Friday, October 31, 2008

கரை தேடும் கப்பல்- 4

இருகிய முகத்துடன் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்தார் ரஞ்ஜனியின் அப்பா ...

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு . தன் தந்தையின் அருகில் சென்றான் ரஞ்ஜனியின் அண்ணன் .

“அப்பா .. அப்பா “ என்றான்
“.............................”

“அப்பா அப்பா “என்று அவரை உலுக்கினான் ..

இருகிய முகத்துடன் அவனை பார்த்தார் ஆனால் எதுவும் பேசவில்லை ..

.......................... சிறிது நேர மௌனத்திற்கு பிறகு அவன் பேசத்தொடங்கினான் ..

“அப்பா அவ பண்ணினது தப்பு தான் அதுக்காக நீங்க மனசு ஒடஞ்சு போன எப்படிபா என்று அவரை தேற்றினான் “..சிறிது நேரம் இவன் மட்டும் பேசிக்கொண்டு இருந்தான் , நிமிர்ந்து அவரை பார்த்த பொழுது அவனுக்கு அதிர்ச்சி .அவன் அப்பா கண்ணில் கண்ணீர்..

“அப்பா என்ன அப்பா இது . நீங்க போய் அழுதுக்கிட்டு “ என்று சொல்லும் பொழுதே அவன் கண்களிலும் கண்ணீர் .. அதை பார்த்த ரஞ்ஜனியால் அழுகையை அடக்க முடியவில்லை .

“அப்பா “ என்று கத்திக்கொண்டு அவர் மடியில் படுத்துக்கொண்டு அழ தொடங்கினாள் ரஞ்ஜனி ...

தான் கண்ணீரை துடைத்துக்கொண்டு தான் மகனையும் மகளையும் வாரி அணைத்துக்கொண்டு ..

"என்னை மனித்து விடு கண்ணு .. என் புள்ளைகள் சந்தோசத்தை விட எனக்கு என்ன முக்கியம் நானே போய் மாப்பிளை கேட்கறேன் " என்றார் ...

"இல்லை அப்பா வேண்டாம் அப்பா " என்றால் ரஞ்ஜனி

"ஏமா அப்பாவுக்காக வேண்டாமுன்னு சொல்றிய "

"இல்லை அப்பா நிஜமாலுமே வேண்டாம் அப்பா "

"டேய் நான் உங்க அப்பன் என் புள்ளையோட ஒவ் ஒரு அசைவும் எனக்கு தெரியும் "

"அப்பா " என்று அவரை அனைத்து கொண்டார்கள்

சிறிது நேரத்தில் பழனிசாமி மாமா வீட்டிற்கு சென்று வருவதாக ரஞ்ஜனியின் அப்பா சென்றார் . பழனிசாமி மாமா தான் இரு வீட்டிற்கும் பாலமாக இருப்பவர் . இரு தலைகளும் இவர் பேச்சை கேட்பார்கள் . அவ்ளவு மரியாதை ....

பழனிசாமி மாமாவை அழைத்து அவர் எங்கு இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு , அவர் வீட்டிற்கு சென்றார் .ரஞ்ஜனியின் அப்பா . ரஞ்ஜனியின் அப்பா வருவதை பார்த்து வெளியே வந்து அவரை வரவேற்றார்

“வாங்க மாப்பிளை வாங்க வாங்க ..” என்று
உள்ளே அழைத்து சென்று உட்காருங்க மாப்பிளை என்றார்

“அப்புறம் ஊட்டில் பாப்பாத்தி எப்படி இருக்கு , பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க “

“எல்லாம் நல்ல இருக்காங்க ..”

“என்ன சாப்படறீங்க “

“இல்லைங்க ஒண்ணும் வேண்டாம் இப்ப தான் வீட்டில் காப்பி குடிச்சேன் “

“ஏய் சரசு இங்க வந்து பாரு யாரு வந்திருக்காங்கனு”

“வாங்க வாங்க எப்ப வந்திங்க “

“இப்ப தான்”

“நீங்க பேசிக்கிட்டு இருங்க நான் காப்பி எடுத்துக்கிட்டு வரேன் “ என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்

“அப்புறம் சொல்லுங்க என்ன விசயம் “

“அது வந்துங்க …..” என்று இழுத்தார்

“அட சொல்லுங்க என்ன பிரச்சனை “

“பிரச்சனை எல்லாம் ஒண்ணும் இல்லைங்க “

“வந்து “

“அட சொலுங்க மாப்பிளை”

“வந்து நம்ப பிள்ளையும் , நம்ப மாப்பிளை பையனும் ஒன்னுக்கொன்னு விரும்பறாங்க..”

“அட அது தான் தெரியுமே .. “

“சின்ன சிறுசுக நம்ப சண்டையில் அதுகளை கஷ்ட படுத்தக்கூடாது அது தான் நீங்க கொஞ்ச பேசி பார்த்திங்கன நல்ல இருக்கும் “

“அதுக்கு என்னங்க மாப்பிளை பேசிட்ட போச்சு,இப்போ தான் அந்த பையனும் பேசினான் , உன்கிட்ட பேசச்சொல்லி .. ரொம்ப சந்தோசங்க மாப்பிளை .. போறப்ப எதை வாரிக்கட்டிக்கிட்டு போறம் “

“நாளைக்கு நம்ப புள்ளை குட்டிக சந்தோசமா இருந்தால் போதும் .”

காப்பி கப்பை எதுத்துகொண்டு வந்தார் அத்தை .. “எல்லாம் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன் ரொம்ப சந்தோசங்க .இந்தாங்க காப்பி எடுதுக்கிங்க ...”
காப்பியை குடித்துக்கொண்டே இருவரும் பேசினார்கள் ..

இன்று இரவுக்குள் கர்த்திக்கின் அப்பாவிடம் பேசிவிட்டு எங்கு சந்திக்கலாம் என்று சொல்வதாக சொன்னார் பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு , தான் சென்று வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினர் ரஞ்சனியின் அப்பா

இரவு ஒரு 9 மணிக்கு அழைத்த மாமா , நாளை காலை கார்த்திக்கின் வீட்டிற்கு செல்லலாம் என்று சொன்னார் , காலை ஒரு 8 மணிக்கு ரெடியாக இருக்கும் மாறும் அவர் வது அழைத்து செல்வதாகவும் சொன்னார் ..

நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த ரஞ்ஜனிக்கு ரொம்ப சந்தோசம் ஆனால் அவளுக்குள் ஒரு பயம் இருந்தது இரவெல்லாம் தூக்கம் வரவில்லை , விழித்துக்கொண்டே இருந்தால் ,காலை அனைவருக்கும் முன்பாகவே எழுந்திரித்து , ரெடி ஆகினால் .. மணி 6 , அந்த இரண்டு மணி நேரம் அவளுக்கு எப்படி போகும் என்று அவளுக்கு தெரியவில்லை , ஒவ் ஒரு நிமிடத்தையும் எண்ண தொடங்கினாள்

ரஞ்ஜனியின் அப்பா அம்மா அண்ணனுக்கோ , அவள் செய்யும் ஒவ் ஒரு செயலும் சிரிப்பாக இருந்தது .. அட இருக்காதபின்ன .8 மணிக்கு போறதுக்கு 6 மணிக்கே ரெடியான.. அதுவும் பொண்ணுக .

ஒரு 7:45 க்கு மாமாவும் வந்தாரு , சரி போலாமா என்றாரு ..
அதற்குள் ரஞ்ஜனியின் அம்மா காப்பி போடறேன் என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார் .

“அட பாப்பாத்தி அது எல்லாம் ஒண்ணும் வேண்டாமா அங்க போய் குடிச்சுக்கலாம் ..” என்றார் .

“சரி போகலாமா “ என்ற உடனே ரஞ்ஜனியும் வந்தாள்

“அட கண்ணு நீ எங்க வர நீ இங்கையே இரு நாங்க போய் பேசிட்டு வரோம் “என்றார் மாமா ..

ரஞ்ஜனிக்கு இடி விழுந்தது போல் இருந்தது ..” இல்லை மாமா நானும் வரேனே” என்றாள்

“இல்லை கண்ணு நாங்க போய் பேசிட்டு வரோம் நீ இங்க இரு “என்று சொல்லிவிட்டு ரஞ்ஜனி அம்மா , அப்பா அண்ணன் மற்றும் மாமாவும் சென்றார்கள்


நொடிகள் ஒவ் ஒன்றும் நொண்டி அடித்தது
மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தாலும்
அவ்வப்போது தேனிக்கள் கொட்டுவது போல்
ஒரு வலி அவளுக்கு எப்பொழுதும் இருந்தது

வருடங்கள் காத்திருந்த பொழுது
இல்லாத வலி
இந்த நொடிகளில் அனுபவித்தாள்

மாமனுக்கும் மச்சானுக்கும் அவர்கள் பிள்ளைகளின் பிடிவாதமும், வம்சம் பற்றிய கவலை வந்து விட்டது ஆகையால் பேச்சு வார்த்தை .. சுமுகமாக முடிந்தது

கார்த்திக்கின் வீடு இன்று காலை .

பாகம் -2

வீட்டிற்குள் நுழைந்த கார்த்தி்க்கு . அதிர்ச்சி ....

ஆம் இன்ப அதிர்ச்சி .. எப்படி இந்த பிரச்சனையை சமாளிக்க போறோம் .. அப்பா என்ன சொல்வாங்க . மாமா என்ன சொல்வாங்க , ரஞ்ஜனி கிடைப்பாளா என்ற பல சிந்தனைகளோடு வந்த அவனுக்கு .. இவர்களை பார்த்தவுடன் என்ன செய்வது இன்று புரியவில்லை ...

பொது இடம் என்று கூட பார்காமல் அவனை அடித்த ரஞ்ஜனியின் அப்பா அவனை வாங்க மாப்பிளை என்றார் ..பார்க்கும் இடம் எல்லாம் இவனை முறைத்துக்கொண்டு இருந்த ரஞ்ஜனி அண்ணன் புன்னகைத்தான். அட என்ன நடக்குது என்று யோசிப்பதர்குள் ..

“என்ன டா எங்க மருமகளை தேடறையா” என்று அவன் சித்தப்பா கிண்டல் செய்தார் ...
“இல்லை இல்லை “ என்று தலை அசைத்தான்

“மருமக வீட்டில் இருக்க ஒரு நல்ல நாளா பார்த்து பெரியவங்க எல்லாம் போய் பார்த்து நிச்சயம் பண்ணிடலாம் . என்ன நீ என்ன டா சொல்ற
“என்றார் .

“அட அவன்கிட்ட என்ன கேட்டுக்கிட்டு “

“அவன் தான் எப்பனு காத்துக்கிட்டு இருக்கானே “. என்று சொல்லி அனைவரும் சிரித்தார்கள்

இவன் அசடு வழிந்து கொண்டே வீட்டிற்குள் நுழைத்து பையை வைத்துவிட்டது . பின் கதவு வழியாக சென்று வண்டியை எடுத்துக்கொண்டு ரஞ்ஜனி விட்டை நோக்கி பறந்தான் ...
கப்பல் கரையை கடந்தது ...................

Tuesday, October 28, 2008

பிச்சை எடுக்கும் அமெரிக்கா

இன்று காலை என்னால் தூங்க முடியவில்லை . ஐயா ஷேக் சாமி பிச்சை போடுங்க ஷேக் சாமி என்று அமெரிக்கர்களின் சத்தம் வலைகுடா எங்கும் கேட்டது . பேப்பரை பார்த்த பொழுது . அடி சக்க சந்தோஷமாக இருந்தது ஏன் என்றால் அமெரிக்கா வளைகுடா நாட்டிடம் பிச்சை கேட்டுள்ளது , இதற்கு ஒவ் ஒருத்தனும் எவளவு பிச்சை போட்டார்கள் தெரியுமா


saudi arabia - 2896

kuwait - 2136

uae - 8756

qatar - 506

oman -26

[எல்லாம் பில்லியன் டாலர்ஸ் ]இது தான் ஆசியாவின் பொற்காலம் இப்பொழுது முழித்துக்கொண்டால் தான் உண்டு . இல்லை என்றால் , இன்னமும் வரும் காலத்தில் நாம் அவர்களை சார்ந்து தான் இருக்க வேண்டும் . இங்கு UAE யில் டாலர் மதிப்பு எவளவு இருந்தாலும் இங்கு மட்டும் 1 Dollar = 3.65 AED தான் , இது UAE க்கும் அமெரிக்காவிற்கும் உள்ள ஒப்பந்தம் .


இங்கு ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் சதாம் உசேன்யை ஏன் அமெரிக்கா கொன்றது , இன்று ஏன் ஈரான் பக்கம் அதன் கவனத்தை திருப்புகிறது ,, ஏன் என்றால் இவர்கள் எண்ணை வர்த்தகத்தை euro விற்கு மாற்றினார்கள் அது தான் முக்கிய காரணம் , ஈரானில் kish என்ற ஒரு இடம் உண்டு இங்கு தான் euro வர்த்தகத்திர்காக ஒரு மிக பெரிய அலுவலகத்தை தொடங்கி இருக்கிறது ஈரான். இது தான் அமெரிக்காவின் எரிச்சலுக்கு காரணம் .


இன்னோரு உண்மையும் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே . ஒரு நாட்டின் பணவீக்கம் அதன் தங்கத்தின் கை இருப்பை பொருத்து தான் என்பது அனைவருக்கும் தெரியும் , இன்று நம்ப ஊரில் ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா , தங்கத்தை வெளிட்டுள்ளது இந்த சூழ்நிலையை சமாளிக்க , ஆனால் அமெரிக்கா வில் இருப்பது எல்லாம் பேப்பர் கோல்ட் அதாவுது டாலர் தான் அது தான் இந்த பிரச்சனைக்கே காரணம்


என்னங்க பண்றது இங்கு இருக்கும் மக்களிடம் ஒற்றுமை இல்லை , அப்படி இருந்தால் . இந்த நுற்றாண்டு நாம் கைகளில்

தீபாவளி

இதை சனி கிழமை இரவே எழுதிவிட்டேன் ஆனால் பதிவிட மறந்து விட்டேன்

மக்களே நேற்று முதல் தீபாவளி விடுமுறை என்று கேள்விப்பட்டேன் எலோருக்கும் என் வாழ்த்துக்கள் . official யாகவும் unofficial யாகவும் தலை தீபாவளி கொண்டாடும் நண்பர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் .

புது மாப்பிளைகளா [official] இது தான் சான்ஸ் இந்த தீபாவளிக்கு கிடைக்கும் மரியாதை அடுத்த தீபாவளிக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது ஆகையால் உங்கள் சீன் எல்லாம் இந்த தீபாவளியோடு முடித்துக்கொள்ளுங்கள் .

ஓல்ட் அங்கிள் . அடி வாங்கி அடி வாங்கி உங்களுக்கு பழக்கம் ஆகியிருக்கும் அதனால் உங்களுக்கு நிறைய சொல்ல வேண்டியது இல்லை .இருந்தாலும் நம்ப வடிவேலு மாதிரி சூனா பாணா maintain பண்ணுங்க .

என்னுடைய தீபாவளி , நாளை அல்லது நாளை மறுநாள் இங்க எதாவுது ஒரு புது படம் ரிலீஸ் ஆகும் அதை போய் பார்த்துட்டு .. சங்கீதாவோ அல்லது செட்டினாட்டிலோ போய் சாப்பிட்டால் முடிந்துவிடும் .இப்படி எழுதினேன் ஆனால் என்ன நடந்தது , காலையில் ஜத்தார் [இது ஒரு அரபிக் ரொட்டி ] சாப்பிட்டு விட்டு office க்கு ஓடினேன் அப்படியே போய் விட்டது இரவு வரை , ஆனால் வீட்டில் கேட்டவர்களிடம் பொங்கலும் வடை பலகாரம் தின்னதாக ஒரு கதை விட்டு வைத்தேன் , இரவில் வீட்டில் ஒரு நண்பர் பொங்கலும் உளுந்து வடையும் செய்தார் , நன்றாக இருந்தது . இப்படி தான் என் தீபாவளி .

ஒரு பிளாஷ் back .

பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது தீபாவளிக்கு ஒரு 20 நாள் முன்பாகவே அதன் பற்றிய பேச்சு பள்ளிக்கூடத்தில் துவங்கிவிடும் , புது டிரஸ் , பட்டாசு மற்றும் நம் பள்ளி எத்தனை நாள் விடுமுறை விடுவார்கள் .. பக்கத்து பள்ளிக்கு எத்தனை நாள் விடுமுறை என்ற பல விவாதங்கள் தொடங்கிவிடும் .. வகுப்பறை கரும் பலகையில் தீபாவளி countdown வேறு

தீபாவளிக்கு ஒரு நாள் முன்பே நாங்கள் எங்கள் அம்மாயி [அம்மாவோட அம்மா ] வீட்டிற்கு செல்வோம் காலை ஒரு 5 மணிக்கு எழுந்திரித்து குளித்துவிட்டு கோவிலுக்கு செல்வோம் . இந்த நேரத்தில் மனம் எல்லாம் வீட்டில் இருக்கும் பட்டாசு மேல் தான் இருக்கும் ஆனால் கோவிலுக்கு சென்று வந்த பிறகு தான் வெடிக்க முடியும்..

அதைவிட தீபாவளி முடிந்து அடுத்த நாள் பள்ளிக்கு தீபாவளி டிரஸ்யில் செல்லலாம் . அன்று ஒரு பாடமும் நடக்காது .. வரும் ஆசிரியர்கள் எல்லாம் "Tell about your Diwali experience ?" என்று கேள்வி கேட்பார்கள் ... ஒரு சில பேர் Essay எழுத சொல்வார்கள் Essay யின் தலைப்பு "My Diwali " . அட கொடுமையே இதுக்கு பாடமே எடுக்கலாம் என்று எனக்கு தோன்றும். இப்படி இருந்தது ஒரு கலாம் .பிறகு ..

கல்லூரி காலத்தில் ஏனோ தானோ என்று எழுந்திரிச்சு குளித்துவிட்டு .. கோவிலுக்கு செல்லவேண்டும் அதன் பிறகு நல்ல சாப்பாடு. பிறகு என்ன தொலைக்காட்சியில் / தொல்லைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி இப்படி கழிந்தது ஒரு கலாம் ..

ஆனால் இப்பொழுது ஈமெயில் "Happy Diwali " என்று அனுப்பிவிட்டு வேலையை பார்க்க போய் விடுகிறேன் .. உங்கள் அனைவருக்கும் "Happy Diwali "

Saturday, October 25, 2008

தூக்கம் தொலைத்த இரவுகள்

எத்தனையோ
தூக்கம் தொலைத்த இரவுகளில்
நேற்று இரவும் ஒன்று
எப்படி புரண்டு படுத்தும்
தூக்கம் வரவில்லை
இந்த வாழ்க்கை பயணத்தில்
இன்று வறை நான்
தொலைத்தது கணக்கில் அடங்காதது
ஆனால் தூக்கத்தை
எங்கு தொலைத்தேன்
எப்படி தொலைத்தேன்
என்று எனக்கு தெரியவில்லை
ஆனால் அந்த இரவில்
தூக்கத்தை தேடுவது என்பது
மூக்கனாங்கயிறு
இல்லாத முரட்டு காளையை
அடுக்குவது போல்
இதில் பல சமையம் குத்துப்பட்டு
தோற்று விடுகிறேன்

Friday, October 24, 2008

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

நேற்று என் துறை தலைவரை பார்த்தேன் .. ஒரு 8 வருடத்திற்கு பிறகு .எனக்கு 1997 யில் இருந்து அவரை தெரியும் .. 2000 த்தில் நான் கல்லூரி [polytechnic ] முடித்த பொழுது .. எங்கள் கல்லூரி கடைசி நாள் அன்று அவரும் துறை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் .. அப்பொது அவரிடம் நாங்கள் கேட்ட பொழுது அவர் அதற்காண காரணத்தை சொல்லவில்லை .. சொந்த காரணம் என்று நினைத்துக்கொண்டோம் ...அதன் பிறகு 2003 வருடம் அவருடைய இன்னொரு நண்பர் மூலம் அவர் சிங்கப்பூரில் இருப்பதாக தெரிந்து கொண்டேன் அவருடைய ஈமெயில் முகவரியை வாங்கி .. மெயில் அனுப்பினேன் ஒரு மாதம் கழித்து ஒரு பதில் வந்தது .. அதன் பிறகு அவப்பொழுது அவரும் அழைத்தார்.. ஆனால் சந்தித்துக்கொண்டது இல்லை .. அதன் பிறகு 2005 சிங்கப்பூரில் இருந்து Australia சென்று விட்டதாக ஒரு நாள் அழைத்தார் .. நேற்று தான் அவரை துபாயில் சந்தித்தேன் ஒரு நாள் துபாயில் transit அவருக்கு . நேற்று முழுவதும் அவருடன் இருந்தேன் .. அன்று கண்டிப்பாண ஆசிரியர் இன்று ஒரு நல்ல நண்பர் என்று சொல்லாம் ..

துபாயில் இருப்பது ஒரு வசதி என் நிறைய நண்பர்களை இங்கு தான் transit யில் பார்ப்பேன் . நண்பர்கிளிடம் பேசுவதற்கு நிறைய இருக்கும் .. ஆனால் எதை பேசினாலும் கடைசியில் பேச்சு கல்லூரி வாழ்க்கையில் வந்து தான் நிற்கும் .. ஓவ் ஒருத்தனுடைய பட்டப்பெயரை சொல்லி அவன் எங்கு இருக்கான் இவன் எங்கு இருக்கான் என்று பேச்சு தொடரும் ..

பிறகு திருமணம் ஆகாதவனாக இருந்தால் கல்லூரி தோழிகள் பற்றி அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கேட்பது உண்டு ,[ ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று ஒரு பாட்டு ஓடிக்கொண்டே இருக்கும் ] . பல உள்விவகாரம் இருக்கும் பிறகு ஒரு enquiry போட்டால் சொல்வார்கள் . பாவி மக்கா காலேஜ்யில் படிக்கும் பொழுது அதை பத்தி மூச்சே விட்டிருக்க மட்டார்கள்

அதைவிட முக்கியமானது நண்பர்களில் பலருக்கு திருமணம் ஆகிவிட்டது .. அவர்களின் திருமணம் வாழ்க்கை .. அவன் குழந்தைகளை பற்றி பேசுவது .. அது ஒரு சொல்ல முடியாத அனுபமாக இருக்கும் .. இதை எல்லாம் பேசி முடிப்பதற்குள் நேரம் ஆகிவிடும் அவர்களும் கிளம்பி விடுவார்கள் .. ஒரு 10 மணி நேரத்தில் பத்து வருட கதை பேசுவோம் . பிறகு அவர்களை வழி அனுப்பிவிட்டு நான் ஒரு இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் .கல்லூரி நினைவுகளில் அந்த இரண்டு மணி நேரம் கரையும் .....

Thursday, October 23, 2008

கரை தேடும் கப்பல்- 3

பாகம் 1 பாகம் 2

நேற்று காலை ரஞ்ஜனி வீடு

கார்த்திக்கு மெயில் அனுப்பிவிட்டு . ரஞ்ஜனி தன் அம்மாவை தேடினால் , அம்மா சமையல் அறையில் இருப்பது தெரிந்தது .அம்மாவிடம் சென்று ...

"அம்மா உன் கூட பேசணும் "

"-----------------------"

"அம்மா உன்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன் "

"தெரியுது சொல்லு "

"இங்க வா .."

"என்னடி வேணும் சொல்லு ... சமையல் பண்ணிக்கிட்டு இருக்கேன்லே"எதோ சொல்ல தயங்கினாள் ..

"அம்மா "

"அட சொல்லு "

"அம்மா நான் மாமா வீட்டுக்கு போறேன் "

"-----------------"

தன் அம்மாவால் எதுவும் பேசமுடியவில்லை .. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதவராக ரஞ்ஜனியை பார்த்தார் . [ரஞ்ஜனியின் வீட்டிற்கும் கார்த்திக்கின் வீட்டிற்கும் பல வருடங்களாக குடும்ப பகை , அதன் காரணமாக தான் இருவரின் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு]


"என்னடி சொல்ற ... என்ன பைத்தியம் கித்தியம் பிடிச்சிடுச்சா ... "

"இல்லை அம்மா நான் முடிவு பண்ணிட்டேன் "

"என்னத்த முடிவு பண்ணிட்ட .. முடிவு பண்ணிட்டாலம் முடிவு "

"எங்கடி வந்திச்சு இந்த தைரியம் "

"உங்க அப்பா காதில் கேட்ட என்ன ஆகும் தெரியும்லே " என்று சொல்லி விட்டு அழ தொடங்கினார் ..

அதற்குள் ரஞ்ஜனி தன் அறைக்கு திம்பினாள் .. அவள் அம்மாவும் ஏதோ சொல்லிக்கொண்டே அவள் பின்னால் வந்தார் .இதை அத்தனையும் பொருட்படுத்தாமல் .. தன் துணியை எடுத்து வைத்தால் ரஞ்ஜனி ..


"அடி பாவி நான் இங்க பொலம்பிக்கிட்டு இருக்கேன் நீ என்னடி நா துணியை எடுத்து வெச்சுக்கிட்டு இருக்க "

"அம்மா நான் ஒண்ணும் ஓடி போகல , நான் என் மாமா விட்டுக்கு தான் போறேன் ..எனக்கு மாமாங்கிறதை விட உன் அண்ணன் விட்டுக்கு தான் போறேன் "

"அடியே அது இல்லடி பிரச்சனை .. உங்க அப்பாவுக்கு தெரிந்தால் என்ன ஆகும் "

"நான் அதை பத்தி கவலை படலை "

"அய்யோ என்ன பேச்சிடி பேசற .. "

"உனக்கு எப்படி இப்படி தைரியம் வந்தது "

".........................."

"அய்யோ நான் என்ன பண்ணுவேன் .. நான் பெத்தவளும் என் பேச்சை கேட்க மாட்டென்கிறாள் .. கட்டிக்கிட்டவனும் என் பேச்ச கேடக மாட்டென்கிறான் நான் என்ன தான் பண்ணுவேன் .... "

"அம்மா சும்மா இரும்மா... பொலம்பாத .. "

"ஏண்டி நான் பேசறது உனக்கு பொலம்பற மாதிரி இருக்க ... அய்யோ சாமி மகமாயி நீ தான்பா காப்பாத்தனும்"...

" சரி அம்மா நான் மாமா வீட்டுக்கு போயிட்டு வறேன் "

"அடியே நெசமா தான் செல்றியா... .... "

"அப்புறம் இவ்வளவு நேரம் நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் "

"அடியே வேண்டாம்டி.. உங்க அப்பன் வந்தா.. பிரச்சனை ஆவுன்டி "

"என்ன பிரச்சனை ஆனாலும் பார்த்துக்கிறேன் "

"அடியே நில்லுடி வயக்காட்டுக்கு போயி இருக்க உங்க அப்பா வந்தரட்டும் "

"வந்த அவரு மட்டும் என்ன சொல்ல போறாரு .. வேண்டாமுன்னு தான் சொல்ல போறாரு " என்று சொல்லி வாயை மூடுவதற்குள்..அவள் அண்ணன் விட்டுற்குள் நுழைந்தான் ..

".................................."

ரஞ்ஜனியும் அவள் அம்மாவும் எதுவும் சொல்லவில்லை ..இருவரும் அமைதியாக இருந்தார்கள் . அவள் அண்ணனுக்கோ சூழ்நிலையின் காட்டம் தெரிந்தது ஆனால் அவனால் என்ன என்று யூகிக்க முடியவில்லை .

என்ன பிரச்சனை என்று ரஞ்ஜனியை முறைத்துக்கொண்டே தான் அம்மாவிடம் கேட்டான்

முந்தானியால் வாயை அடைத்துக்கொண்டு ரஞ்ஜனியை பார்த்துக்கொண்டே மீண்டும் அழ தொடங்கினார் அவள் அம்மா .

அவள் அண்ணனுக்கோ இருப்புகொள்ளவில்லை .."என்ன தான் பிரச்சனை என்று கத்தினான் "

"………………………..................."

" கேட்கறேன்ல என்ன தான் பிரச்சனை”

"நான் மாமா வீட்டுக்கு போறேன்”

"என்னது மாமா வீட்டிக்கு போரையா”

"ஓ நீங்க அந்த அளவுக்கு பெரிய மனுசங்க அயிட்டிங்க ...."

“-------------------------------------“சிறிது நேரம் வெறும் மௌனத்திர்கு பிறகு அவள் அண்ணா கேட்டான்

“அப்பா கிட்ட சொன்னியா .. “ என்றான்

"இல்லை " என்று தயங்கி தயங்கி சொன்னாள்

"உனக்கு அப்பா அம்மாவை விட அவுங்க தான் பெருசா போயிடுச்சு இல்லை..."

"இங்க பாரு எப்ப நீ அந்த விட்டுக்கு போறேண்ணு முடிவு பண்ணிட்டையோ இங்க இருக்க கூடாது .. கெளம்பு நீ கெளம்பு "

"இல்லை அண்ணா அது வந்து .."

"என்ன அது வந்து போய் ..."

" கெளம்பு நீ முதலில் கெளம்பு "

"நாளைக்கு எதாவது எங்களை பற்றி செய்தி கேட்டினா ஒரு எட்டி வந்து பாத்துட்டு போ " என்றான் ரஞ்ஜனியின் அண்ணன் தழு தழுத்த குரலுடன்

"அண்ணா " என்று அழ தொடங்கினாள் ரஞ்ஜனி


சிறிது நேரத்தில் வயக்காட்டுக்கு சென்று இருந்த அவள் அப்பா வீட்டுக்கு வந்து விட்டார் . நடந்ததை எல்லாம் தான் அம்மா , அப்பாவிடம் சொல்லிவிட்டார் .கேட்டுவிட்டு எதுவும் பேசவில்லை ..

ரஞ்ஜனியை ஒரு முறை பார்த்தார் . அந்த பார்வை ரஞ்ஜனிக்கு புதுமையாக இருந்தது அதன் அர்த்தம் புரியாதவளாக நின்றாள் ரஞ்ஜனி .

இறுகி போன முகத்துடன் .நெஞ்சில் கை வைத்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்தார் ரஞ்ஜனியின் அப்பா…

(தொடரும் .....)

Tuesday, October 21, 2008

பொருளாதார புயலில் இருந்து தப்பிக்குமா வளைகுடா

துபாய் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று .. இங்கு இருக்கும் தொழில் முறை circular flow எனலாம் ..முதலில் எண்ணையை கண்டு பிடித்தான் வெள்ளைக்காரன் . எண்ணை கிணத்தில் [Oil and chemical industry ] வேலை செய்ய வெளிநாட்டில் இருந்து ஆட்கள் வந்தார்கள் .. அவர்கள் தங்குவதர்காக வீடுகள் கட்டப்பட்டன [Real Estate industry ] இதனை நம்பி கட்டுமான துறை வளர்ந்தது [construction industry ] , இந்த மூன்று துறைகளையும் வளர்க்க உள் கட்டமைப்பு தானாக வளர்ந்தது [infrastructure industry]. இந்த நான்கையும் சுற்றி தான் இதர துறைகள் என்று இருந்தது 2000 வரை . இதில் எங்கு அடிவாங்கினாலும் அது மற்ற துறைகளையும் பாதிக்கும்

2000 த்திற்கு பிறகு .. துபாயை ஒரு வர்த்தக நகரமாக[Retail] மாற்ற நினைத்தார் துபாயின் மன்னர் .. அதன் விளைவு தான் துபாயின் இந்த அசுர வளர்ச்சி .. அதுவும் முக்கியமாக துறைமுகங்களும் , கட்டுமான துறை .

அதன் விளைவு .. வெள்ளையர்கள் இங்கு நிறைய முதலிடு செய்தார்கள் அதுவும் முக்கியமாக Real estate துறையில் . இன்று உலகையே ஆடவைத்திருக்கும் இந்த பொருளாதார புயல் துபாயையும் விட்டுவைக்க வில்லை .. அவர்கள் ஊரில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக இங்கு இருந்த முதலிடுகளை வெளியே எடுக்க தொடங்கிவிட்டார்கள் சில கம்பனிகள் .


சில கம்பனிகள் முதலிடுகளை தர்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டார்கள் அதன் விளைவு . Real Estate துறையில் பெரும் விழ்ச்சி .. துபாய் பங்கு சந்தியில் சென்ற வாரத்தில் மட்டும் ஒரே நாளில் 230 பில்லியன் டிர்தம்ஸ் நிஷ்டம் .அமெரிக்காவில் மூடப்பட்ட பல நிதி நிறுவங்களில் முதலிடு செய்தது எங்கு இருக்கும் ஷேக்குகள் தான் அதிகம் .

சென்ற மாத துவக்கத்தில் ஒரு டிர்தம்ஸ் 11.35 ரூபாய் யாக இருந்தது ஆனால் இன்று நாம் பணத்தில் மதிப்பு குறைந்து 13.15 யாக இருக்கிறது இது நம் நாட்டில் வீசும் பொருளாதார புயலும் தான் காரணம் . இண்ணமும் வரும் காலத்தில் அதன் மதிப்பு 15 யை தொட்டாலும் தொட்டுவிடும் என்று கூரப்படுகிறது .இது இங்கு வேலை செய்யும் NRI களுக்கு சந்தோஷமான விசையம் தான் . ஆனால் முதலிடு செய்தவர்களுக்கு இது ஒரு சொதனைக்காலம் தான் . இந்த பதிவை நான் ஏன் போட்டேன் என்றால் இன்று காலை பேப்பரை பார்த்தால் .. கூகிள் , யாஹூ மற்றும் ebay யில் layoff என்ற தகவல் ,இன்று இருக்கும் சூழ்நிலையில் வளைகுடா ஒரு பாதுகாப்பான இடம் தான் .. பார்ப்போம் வரும் கலாம் எப்படி இருக்கும் என்று. ஆனால் ஒரு நல்ல விசையம் என்ன வென்றால் மற்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது இங்கு layoff குரைவு தான் . அதற்க்கு முக்கிய காரணம் இன்னமும் ஒரு 50 வருடத்திற்கு இங்கு எண்ணை இருக்குமாம். அது ஒரு நிம்மதி பெருமூச்சு ...

Friday, October 17, 2008

கரை தேடும் கப்பல்- 2

என் உயிர் ரஞ்ஜனி ,


நான் நலம் தான் , நீ வருத்தப்படாதே அன்று நடந்த சம்பவத்தை பற்றி நான் வருத்தப்படவில்லை ... ஏன் என்றால் அது பெற்றவர்களின் ஆதங்கம் ... ஆனாலும் ஒரு சிறு வருத்தம் இருக்க தான் செய்கிறது .. அது காலப்போக்கில் மறைந்து விடும் என்று நம்புகிறேன்

உயிரை விடுவது நீயாக இருந்தாலும்
பிணமாகப்போவது நானாக தான் இருக்கும்


இதில் வேடிக்கை என்ன தெரியுமா
நம்மை பிரித்த
உன் அண்ணனுக்கோ பிரிவின்
வலி தெரியவில்லை


உன் அப்பனுக்கோ
பிள்ளை மனம் புரியவில்லை


சாதி சனம் எல்லாம் ஒண்ணு தான்
ஆனால் மாமன் மச்சான்
மல்லு கட்டிக்கிட்டு
மனசு எறங்க மாட்டேங்றாங்க


கண்ணே காதலில்
எப்பொழுதும்
பிள்ளை மனம் பித்து
பெற்ற மனம் கல்லு தான்


காலம் கனிந்து வரும் காத்திரு
கண் மணியே !


---காதலுடன்
கார்த்திக்


இந்த மெயிலை அனுப்பினா கையேடு .. இரண்டு நாளுக்கு விடுப்புக்கு விண்ணப்பித்தான்.. தன் சொந்த காரணங்களுக்காக என்றான் நாகரிகம் கருதி அவன் சைட் மேனேஜரும் அதை பற்றி மேலும் பேச விரும்பவில்லை .. அதன் பிறகு விஜயலக்ஷ்மி Travels க்கு அழைத்து அன்று இரவுக்கு ஈரோட்டுக்கு ஒரு டிக்கெட் புக் செய்தான் [வார தொடக்கம் என்பதால் டிக்கெட்டும் இருந்தது ]... இரவு 9: 30 க்கு திநகர் பஸ் நிலையம் எதிரில் இருந்து பஸ் புறப்படும் என்றான் எதிர்முனையில் .


"சரி நான் வந்து விடுகி்றேன் என்று சொல்லிவிட்டு . "போனை வைத்த அவனுக்கு ஒரு வேலையும் ஓட வில்லை ...


இது அத்தனையும் கவனித்து கொண்டு இருந்த .. அவன் நண்பன் செந்தில் ...


"மச்சி வா ஒரு தம் போட்டுட்டு வரலாம் .. " என்றான் ..


வேண்டா வெறுப்பாக அவனுடன் சென்றான் கார்த்திக் ..


"டேய் what’s the problem man ? காலையில் இருந்து ஒரே tension ஆ இருக்க ..."

"இல்லை டா மச்சி ஒன்னும் இல்லை .."


"ஒன்னும் இல்லாமதான் ரெண்டு நாள் லீவ் apply பண்ணினையோ..."


"..............."


"டேய் எதாவுது பேசு டா ..."


".................."


அதற்குள் தம்மு கடை வந்து விட்டது ..


"அண்ணா ரெண்டு கிங்ஸ் , ரெண்டு ஹால்ஸ்,, ஒரு வாட்டர் பாக்கெட் " .. என்றான் .. அதை எடுத்துக்கொண்டு கடைக்கு பின்னால் சென்றார்கள் ..
ஹால்ஸ்யை வாயில் போட்டுக்கொண்டு .. சிகரெட்டை பற்ற வைத்தார்கள் . அப்படியே பேச்சை தொடாங்கினான் செந்தில்


"டேய் இப்படி ஒண்ணும் சொல்லாமல் இருந்தால் என்ன டா அர்தம்.. எதனாவுது சொல்லு டா .. "


"இல்லை டா ஒண்ணும் இல்லை .."


"எதுவும் இல்லாம தான் இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி உட்காந்து இருக்க .."


"இல்லை டா அது வந்து ரஞ்ஜனி அவுங்க அப்பா மறுபடியும் problem பண்றாரு டா"


"என்ன சொல்றாரு . மாமா .."


"வேற மாப்பிளை பாக்கராரு.."

"எல்லாமும் தெரிந்தே ஏன்டா அந்த ஆளு இப்படி பண்றான் ஏன்டா உங்க மாமா என்ன நிறைய தமிழ் படம் பார்ப்பாரோ .. "

"எல்லாம் ஒரு வீராப்பு தான் " ஹும் என்ன நடக்கும்னு தெரியல டா அது தான் நாளைக்கு ஊருக்கு போறேன் , அப்பாக்கிட்ட சொல்லி ,, பெரிய அப்பாக்கிட்ட பேச சொல்லி இருக்கேன் .. பெரியப்பா சொன்னா ரஞ்ஜனி அவுங்க அப்பா கொஞ்சம் கேட்பாரு அது தான் .. "

"ஏன்டா இதுக்கு தான் காலையில் இருந்து இளவு வீட்டில் உட்காந்து இருக்கிற மாதிரி உக்காந்து இருக்கையோ .."

"கூல் டா " மச்சி ஒண்ணும் கவலை படாதே எல்லாம் நல்லபடியா நடக்கும்.. அப்படியும் இல்லை என்றால் ஒரு action plan யை போடுவோம்

அந்த மாதிரி எல்லாம் தேவை இருக்காது என்று நினைக்கிறேன் .

அப்படியே வேண்டும் என்றாலும் சொல்லு டா மச்சி

"தேங்க்ஸ் டா .." ..

வாட்டர் பாக்கெட் எடுத்து கையையும் வாயையும் கழுவிக்கொண்டு .. கடைகாரரிடம் அண்ணா account என்று சொல்லி விட்டு .. தங்கள் இருக்கைக்கு திரும்பினார்கள் இருவரும் ...


மீண்டும் தன் கணினியை திறந்து .. அப்படி இப்படி என்று நெளிந்ததில் மணி 12: 30 ஆனது .. சாப்பிட சென்று விட்டு ஒரு 2 மணி சுமாருக்கு வந்து அவன் பார்த்துக்கொண்டு இருந்த சில முக்கியமான வேலையை .. செந்திலிடம் கொடுத்து விட்டு .. நாலு மணி சுமாரில் செந்திலிடமும் தன் சைட் மேனேஜர்யிடம் சொல்லிவிட்டு .. தன் அறைக்கு கிளம்பினான் கார்த்திக்
இரவு 8 மணிக்கு கிளம்பி ஒரு 9 மணி அளவில் திநகர் வந்து சேர்ந்தான் ..திநகர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள .. கையேந்தி பவனில் சாப்பிட்டு விட்டு .. விஜயலக்ஷ்மி travels முன்பாக சென்ற பொது .. பஸ்சும் சரியாக வந்தது .. பஸ்ஸில் ஏறி தன் இருக்கையை பார்த்து அமர்ந்தான் ...


பேருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் .. தூங்கி விட்டான் ..காலை 5 : 45 க்கு ஈரோடு பஸ் நிலையம் வந்து சேர்ந்தது ..அங்கு இறங்கி .. தன் ஊருக்கு செல்லும் பேருந்தை பிடித்து வீடு போய் சேர 8 மணி ஆனது .. அதற்குள் பழனிச்சாமி பெரியப்பாவும், சித்தப்பாவும் வந்து இருந்தார்கள் வீட்டில் ஒரே கூட்டம் ...

வீட்டிற்குள் நுழைந்த கார்த்தி்க்கு .பெரும் அதிர்ச்சி ..

Tuesday, October 14, 2008

சாப்ட்வேர் இஞ்சினியர்களுக்கு சில டிப்ஸ்

இது நம்ப வெட்டிப்பயல் அவர்களின் பதிவிற்கு சில add-ons
  • உசார் உசார் ஐயா உசார் FAKE போட்டவங்கெல்லாம் உசார்
  • APRISEL சரி இல்லை என்று ஓவர் சீன் போட வேண்டாம் ..அந்த OFFER இருக்கு இந்த OFFER இருக்கு என்றால் .. சரி தம்பி டாட்டா பாய் பாய் என்று சொல்ல வாய்ப்புக்கள் அதிகம் .
  • கரெக்ட் டைம்க்கு ஆபீஸ் போங்க ..
  • கொஞ்சம் வொர்க் பண்ற மாதிரி சீன் CREATE பண்ணுங்க .... ஆனால் உசார் .. சீன் CREATE பண்றோமேன்னு தெரியக்கூடாது..
  • ஆபீஸ்லே இருக்க கூடிய மொக்க தனமான ரூல்ஸ் எல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ளுங்க , அப்படியே follow பண்ற மாதிரி ஒரு சீன் ...
  • ஷேர் யில் கொஞ்சம் சில்லரை பார்த்துக்கொண்டு இருந்த நண்பர்களே .. உங்களுக்கு இது கெட்ட காலம் ..ஆகையால் .. முதலிட்டை குறைக்கவும் .
  • week end பார்ட்டியை குறைக்கவும் . அப்படியும் முடியா விட்டால் பார்ட்டியை ரூம்லே வைத்துக்கொள்ளவும் வெளியே ஹோட்டலுக்கு செல்லவேண்டாம் ..
  • நம்ப வெட்டி officer சொன்ன மாதிரி .. "வரவு எட்டணா, செலவு பத்தனா " பாட்டை தினம் தினம் கேட்கவும் .
  • ஏற்கனவே சாப்ட்வேர் இன்சினியர் றால் தான் எல்லா விலையும் எகிறி போய்டுச்சுன்னு மக்கள் மத்தியில் பெரும் அவப்பெயர் இருக்கு .. முடிந்த அளவு அது வளராமல் பார்த்துக்கொள்ளவும்
  • இந்த பிரச்சனை அமெரிக்காவில் Election முடியும் வரை இப்படி தான் இருக்கும் . அதுவும் அங்கு எவன் ஆட்சிக்கு வருகிறானோ அதை பொருத்து தான் .. இந்த பிரச்சனை கொஞ்சம் Stablish ஆகும்

அப்புறம் என்னங்க சொல்ல போறேன் .. எப்பவும் உங்கள் ஆதரவும் நட்பும் தான் ..

Saturday, October 11, 2008

கரை தேடும் கப்பல்- 1

ஐயா சாமி இதன் மூலம் அனைத்து மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் .. என்னவென்றால் ..............................
அட கொஞ்சம் struck ஆகுது ......

ஹிம் ஓகே

அட நில்லுங்க அப்பா ஒரு பில்டப் வேண்டாமா ....

ஐயா சாமியோ சாமியோ நானும் ஒரு தொடர் கதை எழுதறேன் அதனால இந்த பிளாக்கர் உலகத்தின் சுஜாதாகளே , அனு ராதாகளே ... என்னை மனித்து விடுங்கள் ...படித்துவிட்டு என்னை திட்ட வேண்டும் என்றால் அப்படியே கமெண்ட்ஸில் திட்டிவிட்டு போங்க .சூனா பானா இருந்தாலும் .நான் அதுக்கு எல்லாம் பயபடுகிற ஆளு இல்லைங்க சாமியோ ....

here goes ......

மணி : வெள்ளி கிழமை 6:45 PM

"ஏய் நீ எங்கே இருக்க "

"office லே .."

"ஏய் லூசு ..9:30 க்கு train .. இன்னமும் என்ன பண்ற .. "

"ஏய்.. ஏய்.. கெளம்பிட்டேன் .. சின்ன ஒரு status மெயில் அனுப்பிட்டு வந்துடறேன் "

"சீக்கிரம் கெளம்பு டி ..என்னோமா இவதான் office யையே தாங்கி புடிக்கிற மாதிரி பேசறா .. "

"ஓகே சீக்கிரம் வா .. ரூம்க்கு வந்துட்டு எனக்கு கால் பண்ணு ஓகே .."

"ஓகே ஓகே பாய் .."

போனை வைத்தான் கார்த்திக் ...

ஊருக்கு செல்வதற்காக தன் துணிகளை எடுத்து வைத்து கொண்டு இருந்தான் ...

[கார்த்திக் ஒரு சிவில் Engineer , சென்னையில் உள்ள ஒரு construction கம்பனியில் வேலைசெய்கிறான் ..சொந்த ஊரு ஈரோடு பக்கத்தில் உள்ள கொடுமுடி .]

மணி : 7:30 PM

"ஏய் கார்த்தி நான் ரூம்க்கு வந்து விட்டேன் .. ஒரு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து விடு "என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் ரஞ்ஜனி ..

[ரஞ்ஜனி சாப்ட்வேர் அனலிஸ்ட் ..வேலை செய்வது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் , சொந்த ஊரு ஈரோடு ]

அப்படி இப்படி என்று ஒரு 8 மணிக்கு பேபி நகரில் உள்ள தன் வீட்டில் இருந்து கிளம்பி ஒரு ஆட்டோவை பிடித்துக்கொண்டு , விஜய் நகரில் உள்ள ரஞ்ஜனி வீட்டின் முன் ஆட்டோவில் போய் நின்றான் கார்த்திக் ... அங்கு ரெடியாக இருந்த ரஞ்ஜனியை ஏற்றிக்கொண்டு சென்ட்ரலை நோக்கி ஆட்டோ சென்றது ...

"சாப்பிட்டியா "

"இல்லை .சென்ட்ரல் போய் சரவணபவனில் பார்சல் வாங்கிக்கொள்ளலாம் ... " என்றான் கார்த்திக்

"ஓகே .."

சிரிது நேரம் மௌனத்திற்கு பிறகு கார்த்திக் .. தொடங்கினான் ..

"இந்தத்தடவை உங்க அப்பாக்கிட்ட பேசப்போறியா இல்லையா ..."
ரஞ்ஜனியிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை ...

"-------------------"

அதற்குள் ஆட்டோ அண்ணா மேம்பாலத்தை நெருங்கிவிட்டது ...மீண்டும் ஒரு முறை கேட்டான் கார்த்திக் ..

"பார்ப்போம் " என்று ஒற்றை வரியில் பதில் சொன்னால் ரஞ்ஜனி ..
"---------------------------"

பார்ப்போம் என்றால் என்ன அர்த்தம் ....

"--------------------------"

அதற்குள் சென்ட்ரல் ஜெயில் பாலம் வந்து விட்டது

"சார் காசு எடுத்து வெச்சுக்கோங்க சார் அங்க நிக்க விட மாட்டானுகோ ..."என்றான் ஆட்டோகாரன் ...

சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் முன்பாக ஆட்டோ நின்றதும் ..
ஆட்டோகாரர்யிடம் காசை கொடுத்து விட்டு .. இருவரும் train யை நோக்கி நடந்தார்கள் மணி சரியாக 9 PM

"ரஞ்ஜனி நீ train க்கு போ நான் போய் சாப்பாடு வாங்கிக்கிட்டு வந்துறேன் ..."

"ஹா ஓகே "

"கார்த்திக் எந்த கோச் ..."

"S9 --24, 25 "

"ஓகே நான் அங்க வெயிட் பண்றேன் ..."

"ஓகே "

ஏர்காடு எக்ஸ்பிரஸ் எந்த platform என்று பார்த்தல் ரஞ்சனி .. மூன்றாவது platform என்றதும் .. s9 கோச்யை நோக்கி நடந்தால்....

s9 கோச்யை அடைந்ததும் .. தங்கள் இருக்கையை பார்த்து அமர்ந்தால் .....

ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து .. ஆட்டோவில் வரும் பொழுது கார்த்திக் கேட்ட கேள்வியை ...நினைத்து கொண்டு இருந்தாள் ......

சற்று நேரத்தில் " ஹலோ " என்று யாரோ அழைப்பது போல் இருந்தது .. திரும்பி பார்த்தால் ..கார்த்திக் ..

"என்ன பலமா யோசனை ..."

"இல்லை ..ஆட்டோவில் வரும் பொழுது நீ சொன்னதை தான் யோசிச்சுகிட்டு இருந்தேன் .."

"சரி வா சாப்பிடலாம்" ...

சாப்பிட்டுக்கொண்டே இருவரும் பேசினார்கள் அதற்குள் ரயிலும் கெளம்பியது ...

"சரி என்ன பண்ண போற .."

"நான் தான் ஏற்கனவே எங்க வீட்டில் சொல்லிட்டேன் ...உன் கூட பேசினாவே தொலைச்சுடுவேன் என்று சொல்லி இருக்கிறார் எங்க அப்பா .. என்னை என்ன பண்ண சொல்ற "

"ஓகே அப்புறம் என்ன தான் பண்ண போற "

"நான் என்ன பண்ணுவேன் !"

"ஆமாம் எப்போ கேட்டாலும் இதை ஒன்ன சொல்லிடு ..." என்று சலித்துக்கொண்டான்

"அப்புறம் என்னை .. என்ன ஓடி வர சொல்றியா !!.."

"அது இல்லை டி "

"அப்புறம் என்ன "

"இல்லை உங்க அம்மா பேசப்போறாங்கனு சொன்னியே என்ன ஆச்சு ..."

"ஆமாம் .. எங்க அம்மா பேச்சை மட்டும் எங்க அப்பா கேட்கவா போறாங்க ..."

"அப்புறம் என்ன தான் பண்றது ..."

"பார்ப்போம் ..."

" எண்ணத்தை பார்ப்போம் ...... சும்மா எப்பக்கேட்டாலும் பார்ப்போம் பார்ப்போம் என்று பதில் " என்று சலித்துக்கொண்டான்

அதற்குள் பேஸின் பாலத்தை தாண்டி விட்டது train , தங்கள் compartment யில் இருந்த மற்றவர்கள் உறங்க செல்ல இவர்களும் தங்கள் .. இருக்கையில் படுத்துக்கொன்றார்கள் .. சரியாக காலை 6 மணிக்கு ஈரோடு வந்து சேர்ந்தது train ...

train யை விட்டு இறங்கி ....subway யில் நடந்து வந்து கொண்டு இருந்தார்கள் ....subway யை விட்டு வெளியே வந்த பொழுது எதிரில் ரஞ்ஜனியின் அப்பா ...

"ஏன்டா என் புள்ளைக்கிட்ட பேசக்கூடாதுனு சொல்லி இருக்கேனே ..அப்புறம் என்னடா பேச்சு ....."

"இல்லைங்க ......"

என்று சொல்லி முடிப்பதற்குள் .. பளார் பளார் என்று அறை விழுந்தது கார்த்திக்கு ...

"டேய் மச்சி ஆபீஸ் வந்துடிச்சு டா எந்திரி டா " என்று எழுப்பி விட்டான் செந்தில் .. [ இந்த சம்பவம் நடந்து 2 மாதங்கள் ஆகிவிட்டது அதன் பிறகு ரஞ்ஜனி சென்னை திரும்பவில்லை ...]

தன் இருக்கைக்கு வந்த கார்த்திக் தனது INBOX ஐ திறந்து பார்த்தான் . இரண்டு மூன்று மெயில் தன் PM யிடம் இருந்து வந்து இருந்தது ...மற்றும் பல forwarded மெயில் ...இது அனைத்திற்கும் நடுவில் ..ரஞ்சனியிடம் இருந்து ஒரு மெயில் ...நொடி பொழுதில் திறந்த அவனுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்து இருந்தது ...

அன்புள்ள கார்த்திக்கு ,

நீ எப்படி இருக்கா , ..அன்று நடந்த சம்பவத்தற்கு நான் மிகவும் வருத்த படுகிறேன் . அந்த நாளுக்கு பிறகு , என்னை விட்டில் யாரும் நம்புவது இல்லை ,, என்னை தனியே எங்கும் அனுப்புவது இல்லை . செத்து விடலாம் போல் இருக்கிறது ....என்னை எப்படியாவுது அழைத்து சென்று விடு ........இல்லை என்றால் எனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்துவிடுவார்கள் போல் இருக்கிறது..

உயிர் இல்லா
பிணமாக !
உன்னை மனதில்
சுமந்து கொண்டு !
பெற்றவர்களுக்கும் உண்மை யாக இல்லாமல்
உனக்கும் தொல்லை கொடுப்பது
கரை தெரியாத கடலில்
நீந்து வது போல் இருக்கிறது
நான் கரை சேர்வதும்
கடலோடு போவதும்
உன் வார்த்தையில்
தான் இருக்கிறது

----காதலுடன்
ரஞ்ஜனி
இதை படித்த கார்த்திக்கு என்ன செய்வது என்று புரியவில்லை .. சற்றும் யோசிக்காமல் .
(தொடரும் ................)

அருமையான வீடியோ

மிக அருமையான வீடியோ .. நமது போலீஸ் காரர்கள் பார்க்க வேண்டியது .. அடுத்த சுகந்திர தினம் அல்லது குடியரசு தினத்திற்கு பண்ணலாம் ..:) எவளவு காலம் தான் தீக்குள் தாண்டுவது , வயிறு மேல் பைக் ஏற்றுவது.


என் பள்ளி தோழன் ..

எலிமெண்டரி ஸ்கூல் பருவத்தில்

நீங்கள் எல்லாம் சக மாணவிகள் மட்டும் .

ஹை ஸ்கூல் பருவத்தில்

நீங்கள் அனைவரும் காதலிகளாக தெரிந்தீர்கள் .

கல்லூரி பருவத்தில்

நீங்கள் எல்லாம் தோழிகளாக தெரிந்தீர்கள் .

உடன் பணி புரியும் பொழுது

நீங்கள் எல்லாம் சக மனிதர்களாக மட்டும் தெரிந்தீர்கள் .

என் திருமணத்திற்கு பிறகு

சிலர் தோழி ஆனார்கள்

சிலர் சகோதரி ஆனார்கள் .

ஆனால் அன்று முதல் இன்று வரை

எனக்கு மாமன் மச்சானாகவே இருக்கிறான்

என் பள்ளி தோழன் ..

Friday, October 3, 2008

ராசு back to pavilion


இது ராசு திருமணத்திற்கு பிறகு முதல் முதலில் இந்தியா சென்ற பொது ..



முதல் கதையில் சொன்னது போல் அதே பெண்ணை திருமணம் செய்து கொண்டான் , திருமனத்திற்கு பிறகு மூன்று வருடம் கழித்து இன்று தான் தாயகம் செல்கிறான் . மூன்று வருடமாக கடிதத்திலும் தொலைபெசியிலும் வாழ்ந்த வாழ்க்கையை உயிரோட்டமாக அனுபவிக்க செல்கிறான் , தான் பெற்ற மகனை முதல் முதலில் பார்க்க செல்கிறான் , இந்த பிரிவின் வலிகள் ராசுவை பல மடங்கு பக்குவம் ஆக்கியிருந்தது



இருந்தாலும் அனைவரையும் போல் ஆர்வ கோளாரில் அனைத்து பொருளையும் வாங்கினான் ..முக்கியமாக தன் மனைவிக்கு பிடித்த சென்ட் ,பவுடர் மற்றும் பல அழகு சாதன பொருள்கள் வாங்கினான் , தன் மனைவிக்கும் , மகனுக்கும் துணிமணிகள் என்று நினைத்ததையெல்லாம் வாங்கினான் , தான் கிளம்பும் நாளும் வந்தது . நண்பர்கள் படை சூழ வழி அனுப்பி வைக்கப்பட்டான் ராசு .



வெளிநாட்டில் இருந்து வரும் பொழுது எது வாங்குகிரோமோ இல்லையோ . நண்பர்களுக்கு மறக்காமல் சோம பாணம் வாங்கி கொள்ள வேண்டும் ,
தன் நண்பன் மொக்காசாமி சொன்னதும் ஞாபகம் வந்தது



"ஏலே ராசு வர அப்போ மறக்காம நல்ல பாரின் சரக்கு வாங்கிக்கிட்டு வலே மாப்பிளை "



செரி என்று Duty Freeல் ஒரு சோம பாணம் வாங்கிக்கொண்டு ,அனைத்து Immigration விசையங்களையும் முடித்துக்கொண்டு விமானத்தில் போய் அமர்ந்தான் .



விமானம் புறப்பட்டு தாயகம் நோக்கி பறந்தது .இந்த மூன்று வருட பிரிவின் வலியைவிட இந்த நான்கு மணி நேரம் பயணம் தான் , அவனுக்கு பெரும் சுமையாக இருந்தது .. உணர்ச்சியின் உச்சத்தில் இருந்தான் . [இதனால் ஒசியில் கொடுத்த சோம பானத்தை கூட குடிக்கவில்லை ]. இதே போல் ஒரு மனநிலையில் தான் ஒரு உள்ளம் திருச்சி விமானநிலையத்தில் காத்துகிடந்தது .



விமானமும் திருச்சியில் தரை இறங்கியது .. தனது பொருள்களை எடுத்துக்கொண்டு மற்ற Immigration விசையங்களை முடித்துக்கொண்டு வெளியே வர ஒரு மணி நேரம் ஆகிவிட்டது .. இந்த ஒரு மணி நேரத்தில் இந்த இரு உள்ளங்களும் பட்ட பாட்டை வார்த்தையால் சொல்ல முடியாது . இது எதுவும் புரியாத இந்த customs அதிகாரிகள் பண்ணும் இம்சை பெறும் தொல்லை ,



தூரத்தில் மகனையும் மனைவியையும் பார்த்த ராசு ஓடி வந்து தன் மகனையும் , மனைவியையும் வாரி அணைத்துக்கொண்டான் , அவனால் கண்ணிரை அடக்க முடியவில்லை ..அந்த நோடியில் , தான் பட்ட அத்தனை விலிகளும் கரைந்தது போல் உணர்ந்தான் ராசு ..அதன் பிறகு தான் மட்டற உறவும் நட்பும் அவன் கண்ணுக்கு தெரிந்தது



மகனின் முத்தமும்
மழலை பேச்சும்
அவனை கிறங்கடித்தது



பாலைவனத்தில் அவன் தொலைத்தது
வெறும் வருசங்கள் இல்லை
உயிரை என்று
அவன் மகன் கொடுக்கும்
ஒவ்வொரு முத்தமும்
மனைவியின் அரவணைப்பும்
அவனுக்கு சொன்னது