Showing posts with label சிறு கதை. Show all posts
Showing posts with label சிறு கதை. Show all posts

Friday, November 14, 2008

கேட்டதில் ரசித்தது ராசு -4

சென்ற ராசுவின் பதிவில் சொன்னது போல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து தங்கள் ஊருக்கு சென்றான் .தன் மனைவிக்கு ஆசை ஆசையாக வாங்கி வந்த செண்டு மற்றும் அனைத்து பொருளையும் எடுத்து கொடுத்து அசத்தினான் ..

வெற்றி கொடிகட்டு வடிவேலு மாதிரி ஊருக்குள் சுத்திக்கொண்டு இருந்தான் , அவன் எந்த வீட்டு விசேசத்திற்கு சென்றாலும் ஒரு மனம் அவனை தொடர்வது போல் உணர்ந்தான் .ஆனால் அது என்ன என்று மட்டும் அவனுக்கு தெரியவில்லை ,ஆனால் அது அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட மனமாக இருந்தது .

அப்படி தான் ஒரு நாள் தங்கள் உறவினர் வீட்டு திருமனத்திற்கு செல்ல வேண்டும் என்று கிளம்பிக்கொண்டு இருந்தான் , வழக்கம் போல் அவன் மனைவி அலங்காரம் பண்ணிக்கொண்டு வருவதற்குள் போது போதும் என்று ஆகிவிட்டது

"அடியே என்ன டி பண்ற அங்க .."

"எங்கனா போறதுனா சட்டுப்புட்டுன்னு கெளம்பறது இல்லை .. சிக்கிரம் வா"

"ஏயா கத்தற "

"கெளம்ப வேண்டாமா " என்று சொல்லிக்கொண்டு ஒரு பெரிய செண்டு எடுத்து அடித்துக்கொண்டால்

அதை பார்த்த ரசுவிர்கு பகிர் என்று இருந்தது ..

“அடியே என்ன டி பண்ற !!!!! ……… “

“அதை ஏன் டி எடுத்து அடிக்கிற “..

அவன் கேட்பது அவள் காதில் விழுவதாக தெரியவில்லை மீண்டும் மீண்டும் அடித்துக்கொண்டு இருந்தால் ..

“அடியே உன்னை தான் டி அதை எதுக்கு டி அடிக்கிற அந்த சின்ன பாட்டில் எல்லாம் எங்க , அதை என்ன பண்ணின “

“அந்த சின்ன பாட்டில் எல்லாம் பக்கத்து விட்டு அக்காவுக்கு கொடுத்துட்டேன்”

“அதை ஏன் டி கொடுத்த “

“அந்த அக்கா கேட்டுக்கிடே இருந்தாங்க அது தான் கொடுத்தேன் “

“ஐயோ ..பன்னாடை பன்னாடை “

“ஏயா என்னை திட்டற ..”

“கொடுத்தது தப்பு இல்லை ..ஆனா அதை ஏன் டி கொடுத்த ,”

“ மத்தது எல்லா சின்னதா இருந்தது அது தான் பெருசை எல்லாம் நான் வெச்சிக்கிட்டு , சின்ன பாட்டில் எல்லாம் அவுங்களுக்கு கொடுத்தேன் “

“அது இல்லை டி அது தான் செண்டு இது வீட்டிற்கு அடிக்கிற ரூம் ஸ்ப்ரே இதை friend ஒருத்தன் சும்மா கொடுத்தான் "

“எனக்கு என்ன தெரியும் இது எல்லாம் நீ தான் சொல்லி கொடுக்கணும்..”

இந்த சம்பவத்திர்க்கு பிறகு மனிதர் யார் ஒசியில் எது கொடுத்தாலும் அது அவனுக்கு பயன் படவில்லை என்றால் அதை வாங்க மாட்டான் .

Friday, October 31, 2008

கரை தேடும் கப்பல்- 4

இருகிய முகத்துடன் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்தார் ரஞ்ஜனியின் அப்பா ...

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு . தன் தந்தையின் அருகில் சென்றான் ரஞ்ஜனியின் அண்ணன் .

“அப்பா .. அப்பா “ என்றான்
“.............................”

“அப்பா அப்பா “என்று அவரை உலுக்கினான் ..

இருகிய முகத்துடன் அவனை பார்த்தார் ஆனால் எதுவும் பேசவில்லை ..

.......................... சிறிது நேர மௌனத்திற்கு பிறகு அவன் பேசத்தொடங்கினான் ..

“அப்பா அவ பண்ணினது தப்பு தான் அதுக்காக நீங்க மனசு ஒடஞ்சு போன எப்படிபா என்று அவரை தேற்றினான் “..சிறிது நேரம் இவன் மட்டும் பேசிக்கொண்டு இருந்தான் , நிமிர்ந்து அவரை பார்த்த பொழுது அவனுக்கு அதிர்ச்சி .அவன் அப்பா கண்ணில் கண்ணீர்..

“அப்பா என்ன அப்பா இது . நீங்க போய் அழுதுக்கிட்டு “ என்று சொல்லும் பொழுதே அவன் கண்களிலும் கண்ணீர் .. அதை பார்த்த ரஞ்ஜனியால் அழுகையை அடக்க முடியவில்லை .

“அப்பா “ என்று கத்திக்கொண்டு அவர் மடியில் படுத்துக்கொண்டு அழ தொடங்கினாள் ரஞ்ஜனி ...

தான் கண்ணீரை துடைத்துக்கொண்டு தான் மகனையும் மகளையும் வாரி அணைத்துக்கொண்டு ..

"என்னை மனித்து விடு கண்ணு .. என் புள்ளைகள் சந்தோசத்தை விட எனக்கு என்ன முக்கியம் நானே போய் மாப்பிளை கேட்கறேன் " என்றார் ...

"இல்லை அப்பா வேண்டாம் அப்பா " என்றால் ரஞ்ஜனி

"ஏமா அப்பாவுக்காக வேண்டாமுன்னு சொல்றிய "

"இல்லை அப்பா நிஜமாலுமே வேண்டாம் அப்பா "

"டேய் நான் உங்க அப்பன் என் புள்ளையோட ஒவ் ஒரு அசைவும் எனக்கு தெரியும் "

"அப்பா " என்று அவரை அனைத்து கொண்டார்கள்

சிறிது நேரத்தில் பழனிசாமி மாமா வீட்டிற்கு சென்று வருவதாக ரஞ்ஜனியின் அப்பா சென்றார் . பழனிசாமி மாமா தான் இரு வீட்டிற்கும் பாலமாக இருப்பவர் . இரு தலைகளும் இவர் பேச்சை கேட்பார்கள் . அவ்ளவு மரியாதை ....

பழனிசாமி மாமாவை அழைத்து அவர் எங்கு இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு , அவர் வீட்டிற்கு சென்றார் .ரஞ்ஜனியின் அப்பா . ரஞ்ஜனியின் அப்பா வருவதை பார்த்து வெளியே வந்து அவரை வரவேற்றார்

“வாங்க மாப்பிளை வாங்க வாங்க ..” என்று
உள்ளே அழைத்து சென்று உட்காருங்க மாப்பிளை என்றார்

“அப்புறம் ஊட்டில் பாப்பாத்தி எப்படி இருக்கு , பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க “

“எல்லாம் நல்ல இருக்காங்க ..”

“என்ன சாப்படறீங்க “

“இல்லைங்க ஒண்ணும் வேண்டாம் இப்ப தான் வீட்டில் காப்பி குடிச்சேன் “

“ஏய் சரசு இங்க வந்து பாரு யாரு வந்திருக்காங்கனு”

“வாங்க வாங்க எப்ப வந்திங்க “

“இப்ப தான்”

“நீங்க பேசிக்கிட்டு இருங்க நான் காப்பி எடுத்துக்கிட்டு வரேன் “ என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்

“அப்புறம் சொல்லுங்க என்ன விசயம் “

“அது வந்துங்க …..” என்று இழுத்தார்

“அட சொல்லுங்க என்ன பிரச்சனை “

“பிரச்சனை எல்லாம் ஒண்ணும் இல்லைங்க “

“வந்து “

“அட சொலுங்க மாப்பிளை”

“வந்து நம்ப பிள்ளையும் , நம்ப மாப்பிளை பையனும் ஒன்னுக்கொன்னு விரும்பறாங்க..”

“அட அது தான் தெரியுமே .. “

“சின்ன சிறுசுக நம்ப சண்டையில் அதுகளை கஷ்ட படுத்தக்கூடாது அது தான் நீங்க கொஞ்ச பேசி பார்த்திங்கன நல்ல இருக்கும் “

“அதுக்கு என்னங்க மாப்பிளை பேசிட்ட போச்சு,இப்போ தான் அந்த பையனும் பேசினான் , உன்கிட்ட பேசச்சொல்லி .. ரொம்ப சந்தோசங்க மாப்பிளை .. போறப்ப எதை வாரிக்கட்டிக்கிட்டு போறம் “

“நாளைக்கு நம்ப புள்ளை குட்டிக சந்தோசமா இருந்தால் போதும் .”

காப்பி கப்பை எதுத்துகொண்டு வந்தார் அத்தை .. “எல்லாம் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன் ரொம்ப சந்தோசங்க .இந்தாங்க காப்பி எடுதுக்கிங்க ...”
காப்பியை குடித்துக்கொண்டே இருவரும் பேசினார்கள் ..

இன்று இரவுக்குள் கர்த்திக்கின் அப்பாவிடம் பேசிவிட்டு எங்கு சந்திக்கலாம் என்று சொல்வதாக சொன்னார் பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு , தான் சென்று வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினர் ரஞ்சனியின் அப்பா

இரவு ஒரு 9 மணிக்கு அழைத்த மாமா , நாளை காலை கார்த்திக்கின் வீட்டிற்கு செல்லலாம் என்று சொன்னார் , காலை ஒரு 8 மணிக்கு ரெடியாக இருக்கும் மாறும் அவர் வது அழைத்து செல்வதாகவும் சொன்னார் ..

நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த ரஞ்ஜனிக்கு ரொம்ப சந்தோசம் ஆனால் அவளுக்குள் ஒரு பயம் இருந்தது இரவெல்லாம் தூக்கம் வரவில்லை , விழித்துக்கொண்டே இருந்தால் ,காலை அனைவருக்கும் முன்பாகவே எழுந்திரித்து , ரெடி ஆகினால் .. மணி 6 , அந்த இரண்டு மணி நேரம் அவளுக்கு எப்படி போகும் என்று அவளுக்கு தெரியவில்லை , ஒவ் ஒரு நிமிடத்தையும் எண்ண தொடங்கினாள்

ரஞ்ஜனியின் அப்பா அம்மா அண்ணனுக்கோ , அவள் செய்யும் ஒவ் ஒரு செயலும் சிரிப்பாக இருந்தது .. அட இருக்காதபின்ன .8 மணிக்கு போறதுக்கு 6 மணிக்கே ரெடியான.. அதுவும் பொண்ணுக .

ஒரு 7:45 க்கு மாமாவும் வந்தாரு , சரி போலாமா என்றாரு ..
அதற்குள் ரஞ்ஜனியின் அம்மா காப்பி போடறேன் என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார் .

“அட பாப்பாத்தி அது எல்லாம் ஒண்ணும் வேண்டாமா அங்க போய் குடிச்சுக்கலாம் ..” என்றார் .

“சரி போகலாமா “ என்ற உடனே ரஞ்ஜனியும் வந்தாள்

“அட கண்ணு நீ எங்க வர நீ இங்கையே இரு நாங்க போய் பேசிட்டு வரோம் “என்றார் மாமா ..

ரஞ்ஜனிக்கு இடி விழுந்தது போல் இருந்தது ..” இல்லை மாமா நானும் வரேனே” என்றாள்

“இல்லை கண்ணு நாங்க போய் பேசிட்டு வரோம் நீ இங்க இரு “என்று சொல்லிவிட்டு ரஞ்ஜனி அம்மா , அப்பா அண்ணன் மற்றும் மாமாவும் சென்றார்கள்


நொடிகள் ஒவ் ஒன்றும் நொண்டி அடித்தது
மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தாலும்
அவ்வப்போது தேனிக்கள் கொட்டுவது போல்
ஒரு வலி அவளுக்கு எப்பொழுதும் இருந்தது

வருடங்கள் காத்திருந்த பொழுது
இல்லாத வலி
இந்த நொடிகளில் அனுபவித்தாள்

மாமனுக்கும் மச்சானுக்கும் அவர்கள் பிள்ளைகளின் பிடிவாதமும், வம்சம் பற்றிய கவலை வந்து விட்டது ஆகையால் பேச்சு வார்த்தை .. சுமுகமாக முடிந்தது

கார்த்திக்கின் வீடு இன்று காலை .

பாகம் -2

வீட்டிற்குள் நுழைந்த கார்த்தி்க்கு . அதிர்ச்சி ....

ஆம் இன்ப அதிர்ச்சி .. எப்படி இந்த பிரச்சனையை சமாளிக்க போறோம் .. அப்பா என்ன சொல்வாங்க . மாமா என்ன சொல்வாங்க , ரஞ்ஜனி கிடைப்பாளா என்ற பல சிந்தனைகளோடு வந்த அவனுக்கு .. இவர்களை பார்த்தவுடன் என்ன செய்வது இன்று புரியவில்லை ...

பொது இடம் என்று கூட பார்காமல் அவனை அடித்த ரஞ்ஜனியின் அப்பா அவனை வாங்க மாப்பிளை என்றார் ..பார்க்கும் இடம் எல்லாம் இவனை முறைத்துக்கொண்டு இருந்த ரஞ்ஜனி அண்ணன் புன்னகைத்தான். அட என்ன நடக்குது என்று யோசிப்பதர்குள் ..

“என்ன டா எங்க மருமகளை தேடறையா” என்று அவன் சித்தப்பா கிண்டல் செய்தார் ...
“இல்லை இல்லை “ என்று தலை அசைத்தான்

“மருமக வீட்டில் இருக்க ஒரு நல்ல நாளா பார்த்து பெரியவங்க எல்லாம் போய் பார்த்து நிச்சயம் பண்ணிடலாம் . என்ன நீ என்ன டா சொல்ற
“என்றார் .

“அட அவன்கிட்ட என்ன கேட்டுக்கிட்டு “

“அவன் தான் எப்பனு காத்துக்கிட்டு இருக்கானே “. என்று சொல்லி அனைவரும் சிரித்தார்கள்

இவன் அசடு வழிந்து கொண்டே வீட்டிற்குள் நுழைத்து பையை வைத்துவிட்டது . பின் கதவு வழியாக சென்று வண்டியை எடுத்துக்கொண்டு ரஞ்ஜனி விட்டை நோக்கி பறந்தான் ...
கப்பல் கரையை கடந்தது ...................

Thursday, October 23, 2008

கரை தேடும் கப்பல்- 3

பாகம் 1 பாகம் 2

நேற்று காலை ரஞ்ஜனி வீடு

கார்த்திக்கு மெயில் அனுப்பிவிட்டு . ரஞ்ஜனி தன் அம்மாவை தேடினால் , அம்மா சமையல் அறையில் இருப்பது தெரிந்தது .அம்மாவிடம் சென்று ...

"அம்மா உன் கூட பேசணும் "

"-----------------------"

"அம்மா உன்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன் "

"தெரியுது சொல்லு "

"இங்க வா .."

"என்னடி வேணும் சொல்லு ... சமையல் பண்ணிக்கிட்டு இருக்கேன்லே"எதோ சொல்ல தயங்கினாள் ..

"அம்மா "

"அட சொல்லு "

"அம்மா நான் மாமா வீட்டுக்கு போறேன் "

"-----------------"

தன் அம்மாவால் எதுவும் பேசமுடியவில்லை .. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதவராக ரஞ்ஜனியை பார்த்தார் . [ரஞ்ஜனியின் வீட்டிற்கும் கார்த்திக்கின் வீட்டிற்கும் பல வருடங்களாக குடும்ப பகை , அதன் காரணமாக தான் இருவரின் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு]


"என்னடி சொல்ற ... என்ன பைத்தியம் கித்தியம் பிடிச்சிடுச்சா ... "

"இல்லை அம்மா நான் முடிவு பண்ணிட்டேன் "

"என்னத்த முடிவு பண்ணிட்ட .. முடிவு பண்ணிட்டாலம் முடிவு "

"எங்கடி வந்திச்சு இந்த தைரியம் "

"உங்க அப்பா காதில் கேட்ட என்ன ஆகும் தெரியும்லே " என்று சொல்லி விட்டு அழ தொடங்கினார் ..

அதற்குள் ரஞ்ஜனி தன் அறைக்கு திம்பினாள் .. அவள் அம்மாவும் ஏதோ சொல்லிக்கொண்டே அவள் பின்னால் வந்தார் .இதை அத்தனையும் பொருட்படுத்தாமல் .. தன் துணியை எடுத்து வைத்தால் ரஞ்ஜனி ..


"அடி பாவி நான் இங்க பொலம்பிக்கிட்டு இருக்கேன் நீ என்னடி நா துணியை எடுத்து வெச்சுக்கிட்டு இருக்க "

"அம்மா நான் ஒண்ணும் ஓடி போகல , நான் என் மாமா விட்டுக்கு தான் போறேன் ..எனக்கு மாமாங்கிறதை விட உன் அண்ணன் விட்டுக்கு தான் போறேன் "

"அடியே அது இல்லடி பிரச்சனை .. உங்க அப்பாவுக்கு தெரிந்தால் என்ன ஆகும் "

"நான் அதை பத்தி கவலை படலை "

"அய்யோ என்ன பேச்சிடி பேசற .. "

"உனக்கு எப்படி இப்படி தைரியம் வந்தது "

".........................."

"அய்யோ நான் என்ன பண்ணுவேன் .. நான் பெத்தவளும் என் பேச்சை கேட்க மாட்டென்கிறாள் .. கட்டிக்கிட்டவனும் என் பேச்ச கேடக மாட்டென்கிறான் நான் என்ன தான் பண்ணுவேன் .... "

"அம்மா சும்மா இரும்மா... பொலம்பாத .. "

"ஏண்டி நான் பேசறது உனக்கு பொலம்பற மாதிரி இருக்க ... அய்யோ சாமி மகமாயி நீ தான்பா காப்பாத்தனும்"...

" சரி அம்மா நான் மாமா வீட்டுக்கு போயிட்டு வறேன் "

"அடியே நெசமா தான் செல்றியா... .... "

"அப்புறம் இவ்வளவு நேரம் நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் "

"அடியே வேண்டாம்டி.. உங்க அப்பன் வந்தா.. பிரச்சனை ஆவுன்டி "

"என்ன பிரச்சனை ஆனாலும் பார்த்துக்கிறேன் "

"அடியே நில்லுடி வயக்காட்டுக்கு போயி இருக்க உங்க அப்பா வந்தரட்டும் "

"வந்த அவரு மட்டும் என்ன சொல்ல போறாரு .. வேண்டாமுன்னு தான் சொல்ல போறாரு " என்று சொல்லி வாயை மூடுவதற்குள்..அவள் அண்ணன் விட்டுற்குள் நுழைந்தான் ..

".................................."

ரஞ்ஜனியும் அவள் அம்மாவும் எதுவும் சொல்லவில்லை ..இருவரும் அமைதியாக இருந்தார்கள் . அவள் அண்ணனுக்கோ சூழ்நிலையின் காட்டம் தெரிந்தது ஆனால் அவனால் என்ன என்று யூகிக்க முடியவில்லை .

என்ன பிரச்சனை என்று ரஞ்ஜனியை முறைத்துக்கொண்டே தான் அம்மாவிடம் கேட்டான்

முந்தானியால் வாயை அடைத்துக்கொண்டு ரஞ்ஜனியை பார்த்துக்கொண்டே மீண்டும் அழ தொடங்கினார் அவள் அம்மா .

அவள் அண்ணனுக்கோ இருப்புகொள்ளவில்லை .."என்ன தான் பிரச்சனை என்று கத்தினான் "

"………………………..................."

" கேட்கறேன்ல என்ன தான் பிரச்சனை”

"நான் மாமா வீட்டுக்கு போறேன்”

"என்னது மாமா வீட்டிக்கு போரையா”

"ஓ நீங்க அந்த அளவுக்கு பெரிய மனுசங்க அயிட்டிங்க ...."

“-------------------------------------“சிறிது நேரம் வெறும் மௌனத்திர்கு பிறகு அவள் அண்ணா கேட்டான்

“அப்பா கிட்ட சொன்னியா .. “ என்றான்

"இல்லை " என்று தயங்கி தயங்கி சொன்னாள்

"உனக்கு அப்பா அம்மாவை விட அவுங்க தான் பெருசா போயிடுச்சு இல்லை..."

"இங்க பாரு எப்ப நீ அந்த விட்டுக்கு போறேண்ணு முடிவு பண்ணிட்டையோ இங்க இருக்க கூடாது .. கெளம்பு நீ கெளம்பு "

"இல்லை அண்ணா அது வந்து .."

"என்ன அது வந்து போய் ..."

" கெளம்பு நீ முதலில் கெளம்பு "

"நாளைக்கு எதாவது எங்களை பற்றி செய்தி கேட்டினா ஒரு எட்டி வந்து பாத்துட்டு போ " என்றான் ரஞ்ஜனியின் அண்ணன் தழு தழுத்த குரலுடன்

"அண்ணா " என்று அழ தொடங்கினாள் ரஞ்ஜனி


சிறிது நேரத்தில் வயக்காட்டுக்கு சென்று இருந்த அவள் அப்பா வீட்டுக்கு வந்து விட்டார் . நடந்ததை எல்லாம் தான் அம்மா , அப்பாவிடம் சொல்லிவிட்டார் .கேட்டுவிட்டு எதுவும் பேசவில்லை ..

ரஞ்ஜனியை ஒரு முறை பார்த்தார் . அந்த பார்வை ரஞ்ஜனிக்கு புதுமையாக இருந்தது அதன் அர்த்தம் புரியாதவளாக நின்றாள் ரஞ்ஜனி .

இறுகி போன முகத்துடன் .நெஞ்சில் கை வைத்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்தார் ரஞ்ஜனியின் அப்பா…

(தொடரும் .....)

Friday, October 17, 2008

கரை தேடும் கப்பல்- 2

என் உயிர் ரஞ்ஜனி ,


நான் நலம் தான் , நீ வருத்தப்படாதே அன்று நடந்த சம்பவத்தை பற்றி நான் வருத்தப்படவில்லை ... ஏன் என்றால் அது பெற்றவர்களின் ஆதங்கம் ... ஆனாலும் ஒரு சிறு வருத்தம் இருக்க தான் செய்கிறது .. அது காலப்போக்கில் மறைந்து விடும் என்று நம்புகிறேன்

உயிரை விடுவது நீயாக இருந்தாலும்
பிணமாகப்போவது நானாக தான் இருக்கும்


இதில் வேடிக்கை என்ன தெரியுமா
நம்மை பிரித்த
உன் அண்ணனுக்கோ பிரிவின்
வலி தெரியவில்லை


உன் அப்பனுக்கோ
பிள்ளை மனம் புரியவில்லை


சாதி சனம் எல்லாம் ஒண்ணு தான்
ஆனால் மாமன் மச்சான்
மல்லு கட்டிக்கிட்டு
மனசு எறங்க மாட்டேங்றாங்க


கண்ணே காதலில்
எப்பொழுதும்
பிள்ளை மனம் பித்து
பெற்ற மனம் கல்லு தான்


காலம் கனிந்து வரும் காத்திரு
கண் மணியே !


---காதலுடன்
கார்த்திக்


இந்த மெயிலை அனுப்பினா கையேடு .. இரண்டு நாளுக்கு விடுப்புக்கு விண்ணப்பித்தான்.. தன் சொந்த காரணங்களுக்காக என்றான் நாகரிகம் கருதி அவன் சைட் மேனேஜரும் அதை பற்றி மேலும் பேச விரும்பவில்லை .. அதன் பிறகு விஜயலக்ஷ்மி Travels க்கு அழைத்து அன்று இரவுக்கு ஈரோட்டுக்கு ஒரு டிக்கெட் புக் செய்தான் [வார தொடக்கம் என்பதால் டிக்கெட்டும் இருந்தது ]... இரவு 9: 30 க்கு திநகர் பஸ் நிலையம் எதிரில் இருந்து பஸ் புறப்படும் என்றான் எதிர்முனையில் .


"சரி நான் வந்து விடுகி்றேன் என்று சொல்லிவிட்டு . "போனை வைத்த அவனுக்கு ஒரு வேலையும் ஓட வில்லை ...


இது அத்தனையும் கவனித்து கொண்டு இருந்த .. அவன் நண்பன் செந்தில் ...


"மச்சி வா ஒரு தம் போட்டுட்டு வரலாம் .. " என்றான் ..


வேண்டா வெறுப்பாக அவனுடன் சென்றான் கார்த்திக் ..


"டேய் what’s the problem man ? காலையில் இருந்து ஒரே tension ஆ இருக்க ..."

"இல்லை டா மச்சி ஒன்னும் இல்லை .."


"ஒன்னும் இல்லாமதான் ரெண்டு நாள் லீவ் apply பண்ணினையோ..."


"..............."


"டேய் எதாவுது பேசு டா ..."


".................."


அதற்குள் தம்மு கடை வந்து விட்டது ..


"அண்ணா ரெண்டு கிங்ஸ் , ரெண்டு ஹால்ஸ்,, ஒரு வாட்டர் பாக்கெட் " .. என்றான் .. அதை எடுத்துக்கொண்டு கடைக்கு பின்னால் சென்றார்கள் ..
ஹால்ஸ்யை வாயில் போட்டுக்கொண்டு .. சிகரெட்டை பற்ற வைத்தார்கள் . அப்படியே பேச்சை தொடாங்கினான் செந்தில்


"டேய் இப்படி ஒண்ணும் சொல்லாமல் இருந்தால் என்ன டா அர்தம்.. எதனாவுது சொல்லு டா .. "


"இல்லை டா ஒண்ணும் இல்லை .."


"எதுவும் இல்லாம தான் இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி உட்காந்து இருக்க .."


"இல்லை டா அது வந்து ரஞ்ஜனி அவுங்க அப்பா மறுபடியும் problem பண்றாரு டா"


"என்ன சொல்றாரு . மாமா .."


"வேற மாப்பிளை பாக்கராரு.."

"எல்லாமும் தெரிந்தே ஏன்டா அந்த ஆளு இப்படி பண்றான் ஏன்டா உங்க மாமா என்ன நிறைய தமிழ் படம் பார்ப்பாரோ .. "

"எல்லாம் ஒரு வீராப்பு தான் " ஹும் என்ன நடக்கும்னு தெரியல டா அது தான் நாளைக்கு ஊருக்கு போறேன் , அப்பாக்கிட்ட சொல்லி ,, பெரிய அப்பாக்கிட்ட பேச சொல்லி இருக்கேன் .. பெரியப்பா சொன்னா ரஞ்ஜனி அவுங்க அப்பா கொஞ்சம் கேட்பாரு அது தான் .. "

"ஏன்டா இதுக்கு தான் காலையில் இருந்து இளவு வீட்டில் உட்காந்து இருக்கிற மாதிரி உக்காந்து இருக்கையோ .."

"கூல் டா " மச்சி ஒண்ணும் கவலை படாதே எல்லாம் நல்லபடியா நடக்கும்.. அப்படியும் இல்லை என்றால் ஒரு action plan யை போடுவோம்

அந்த மாதிரி எல்லாம் தேவை இருக்காது என்று நினைக்கிறேன் .

அப்படியே வேண்டும் என்றாலும் சொல்லு டா மச்சி

"தேங்க்ஸ் டா .." ..

வாட்டர் பாக்கெட் எடுத்து கையையும் வாயையும் கழுவிக்கொண்டு .. கடைகாரரிடம் அண்ணா account என்று சொல்லி விட்டு .. தங்கள் இருக்கைக்கு திரும்பினார்கள் இருவரும் ...


மீண்டும் தன் கணினியை திறந்து .. அப்படி இப்படி என்று நெளிந்ததில் மணி 12: 30 ஆனது .. சாப்பிட சென்று விட்டு ஒரு 2 மணி சுமாருக்கு வந்து அவன் பார்த்துக்கொண்டு இருந்த சில முக்கியமான வேலையை .. செந்திலிடம் கொடுத்து விட்டு .. நாலு மணி சுமாரில் செந்திலிடமும் தன் சைட் மேனேஜர்யிடம் சொல்லிவிட்டு .. தன் அறைக்கு கிளம்பினான் கார்த்திக்
இரவு 8 மணிக்கு கிளம்பி ஒரு 9 மணி அளவில் திநகர் வந்து சேர்ந்தான் ..திநகர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள .. கையேந்தி பவனில் சாப்பிட்டு விட்டு .. விஜயலக்ஷ்மி travels முன்பாக சென்ற பொது .. பஸ்சும் சரியாக வந்தது .. பஸ்ஸில் ஏறி தன் இருக்கையை பார்த்து அமர்ந்தான் ...


பேருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் .. தூங்கி விட்டான் ..காலை 5 : 45 க்கு ஈரோடு பஸ் நிலையம் வந்து சேர்ந்தது ..அங்கு இறங்கி .. தன் ஊருக்கு செல்லும் பேருந்தை பிடித்து வீடு போய் சேர 8 மணி ஆனது .. அதற்குள் பழனிச்சாமி பெரியப்பாவும், சித்தப்பாவும் வந்து இருந்தார்கள் வீட்டில் ஒரே கூட்டம் ...

வீட்டிற்குள் நுழைந்த கார்த்தி்க்கு .பெரும் அதிர்ச்சி ..

Saturday, October 11, 2008

கரை தேடும் கப்பல்- 1

ஐயா சாமி இதன் மூலம் அனைத்து மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் .. என்னவென்றால் ..............................
அட கொஞ்சம் struck ஆகுது ......

ஹிம் ஓகே

அட நில்லுங்க அப்பா ஒரு பில்டப் வேண்டாமா ....

ஐயா சாமியோ சாமியோ நானும் ஒரு தொடர் கதை எழுதறேன் அதனால இந்த பிளாக்கர் உலகத்தின் சுஜாதாகளே , அனு ராதாகளே ... என்னை மனித்து விடுங்கள் ...படித்துவிட்டு என்னை திட்ட வேண்டும் என்றால் அப்படியே கமெண்ட்ஸில் திட்டிவிட்டு போங்க .சூனா பானா இருந்தாலும் .நான் அதுக்கு எல்லாம் பயபடுகிற ஆளு இல்லைங்க சாமியோ ....

here goes ......

மணி : வெள்ளி கிழமை 6:45 PM

"ஏய் நீ எங்கே இருக்க "

"office லே .."

"ஏய் லூசு ..9:30 க்கு train .. இன்னமும் என்ன பண்ற .. "

"ஏய்.. ஏய்.. கெளம்பிட்டேன் .. சின்ன ஒரு status மெயில் அனுப்பிட்டு வந்துடறேன் "

"சீக்கிரம் கெளம்பு டி ..என்னோமா இவதான் office யையே தாங்கி புடிக்கிற மாதிரி பேசறா .. "

"ஓகே சீக்கிரம் வா .. ரூம்க்கு வந்துட்டு எனக்கு கால் பண்ணு ஓகே .."

"ஓகே ஓகே பாய் .."

போனை வைத்தான் கார்த்திக் ...

ஊருக்கு செல்வதற்காக தன் துணிகளை எடுத்து வைத்து கொண்டு இருந்தான் ...

[கார்த்திக் ஒரு சிவில் Engineer , சென்னையில் உள்ள ஒரு construction கம்பனியில் வேலைசெய்கிறான் ..சொந்த ஊரு ஈரோடு பக்கத்தில் உள்ள கொடுமுடி .]

மணி : 7:30 PM

"ஏய் கார்த்தி நான் ரூம்க்கு வந்து விட்டேன் .. ஒரு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து விடு "என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் ரஞ்ஜனி ..

[ரஞ்ஜனி சாப்ட்வேர் அனலிஸ்ட் ..வேலை செய்வது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் , சொந்த ஊரு ஈரோடு ]

அப்படி இப்படி என்று ஒரு 8 மணிக்கு பேபி நகரில் உள்ள தன் வீட்டில் இருந்து கிளம்பி ஒரு ஆட்டோவை பிடித்துக்கொண்டு , விஜய் நகரில் உள்ள ரஞ்ஜனி வீட்டின் முன் ஆட்டோவில் போய் நின்றான் கார்த்திக் ... அங்கு ரெடியாக இருந்த ரஞ்ஜனியை ஏற்றிக்கொண்டு சென்ட்ரலை நோக்கி ஆட்டோ சென்றது ...

"சாப்பிட்டியா "

"இல்லை .சென்ட்ரல் போய் சரவணபவனில் பார்சல் வாங்கிக்கொள்ளலாம் ... " என்றான் கார்த்திக்

"ஓகே .."

சிரிது நேரம் மௌனத்திற்கு பிறகு கார்த்திக் .. தொடங்கினான் ..

"இந்தத்தடவை உங்க அப்பாக்கிட்ட பேசப்போறியா இல்லையா ..."
ரஞ்ஜனியிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை ...

"-------------------"

அதற்குள் ஆட்டோ அண்ணா மேம்பாலத்தை நெருங்கிவிட்டது ...மீண்டும் ஒரு முறை கேட்டான் கார்த்திக் ..

"பார்ப்போம் " என்று ஒற்றை வரியில் பதில் சொன்னால் ரஞ்ஜனி ..
"---------------------------"

பார்ப்போம் என்றால் என்ன அர்த்தம் ....

"--------------------------"

அதற்குள் சென்ட்ரல் ஜெயில் பாலம் வந்து விட்டது

"சார் காசு எடுத்து வெச்சுக்கோங்க சார் அங்க நிக்க விட மாட்டானுகோ ..."என்றான் ஆட்டோகாரன் ...

சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் முன்பாக ஆட்டோ நின்றதும் ..
ஆட்டோகாரர்யிடம் காசை கொடுத்து விட்டு .. இருவரும் train யை நோக்கி நடந்தார்கள் மணி சரியாக 9 PM

"ரஞ்ஜனி நீ train க்கு போ நான் போய் சாப்பாடு வாங்கிக்கிட்டு வந்துறேன் ..."

"ஹா ஓகே "

"கார்த்திக் எந்த கோச் ..."

"S9 --24, 25 "

"ஓகே நான் அங்க வெயிட் பண்றேன் ..."

"ஓகே "

ஏர்காடு எக்ஸ்பிரஸ் எந்த platform என்று பார்த்தல் ரஞ்சனி .. மூன்றாவது platform என்றதும் .. s9 கோச்யை நோக்கி நடந்தால்....

s9 கோச்யை அடைந்ததும் .. தங்கள் இருக்கையை பார்த்து அமர்ந்தால் .....

ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து .. ஆட்டோவில் வரும் பொழுது கார்த்திக் கேட்ட கேள்வியை ...நினைத்து கொண்டு இருந்தாள் ......

சற்று நேரத்தில் " ஹலோ " என்று யாரோ அழைப்பது போல் இருந்தது .. திரும்பி பார்த்தால் ..கார்த்திக் ..

"என்ன பலமா யோசனை ..."

"இல்லை ..ஆட்டோவில் வரும் பொழுது நீ சொன்னதை தான் யோசிச்சுகிட்டு இருந்தேன் .."

"சரி வா சாப்பிடலாம்" ...

சாப்பிட்டுக்கொண்டே இருவரும் பேசினார்கள் அதற்குள் ரயிலும் கெளம்பியது ...

"சரி என்ன பண்ண போற .."

"நான் தான் ஏற்கனவே எங்க வீட்டில் சொல்லிட்டேன் ...உன் கூட பேசினாவே தொலைச்சுடுவேன் என்று சொல்லி இருக்கிறார் எங்க அப்பா .. என்னை என்ன பண்ண சொல்ற "

"ஓகே அப்புறம் என்ன தான் பண்ண போற "

"நான் என்ன பண்ணுவேன் !"

"ஆமாம் எப்போ கேட்டாலும் இதை ஒன்ன சொல்லிடு ..." என்று சலித்துக்கொண்டான்

"அப்புறம் என்னை .. என்ன ஓடி வர சொல்றியா !!.."

"அது இல்லை டி "

"அப்புறம் என்ன "

"இல்லை உங்க அம்மா பேசப்போறாங்கனு சொன்னியே என்ன ஆச்சு ..."

"ஆமாம் .. எங்க அம்மா பேச்சை மட்டும் எங்க அப்பா கேட்கவா போறாங்க ..."

"அப்புறம் என்ன தான் பண்றது ..."

"பார்ப்போம் ..."

" எண்ணத்தை பார்ப்போம் ...... சும்மா எப்பக்கேட்டாலும் பார்ப்போம் பார்ப்போம் என்று பதில் " என்று சலித்துக்கொண்டான்

அதற்குள் பேஸின் பாலத்தை தாண்டி விட்டது train , தங்கள் compartment யில் இருந்த மற்றவர்கள் உறங்க செல்ல இவர்களும் தங்கள் .. இருக்கையில் படுத்துக்கொன்றார்கள் .. சரியாக காலை 6 மணிக்கு ஈரோடு வந்து சேர்ந்தது train ...

train யை விட்டு இறங்கி ....subway யில் நடந்து வந்து கொண்டு இருந்தார்கள் ....subway யை விட்டு வெளியே வந்த பொழுது எதிரில் ரஞ்ஜனியின் அப்பா ...

"ஏன்டா என் புள்ளைக்கிட்ட பேசக்கூடாதுனு சொல்லி இருக்கேனே ..அப்புறம் என்னடா பேச்சு ....."

"இல்லைங்க ......"

என்று சொல்லி முடிப்பதற்குள் .. பளார் பளார் என்று அறை விழுந்தது கார்த்திக்கு ...

"டேய் மச்சி ஆபீஸ் வந்துடிச்சு டா எந்திரி டா " என்று எழுப்பி விட்டான் செந்தில் .. [ இந்த சம்பவம் நடந்து 2 மாதங்கள் ஆகிவிட்டது அதன் பிறகு ரஞ்ஜனி சென்னை திரும்பவில்லை ...]

தன் இருக்கைக்கு வந்த கார்த்திக் தனது INBOX ஐ திறந்து பார்த்தான் . இரண்டு மூன்று மெயில் தன் PM யிடம் இருந்து வந்து இருந்தது ...மற்றும் பல forwarded மெயில் ...இது அனைத்திற்கும் நடுவில் ..ரஞ்சனியிடம் இருந்து ஒரு மெயில் ...நொடி பொழுதில் திறந்த அவனுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்து இருந்தது ...

அன்புள்ள கார்த்திக்கு ,

நீ எப்படி இருக்கா , ..அன்று நடந்த சம்பவத்தற்கு நான் மிகவும் வருத்த படுகிறேன் . அந்த நாளுக்கு பிறகு , என்னை விட்டில் யாரும் நம்புவது இல்லை ,, என்னை தனியே எங்கும் அனுப்புவது இல்லை . செத்து விடலாம் போல் இருக்கிறது ....என்னை எப்படியாவுது அழைத்து சென்று விடு ........இல்லை என்றால் எனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்துவிடுவார்கள் போல் இருக்கிறது..

உயிர் இல்லா
பிணமாக !
உன்னை மனதில்
சுமந்து கொண்டு !
பெற்றவர்களுக்கும் உண்மை யாக இல்லாமல்
உனக்கும் தொல்லை கொடுப்பது
கரை தெரியாத கடலில்
நீந்து வது போல் இருக்கிறது
நான் கரை சேர்வதும்
கடலோடு போவதும்
உன் வார்த்தையில்
தான் இருக்கிறது

----காதலுடன்
ரஞ்ஜனி
இதை படித்த கார்த்திக்கு என்ன செய்வது என்று புரியவில்லை .. சற்றும் யோசிக்காமல் .
(தொடரும் ................)

Friday, October 3, 2008

ராசு back to pavilion


இது ராசு திருமணத்திற்கு பிறகு முதல் முதலில் இந்தியா சென்ற பொது ..



முதல் கதையில் சொன்னது போல் அதே பெண்ணை திருமணம் செய்து கொண்டான் , திருமனத்திற்கு பிறகு மூன்று வருடம் கழித்து இன்று தான் தாயகம் செல்கிறான் . மூன்று வருடமாக கடிதத்திலும் தொலைபெசியிலும் வாழ்ந்த வாழ்க்கையை உயிரோட்டமாக அனுபவிக்க செல்கிறான் , தான் பெற்ற மகனை முதல் முதலில் பார்க்க செல்கிறான் , இந்த பிரிவின் வலிகள் ராசுவை பல மடங்கு பக்குவம் ஆக்கியிருந்தது



இருந்தாலும் அனைவரையும் போல் ஆர்வ கோளாரில் அனைத்து பொருளையும் வாங்கினான் ..முக்கியமாக தன் மனைவிக்கு பிடித்த சென்ட் ,பவுடர் மற்றும் பல அழகு சாதன பொருள்கள் வாங்கினான் , தன் மனைவிக்கும் , மகனுக்கும் துணிமணிகள் என்று நினைத்ததையெல்லாம் வாங்கினான் , தான் கிளம்பும் நாளும் வந்தது . நண்பர்கள் படை சூழ வழி அனுப்பி வைக்கப்பட்டான் ராசு .



வெளிநாட்டில் இருந்து வரும் பொழுது எது வாங்குகிரோமோ இல்லையோ . நண்பர்களுக்கு மறக்காமல் சோம பாணம் வாங்கி கொள்ள வேண்டும் ,
தன் நண்பன் மொக்காசாமி சொன்னதும் ஞாபகம் வந்தது



"ஏலே ராசு வர அப்போ மறக்காம நல்ல பாரின் சரக்கு வாங்கிக்கிட்டு வலே மாப்பிளை "



செரி என்று Duty Freeல் ஒரு சோம பாணம் வாங்கிக்கொண்டு ,அனைத்து Immigration விசையங்களையும் முடித்துக்கொண்டு விமானத்தில் போய் அமர்ந்தான் .



விமானம் புறப்பட்டு தாயகம் நோக்கி பறந்தது .இந்த மூன்று வருட பிரிவின் வலியைவிட இந்த நான்கு மணி நேரம் பயணம் தான் , அவனுக்கு பெரும் சுமையாக இருந்தது .. உணர்ச்சியின் உச்சத்தில் இருந்தான் . [இதனால் ஒசியில் கொடுத்த சோம பானத்தை கூட குடிக்கவில்லை ]. இதே போல் ஒரு மனநிலையில் தான் ஒரு உள்ளம் திருச்சி விமானநிலையத்தில் காத்துகிடந்தது .



விமானமும் திருச்சியில் தரை இறங்கியது .. தனது பொருள்களை எடுத்துக்கொண்டு மற்ற Immigration விசையங்களை முடித்துக்கொண்டு வெளியே வர ஒரு மணி நேரம் ஆகிவிட்டது .. இந்த ஒரு மணி நேரத்தில் இந்த இரு உள்ளங்களும் பட்ட பாட்டை வார்த்தையால் சொல்ல முடியாது . இது எதுவும் புரியாத இந்த customs அதிகாரிகள் பண்ணும் இம்சை பெறும் தொல்லை ,



தூரத்தில் மகனையும் மனைவியையும் பார்த்த ராசு ஓடி வந்து தன் மகனையும் , மனைவியையும் வாரி அணைத்துக்கொண்டான் , அவனால் கண்ணிரை அடக்க முடியவில்லை ..அந்த நோடியில் , தான் பட்ட அத்தனை விலிகளும் கரைந்தது போல் உணர்ந்தான் ராசு ..அதன் பிறகு தான் மட்டற உறவும் நட்பும் அவன் கண்ணுக்கு தெரிந்தது



மகனின் முத்தமும்
மழலை பேச்சும்
அவனை கிறங்கடித்தது



பாலைவனத்தில் அவன் தொலைத்தது
வெறும் வருசங்கள் இல்லை
உயிரை என்று
அவன் மகன் கொடுக்கும்
ஒவ்வொரு முத்தமும்
மனைவியின் அரவணைப்பும்
அவனுக்கு சொன்னது

Saturday, September 27, 2008

ராசு in துபாய் ..

இது ராசு முதல் முதலில் துபாய் வந்த கதை ...


திருச்சியில் இருந்து முதல் முதலில் flight ஏறுகிறார் ,அது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் அது கொழும்பு சென்றுவிட்டு அங்கு இருந்து மூன்று மணி நேரம் tansit க்கு பிறகு அபு தாபி வந்து சேறும் . நம்ப ராசுவும் கொழும்புவில் இருந்து அபு தாபி வரும் விமானத்தில் ஏறிவிட்டார் .. விமானம் பறக்க தொடங்கி விட்டது .. விமான பணி பெண் சரக்கு எடுத்து வர நம்ப ராசு நல்ல பிள்ளை மாதிரி அமர்ந்து இருந்தார் .


பக்கத்தில் இருந்த அறிவாளி நம்ப ராசுவை பார்த்து விட்டு .. சரக்கு எல்லாம் ஓசி தான் , நம்ப டிக்கெட் காசில் சரக்கும் சேத்திதான் வாங்கி இருக்கான் .. சும்மா வாங்கி குடிங்க என்று சொல்ல ..


"நெசமாவா .. எனக்கு சொல்லவே இல்லை " என்று சொல்லி விட்டு .. கச்சேரியை தொடங்கினார் ராசு ..


சிறிது நேரத்தில் அலப்பறை தாங்க முடியாமல் போக .. பணி பெண் ஊசி போட்டு .. சீரிய சிங்கத்தை அடக்கினார்கள் ..


விமானம் அபு தாபி வந்து சேர்ந்ததும் , பக்கத்தில் இருந்த அறிவாளி ராசுவை எழுப்பிவிட ..


"சிரித்துக்கொண்டே கொஞ்சம் ஓவரோ .."


"ஆமாம் ஆமாம் .." என்றான் ராசு ..


இப்பொழுதுதான் பெறும் அதிர்ச்சி காத்து இருந்தது ரசுவிர்க்கு ..


"ஆமாம் நீங்க துபாய் தானே போகவேண்டும் என்று சொன்னிங்க .. நீங்க ஏன் அபு தாபிக்கு வந்திங்க .. துபாய் வேற நாடு அபு தாபி வேற நாடு .." என்று அறிவாளி சொல்ல நம்ப ரசுவிர்க்கு .. ஒரு லார்ஜ் யை ராவா அடித்து போல் இருந்தது ..


"ஐயா சாமி என்ன சொல்றிங்க .."


"அட தெரியவில்லை என்றால் கேட்டுவிட்டு ஏறவேண்டியது தானே .. அட போயா இப்போ என்ன பண்ண போற , இந்த நாட்டில் சட்டம் கிட்டம் எல்லாம் ரொம்ப கண்டிசன் . பாத்து வேற விமானத்தை பிடித்து துபாய் போற வழியை பாரு "என்று சொல்லிவிட்டு நம்ப அறிவாளி எஸ்கேப் ..


ரசுவிர்க்கு ஒன்றும் புரியவில்லை ..



கண்களில் கண்ணிர் , இக்கத்தில் ஒரு மஞ்ச பை , கையில் ஒரு பை .. திருவிழாவில் தொலைந்த திருவாத்தான் போல் நிற்க ..


ராசுவின் அலப்பறையை விமானத்தில் பார்த்த ஒரு நல்ல மனுஷன் ..


"என்ன தம்பி என்ன ஆச்சு என்று கேட்க .."


"ஐயா சாமி இந்த மாதிரி தப்பு நடந்து போச்சு .எங்க அப்பன் ஆத்தா காடு கண்ணை வித்து துபாய் அனுப்பி வெச்சாங்க நான் தெரியா தனமா இந்த நாட்டுக்கு வந்துட்டேன் எதாவுது பண்ணுங்க ஐயா என்று கேட்க .."


"யாரு யா சொன்னா துபாய் வேற நாடு அபு தாபி வேற நாடுன்னு ரெண்டு ஒன்னு தான் எங்கே உன் passport யை காட்டு என்று வாங்கி அவன் விசாவை பார்த்து விட்டு ஒரு பெறும் விளக்கம் சொல்லி ராசுவை தேற்றினார் "


இதனால கருத்து கந்தசாமி என்ன சொல்றான் என்றால் " உதவி செய்யாவிட்டலும் உபத்திரமாவது செய்யாமல் இருக்கலாம் "

Friday, September 12, 2008

ஹமாம் operator ராசு- 1



நான் கேட்டதில் ரசித்த உண்மை சம்பவம் ....
நம்ப ஹீரோ பேரு ராசு , இவரு , தென் தமிழ்நாட்டில் இருந்து வந்து துபாய்யில் வேலை செய்யும் ஒரு ஹமாம் operator,

துபாய் வந்த பிறகு கல்யாண மார்கெட்டில் நம்ப ராசுவிர்க்கு மௌசு அதிகம் ஆகிவிட்டது . அவருக்கு பெண் பார்க்கும் படலம் தொடங்கியது , ஒரு முறை விட்டிற்க்கு அழைத்த அவனுக்கு ஒரு நல்ல செய்தியும் கிடைத்து தங்களது தூரத்து உறவில் ஒரு பெண் இருப்பதாகவும் சீர் செனத்தி சிறப்பாக செய்வார்கள் என்று ராசுவின் அம்மா கூறினார் .

பிறகு நாட்கள் உருண்டன இரண்டு வாரத்தில் தன் அம்மா அன்று சொன்ன அந்த பெண்ணின் போட்டோவை அனுப்பி வைத்துள்ளதாக கூறினார் . இரண்டு நாளில் கொரியரும் வந்து சேர்ந்தது .பிரித்து பார்த்த அவனுக்கு வயித்துக்குள் பட்டாம்புச்சி பறக்க தொடங்கியது தனது சமதத்தை தன் அம்மாவிடம் சொன்னான் . அதேபோல் அந்த பெண்ணுக்கும் அதே biological மாற்றம் ஏற்பட . .பெரியவர்கள் ஒன்று கூடி ஒரு தேதியில் கல்யாணம் என்று முடிவு செய்தார்கள் . அப்படியும் கல்யானத்துக்கு இரண்டு மாதம் இருத்தது ....
அப்பொழுது ராசுவிற்கும் அந்த பெண்ணுக்கும்

பசி இலலை


தூக்கம் இல்லை


நிமிடங்கள் ஒவ்வொன்றும் வருடங்கள் ஆகினா


நாட்கள் ஒவ்வொன்றும் நரகம் ஆகியது


கிரகாம் பில் அவன் குல தெய்வம் ஆனார்


missed call ஒவ்வொன்றும் மில்லியன் டாலேர் அவனுக்கு

(அட இது எல்லாம் இந்த Situation க்கு மிக அவசியங்க )

பிறகு அப்படி இப்படி என்று ஒரு மாதம் ஓடியது , பிறகு ஒரு நாள் தன் அம்மாவிடம் இருந்து ஒரு பார்சல் வந்தது , திறந்து பார்த்தால் அவனது கல்யாண பத்திரிக்கை , அவன் நண்பர்களுக்கு குடுக்க தன் அம்மா அனுப்பியதாக சொன்னார் . பத்திரிக்கையை திறந்து பார்த்த அவனுக்கு கடும் கோபம், அதை வாங்கி பார்த்த அவனது நண்பர்கள் அடக்கமுடியாமல் சிரித்தார்கள் கேளியும் , கிண்டலும் ராசுவை சூடேத்தியது .



பிறகு என்ன.. தன் அம்மாவிற்கு போனை போட்டு காச் மூச் என்று கத்தினான் , ஏன் ஹமாம் Operator என்று பத்திரிகையில் போட்டிர்கள் என்று கத்தினான் .

அதற்க்கு அவன் அம்மா சொன்ன பதில் "செய்யும் தொழிலே தெய்வம் டா .. அது ஒன்னும் தப்பு இல்லை நீ அங்க அந்த வேலை பார்த்து கஷ்ட படுவது தான் நாங்க இங்க மூன்று வேலையும் சாப்பிடுகிறோம் ".. என்று தான் அம்மா சொன்ன பிறகு தான் சற்று அமைதியானான் ராசு

ஹமாம் என்றால் அரபிக்யில் கக்குஸ் (Toilet) என்று அருத்தம் . இதை கேட்டதும் எனக்கு ஞாபகம் வந்தது நம்ப வடிவேல் தான் ...