Monday, May 4, 2009

அரசியல் - தீவிரவாத தொழில்சாலை

என்ன கேவலம் நடக்கிறது நம்ப ஊரில் ...ஆட்சியில் இருக்கும் பொழுது ஈழம் பற்றி கேட்டால் அது அண்டை நாட்டு பிரச்சனை நாம் எப்படி மூக்கை நுழைப்பது என்று சொன்ன மத்திய அரசு இன்று ஏன் இவளவு அக்கறை காட்டுகிறது .. மக்கள் என்ன அவளவு முட்டாள்கள் ஆகிவிட்டார்களா ..

இதற்கு நடுவில் டாக்டர் காலை உணவு உன்ன வேண்டாம் என்று சொன்னதை .. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று மெரினாவில் வந்து அமரும் தலைவன்

ஈழம் என்ற வார்த்தையை கேள்விப்படாத மாதிரி தனி ஈழம் வேண்டும் என்று குரல் கொடுக்கும் தலைவி ..

இந்த ராமதாஸு சரியான பச்சோந்தி, அவன மாதிரி ஒரு பொறம்போக்கை பார்க்கவே முடியாது , கடைசி நாள் வரைக்கும் ஆட்சியில் பங்கு வகிப்பார்கள் அப்புறம் எங்களுக்கும் அவங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பார்களாம் அதையும் நாம் நம்பனும் பன்னாடை ..

இதற்கு நடுவில் சினிமா காமடியன்கள் வேறு [கார்த்திக் ,மன்சூர் அலி கான் , TR, சரத், விஜயகாந்த் அட நாம்ப ரித்திஷ்].. இந்த கேவலம் நம்ப ஊரில் என்றால் வடக்கே இதை விட கொடுமை ..

இங்கிலீஷ் வேண்டம் என்கிறான் ஒருத்தன் ..

இரண்டு ரூபாய்க்கு 35 கிலோ அரிசி என்கிறான் ஒருத்தன் . எற்கனவே தமிழ் நாட்டில் கொடுத்து குட்டிச்சுவர் ஆக்கியாச்சு தேசம் முழுவதையும் கெடுத்துவிடலாம் என்று ஆசை போல

அட நம்ப நக்மா எல்லாம் election நிக்குதாம் நாடு உருப்பட்ட மாதிரித்தான்

அதை விட கொடுமை என்ன என்றால் இவனுக காட்டி இருக்கும் சொத்து மதிப்பை பார்த்திங்களா .. பன்னாடைக 60000 கோடி 40000 கோடி என்று சுருட்டிவிட்டு மூன்று கோடி நாலு கோடி என்று கணக்கு காட்டறாங்க.. இன்னமும் என்ன கொடுமை என்றால் அதையும் நம்ப election commission நம்புவது ,,

என்ன இவனுக எல்லாம் என்ன நினைக்கிறாங்க மக்கள் எல்லாம் கேனப்பசங்க என்றா . இல்லை இவனுக ரொம்ப நல்லவங்க என்ன சொன்னாலும் நம்புவாங்க என்றா .. போங்க டா பொறம்போக்குகளா ....
இந்த மாதிரி கொடுமை எல்லாம் தாங்க முடியாம தான் தீவிரவாதிகளும் naxlites களும் உருவாகுகிறார்கள் என்று நினைக்கிறேன் . இந்த மாதிரி சம்பவங்களை பார்க்கும் பொழுது நம்மில் பலருக்கு கடும் கோபம் வரும் ஆனால் என்ன நம்மால் என்ன பண்ண முடியும் என்று நினைத்துக்கொண்டு சும்மா நம் வேலையை பார்க்க போய்விடுகிறோம் , வேலையே இல்லாதவன் என்ன செய்வான் இடுப்பில் குண்டை கட்டிக்கொண்டு தான் திரிவான் ..

நாம் தேசம் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று நமக்கெல்லாம் வரும் சிந்தனை அவர்களுக்கு கொஞ்சம் கூட வராத ..

பன்னாடை பசங்க இவளவு கொள்ளை அடித்து என்ன பண்ண போறாங்க . என்ன கருமமோ போங்க .. ஒரே கோபம் நாம் ஊர் செய்தியை படித்தால் அது தான் இந்த பதிவு

Wednesday, April 8, 2009

வணக்கம் மக்களே ...

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் என் ப்லோக் பக்கம் வருகிறேன் ..ஒரு 20 நாள் பயணமாக ஊருக்கு சென்று இருந்தேன் நேற்று தான் அபு தாபி திரும்பினேன் ..இது ஒரு நல்ல இனிமையான பயணமாக அமைந்தது .பயணத்தின் சுவாரசியம் என்ன என்றால் , இந்த முறை அப்பா அம்மா விடம் சொல்லாமல் சென்றேன் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று ஆனால் ,சென்னை விமான நிலையத்தில் இறங்கிய வுடன் ஒரு 1000 வாட்ஸ் பல்பு ஆகிவிட்டது எனக்கு . என்ன என்றால் என் பொட்டி படுக்கைகள் எல்லாம் வரவில்லை ...அட போங்க டா என்று ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டு சென்றேன் அடுத்த நாள் இரவு ஒரு விமானத்தில் வந்து சேர்ந்தது பிறகு அதை வாங்கிக்கொண்டு அடித்து பிடித்து அடுத்த நாள் ஊரு போய் சேர்ந்தேன் .ஈரோடு போய் சேர இரண்டு நாள் ஆகிவிட்டது

என்னை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் திட்டும் விழுந்தது , மற்ற படி மிகவும் அருமையான பயணமாக அமைந்தது .இருந்தும் எப்பவும் போல் பல நண்பர்களை பார்க்க முடியவில்லை . பெங்களூர் செல்லலாம் என்று இருந்தேன் . கடைசி நிமிடத்தில் முடியவில்லை .. ஜூன் மாதத்தில் சகோதரர் திருமணம் அதற்கு செல்ல வேண்டும் ஆகையால் இந்த மாதமும் அடுத்த மாதமும் அதிக நேரம் பொட்டி தட்ட வேண்டும் .
கட முட கட முட ....

Friday, January 9, 2009

பிரிவு



உறவுகளை விட்டு பிரியும் ஒவ்வொருவரும் வருத்தப்பட ஒரு நேரம் வரும் என்றால் அது நம் உறவுகளின் மறைவு தான் . நேற்று வரை நம் உறவு என்று நினைத்தவர் இன்று இல்லை , அவர்களோடு பழகிய நாட்கள் அவர்களிடம் இருந்த புரிதல் . என்று அவர்கள் விட்டு செல்லும் சுவடுகள் எளிதில் மறப்பது அல்ல

இப்படி பட்ட சூழலில் பிரிவால் வாடுபவர்களுக்கு தொலைபேசியில் துக்கம் விசாரிப்பது என்பது அதை விட கொடுமை . கண்ணிரால் சொல்ல வேண்டிய வலியை வார்த்தையால் சொல்ல முடியாது , சொல்லவும் வார்த்தை வராது , நம் வருத்தத்தை வெளிபடுத்த முடியாத வலி அதை விட ரொம்ப கொடுமை



கண்ணிர் துளி ஒன்று
நாக்கில் பட
சீசீ ஒரே உப்பாக இருக்கிறது
என்றதாம் நாக்கு
அதற்கு கண்கள் சொன்னதாம்
அது தான் என்னிடம் இருந்த
கடைசித்துளி என்றதாம்
பாளைவனத்தில் பயணிக்கும் ஒரு
வழிப்போக்கனின் கண்கள்

இப்படி தான் நம்மில் பலரின் நிலைமை .. ஆறுதல் என்று நாம் சொல்லும் வார்த்தைகள் . நாக்கில் பட்ட கண்ணிர் துளி ஆகி விடக்கூடாது. என்ற பயத்தில் நான் அவர்களை அழைக்கவே மிகவும் தயங்குகிறேன் அதையும் மீறி அழைத்தாலும் வார்த்தைகளை தேடுவதில் போய்விடுகிறது

வார்த்தைகள் தேடுகிறேன்
வலியை சொல்ல
வழி ஒன்றும் தெரியவில்லை
என் கண்ணிர் கதை சொல்ல !
ஓடி வரும் தூரத்தில் நானும் இல்லை !
ஓ என்று அழவும் யாரும் இல்லை !
இப்படி பல தருணங்களில் தேடுகிறேன்
என் வாழ்க்கை பயணத்தை ..