள் உழியர்க்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்று யோசித்து பாருங்கள்


இதற்கு fake போட்டுபவர்கள் எல்லாம் சுலபமாக வேலை வாங்கிவிடுவதாக நினைத்து விட வேண்டாம் , அவர்களும் பல கட்ட invterview யை கடந்து தான் அந்த வேலைக்கு வருகிறார்கள் , இல்லாத ஒன்றை இருப்பது போல் பேசுவது தான் மிகவும் கடினம் . இதில் பொய் சொல்வதை விட சொன்ன பொய்யை maintain பண்ணுவது மிக கொடுமை :) .


ஆகையால் நண்பர்களே Fake போடுவது சுலபம் இல்லை, original experience இருகிறவன் செய்வதை விட fake போட்டவன் அதிக வேலை செய்வான், அதுவும் மிக திறமையாக . இது தான் உண்மை ஏன் என்றால் . அவனுக்கு அந்த வேலையின் மதிப்பு நன்றாக தெரியும் , அந்த மதிப்பு தான் ஒரு software engineer என்று சொல்லிகொள்வது அல்ல, . ஏங்கே நாம் தெரியவில்லை என்று சொன்னால் தன்னை fake என்று கண்டு பிடித்துவிடுவர்காலோ என்ற பயம் என்றும் அவனுக்கு இருக்கும் . அது தான் அவனை மேலும் மேலும் படிக்க தூண்டும் ..


எத்தனை வருடம் என்று பார்காமல் வேலை இல்லாதவர்களை எல்லாம் fresher யாக எடுத்துக்கொண்டால் பிரச்சனை இல்லை ..
[தப்பு செய்பவனை விட தப்பு செய்ய தூண்டுபவனுக்கு தான் தண்டனை அதிகம் தர வேண்டும் அப்படி என்றால் software கம்பனிக்கு தான் தண்டனை அதிகம் ]


இந்த கொடுமை எல்லாம் software துறையில் மட்டும் தான் . fake யை பற்றி இவளவு பேசும் company கள் எல்லாம் ப்ராஜெக்ட் வாங்க என்ன செய்கிறது , fresher யை கூட இரண்டு வருடம் மூன்று வருடம் experience போட்டு client யிடம் காட்டித்தான் bill பனுவார்கள் , கம்பெனி செய்தால் அது management technique அதே ஒரு தனி நபர் செய்தால் அது தப்பு ...இது எந்த விதத்தில் ஞாயம் .


நானும் ஒரு கம்பெனி யில் interview panel லில் இருந்திருக்கிறேன் . பல original experience இருக்கும் நபர்களையும் interview செய்திருக்கிறேன் , fake experience இருப்பவர்களையும் interview செய்திருக்கிறேன்.. fake experience இருப்பவர்களை சுலபமாக கண்டுபிடித்து விடலாம் .. இதில் என்ன வேடிக்கை என்றால் original experience இருப்பவர்களை விட fake experience இருப்பவர்கள் நன்றாக பதில் அளிப்பார்கள், பல சமையம் அவர்கள் fake என்று தெரிந்தே எடுப்பேன் , எதற்காக தெரியுமா அவர்கள் அடிப்படை டெக்னாலஜியில் மிகவும் தெளிவாகவும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள் , அவர்களுக்கு இருக்கும் ஒரே குறைபாடு lack of domain knowledge , அது அவர்கள் வேலை செய்தால் மட்டும் தான் வரும் , அதுவும் வேலைக்கு வந்தவுடன் சுலபமாக கற்றுக்கொள்வார்கள் .



fake போட்டவர்களை எடுப்பது தவறு தான் ஆனால் அதற்காக நான் ஒரு பொது வருத்தப்பட்டது இல்லை ஏன் என்றால் , client க்கு தேவையான வேலையை தரமாக டெலிவரி செய்ய வேண்டிய நேரத்தில் செய்துவிடுவேன் . அது தானே கம்பனிக்கு வேண்டும் ,நான் பணி செய்தது சாதரண ஒரு இந்தியன் கம்பெனி


இதில் என்னொரு வேடிக்கையை சொல்கிறேன் . இப்பொழுது பல கம்பனியில் மேனேஜர் பதவியில் இருக்கும் பலர் y2k பிரச்சனை தலை தூக்கிய பொழுது இந்த துறைக்கு வந்தார்கள் , அதுவும் குறிப்பாக 1996 முதல் 2000 வரையில் யான காலக்கட்டத்தில் .. அப்பொழுது அவர்கள் என்ன செய்தார்கள் mainframe படித்துவிட்டு ஒரு fake experiance போட்டுக்கொண்டு அவர்கள் எல்லாம் அமெரிக்கா சென்றார்கள் . அப்பொழுது சுழ்நிலை அப்படி இருந்தது , பிறகு என்ன 2000 த்திர்க்கு பிறகு அவர்கள் எல்லாம் துரத்தி அடிக்கப்பட்டார்கள் அது வேற கதை .. அந்த மாதிரி மேனேஜர் எல்லாம் இப்பொழுது காந்தி மாதிரி பேசுகிறார்கள் . என்ன கொடுமைங்க இது

இவர்களின் மனைவிமார்கள் சிலர் திருமணத்தின் பொழுது வேலை இல்லாமல் இருப்பார்கள் அதன் பிறகு எதாவுது ஒரு கோர்ஸ் படிப்பது அதன் பிறகு தங்கள் கணவரின் நண்பர்கள் வேலை செய்யும் எதாவுது ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிடுவார்கள் , கேட்டால் இவர்கள் தான் work ethic , loyalty என்று பினத்துவர்கள் அட போங்க ஐயா ,,


இந்த மேனேஜர் தான் இப்படி என்றால் இந்த HR பத்தி சொல்கிறேன் கேளுங்கள் ,, தங்களுக்கு தெரிந்தவன் என்றால் தங்கள் நண்பர்கள் இருக்கும் panel க்கு அனுப்புவது , அந்த panel லில் இருப்பவர்க்கும் இவருக்கும் ஒரு under ground understanding போகும் , பிறகு என்ன அந்த நண்பர் CV forward செய்தல் சுலபமாக வேலை நடக்கும் , இந்த மாதிரி HR தான் என்று பல verification நடத்துகிறார்கள் .. முதலில் இவர்களை verification செய்ய வேண்டும்


இப்படி எல்லாம் இருக்கும் சூல்நிலையில் entry level employee மட்டும் என்ன பாவம் செய்தார்கள் இது எப்படி இருக்கிறது தெரியுமா , கோடி கோடியாய் ஊழல் பண்ணும் அரசியல் வாதியை விட்டு விட்டு , இந்த ஜட்டி திருடினவன் , கோழி முட்டை திருடினவன் பிடிக்கும் நம் போலீஸ் மாதிரி இருக்கு உங்கள் வெளக்கெண்ணை பாலிசி


இதற்காக fake போடுவது எல்லாம் சரி என்று நான் சொல்லவில்லை ஆனால் இந்த தவறுக்கான முடிவு கம்பனிகள் கையில் தான் இருக்கிறது .படித்து முடித்து ஒரு வருடம் ஆனா காரணத்தால் நீங்கள் எல்லாம் fresher இல்லை உங்களுக்கு வேலையும் இல்லை, என்ற காரணத்தால் தான் அவர்கள் fake போடும் சூழலுக்கு தள்ளபடுகிறார்கள் , ஆகையால் நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது கம்பெனிகளின் கையில் தான் இருக்கிறது . இல்லை என்றால் fake போடுபவர்களை உங்களால் என்றும் தடுக்க முடியாது . "இவளவு பேசும் நானும் காந்தியும் இல்லை கோட்சேவும் இல்லை "

Saturday, September 27, 2008

சும்மா சும்மா ஒரு மொக்கை

இந்த வார செவ்வாய் கிழமையோடு ரம்ஜான் நோம்பு முடிகிறது , செவ்வாய் கிழமை என்று உறிதியாக சொல்ல முடியாது புதன் கிழமை கூட வரலாம் .. ஆனால் எப்படி இருந்தாலும் ஒரு நாலு நாள் விடுமுறை வரும் . இந்த நாட்டில் அதிக நாள் விடுமுறை வருவது இப்பொழுதுதான் வேறு எந்த விடுமுறையும் இல்லை .

கடந்த 25 நாளாக தினமும் மத்தியம் விடுமுறை ரம்ஜான் முடிந்து விட்டால் இந்த leave க்கு ஆப்பு தான் . இந்த நான்கு நாள் விடுமுறையில் எங்கவுது செல்லலாம் என்று பல பிளான் போட்டு இருக்கிறோம் , பார்ப்போம் இது வோர்கௌட் ஆகுமா இல்லை flop ஆகுமா என்று

ஒரு உபயோகமான வேலை ஒன்றும் இல்லை அதனால் தான் இன்று இத்தனை பதிவுகள் .எதாவுது படிக்கலாம் என்று புத்தகத்தை திறந்தால் .. தாரே ஜாமீன் பார்ரில் அந்த சிறுவன் சொல்வதை போல் Words are dancing mam தான் .. செரி அதனால் தான் எதாவுது மொக்கை தனமாக எழுதலாம் என்று இந்த பதிவு ..

அப்புறம் என்ன .. ..

முந்தாநேத்து ராமன் தேடிய சீதை பார்த்தேன் .. ரொம்ப நல்ல படம் .. பசுபதியின் நடிப்பு அருமை .. சேரன் எப்பொழுதும் போல் செண்டிமென்டை புளிந்து எடுத்திருக்கார் , கடைசியில் சேரன் ஒரு கட்சியில் செண்டிமென்டை புளிய அது மிக பெரிய காமடி ஆகிவிட்டது , ஆனால் மொத்தத்தில் நல்ல படம்

அப்புறம் வேறு ஒன்றும் இல்லை அடுத்த பதிவில் பார்ப்போம்

Wednesday, September 17, 2008

சரோஜா

முந்தாநேத்து இரவு எங்கள் ரூமிற்கு ஒரு புது நபர் வந்தார் ..பார்த்த உடனே அனைவருக்கும் ஒரே பரபரப்பு ... அவன் அவன் ஒரு பேரு வெச்சான் ..மல்லு ரசிகர் மன்றத்தில் இருந்து மீரா என்றும் ,, இன்னொருத்தன் மீனா என்றான் .. செரி நம்ப பங்கிற்கு நாமலும் ஒரு பேரு வைப்போமே என்று .. சரோஜா என்று வைத்தேன்


[ அப்போ தான் சரோஜா படம் பார்த்துக்கொண்டு இருந்தேன் அந்த effect ]..


அதை பார்த்த உடனே ஒருத்தன் .. ஆப்பிள் எடுக்கிறான் .. இன்னொருத்தன் காரட் குடுக்கிறான் ....சிறிது நேரம் அதை சுத்தியே எல்லோரும் உக்காந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம் ..



ஒருத்தன் இது நல்லா பேசும் டா என்றான் இன்னொருத்தன் நல்லா பாடும் என்றான் .. அதுக்குள்ளே தூக்கம் வர ..அதுக்கு ஒரு இடத்தை கொடுத்துட்டு .. அவன் அவன் தூங்க சென்றுவிட்டோம்


காலை 6 மணிக்கு ... கீ கீ னு கத்த தொடங்கிவிட்டது அட நம்ப சரோஜா தாங்க .. என்ன கொடுமை டா இதுன்னு ..




"டேய் அதுக்கு எவனாவுது சாப்பாடு குடுங்கடா என்றால் எவனும் எழுந்திரிக்கவில்லை ..."


அட பாவமே என்று நினைத்துக்கொண்டு காதை அடைத்து கொண்டேன் .. அதுக்குள் ஒரு நல்ல மனுசன் காரட் கொடுத்தாரு


அப்புறம் ஒரு 8 மணிக்கு கிளம்பி .. office க்கு சென்றுவிட்டோம் மத்தியம் வந்து பார்த்த சரோஜாவை காணவில்லை .. எங்கட என்று கேட்டால் .. நண்பர் ஒருத்தர் கேட்டாரு கொடுத்து விட்டேன் என்றார் ..


செரி ஓகே .. என்று சொல்லிவிட்டு .. வேலையை பார்க்க சென்றுவிட்டோம் ..


அட இன்னைக்கு office இருந்து வந்து பார்த்தால் .. மீண்டும் கீ கீ சத்தம் ரூம்லே . என்ன என்று கேட்டால் . நேத்து அவங்க விட்டில் காலை 5 மணிக்கே கீ கீ ஆரம்பமாம் .....

Monday, September 8, 2008

தும் ஹிந்தி மாலும் நகி

ஒவ்வொரு நாளும் நான் நம்ப அரசியால் வாதிகளை திட்டாத நாளே இல்லை

இந்த ஊரில் டாக்ஸி ஏறி ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும , அல்லது கடையில் போய் சோறு திங்க வேண்டும் என்றால் , ஹிந்தி தெரிந்தால் மிக மிக சௌகர்யமாக இருக்கும் .. ஏன் என்றால் இங்கு இருப்பவர்களில் பாதி பேர் , இந்தியா, பாகிஸ்தான் , பங்களாதேஷ் , ஸ்ரீலங்கா, நேபால் தான் , அதனால அவர்கள் அனைவரும் நன்றாக ஹிந்தி பேசுவார்கள்

இங்கு டாக்ஸி டிரைவர் எல்லாம் பாகிஸ்தான் காரர்கள் தான் , நமக்கு ஹிந்தி தெரியாது , அவர்களுக்கு இங்கிலீஷ் தெரியாது , என்ன செய்வது . இது தான் நான் டாக்ஸி ஏறினால் எனக்கும் அவர்களுக்கு நடக்கும் உரையாடல்


நான் : straight go .... 3 signal after left take then சிதா ஜா parking stop .. (Landmark தெரியவில்லை என்றால் இப்படி தான் சொல்வேன்). இதை கேட்ட அவன் கேட்கும் கேள்வி

டிரைவர் : you Srilanka ? (நம்ப கலரு அப்படி)

நான் : No Indian

டிரைவர் : தும் ஹிந்தி மாலும் நகி ?

நான் : நகி நகி

டிரைவர் : why Hindi no ?

நான் : my leader Hindi strike , so no Hindi

டிரைவர் : thummara rastra batsha Hindi , thum malum nagi ?
(டேய் லூசு பயலே உங்க National Language ஹிந்தி டா என்பான் )

நான் : my leader Hindi strike , so no Hindi only Tamil . I மதராசி....

டிரைவர் : pagal !!! (அடே பைத்தியகாரா !!!)

என்னங்க பண்றது , அவன் சொல்றது உண்மை தானே , நம்ப ஊரை விட்டு வெளியே வந்தால் , நமது மக்களை நாய் கூட சீண்டாது, ஹிந்தி படிக்காத விளைவு இங்கு வந்து தான் உணர்கிரேன் , இந்த கெழட்டு கம்னாட்டி கருணாநிதி ஊரை எல்லாம் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு , அவன் பேரண், பேத்திகளை ஹிந்தி படிக்க வைத்து இருக்கான் , பாவி பன்னாடை

எங்க அப்பா அப்பவே சொன்னாரு , நாங்க தான் ஹிந்தி போராட்டம் என்று போய் ஹிந்தி படிக்கலை , நீங்கலாவுது ஒழுங்கா ஹிந்தி படிங்கடா என்று , கேட்டேனா ,,


என்ன பண்றது பட்டால் தானே நமக்கு புத்தி வரும்...

Sunday, September 7, 2008

உன் பார்வையில்

பல வருடங்கள் முன்பு நாங்கள் மூன்று நண்பர்கள் ஈரோடு அபிராமி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு , பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கையெந்தி பவனில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம் அப்பொழுது ஒரு நண்பார் எதுத்த மாதிரி இருந்த ஒரு மிக பெரிய மருந்து கடையை பார்த்து சொன்னான் மச்சி சரியான பிசினஸ் டா ..இங்க atleast ஒரு நாளைக்கு ஐம்பது ஆயிரம் பிசினஸ் நடக்கும் டா என்றான் .....

நானும் ஓஹோ ஓஹோ அப்படியா என்று சொல்லிவிட்டு . omelet உண்பதில் மும்முரமாக இருந்தேன்...

இந்த நாண்பன் சொன்னதை சற்றும் கவனிக்காத இன்னொரு நாண்பன் சொன்னான்

இச்ச மக்களுக்கு எவளவு நோய் பாருடா ..

எவளவு மருந்து இதை அத்தனையும் நாம் தானே சாப்பிடுகிறோம் இச்ச பாவம் டா என்றான் ...

நான் அவனை சற்று வியப்புடன் பார்த்தான் !!

அப்பொழுது தான் "எல்லாமே நீ பார்க்கிற பார்வையில் தான் இருக்கு டா என்று என்றோ ஒரு நாள் யாரோ சொன்னது ஞபகம் வந்தது "

அது உண்மை தான் இப்பவும் பல சூல்நிலையில் எனக்கு இது உதவுகிறது