Sunday, September 28, 2008

FAKE EXPERIENCE போடுபவர்கள் எல்லாம் கோட்சேவும் இல்லை போடாதவர்கள் எல்லாம் காந்தியும் இல்லை

சென்ற வாரத்தில் என் நண்பர் ஒருவருக்கு வேலை போய்விட்டது , அவர் இதற்கும் அந்த கம்பனியில் கடந்த இரண்டு வருடமாக வேலை செய்கிறார் , அவர் செய்த ஒரு தவறு ஒரு மாதம் தனது experience யை சேத்தி போட்டது . இந்த சம்பவம் என்னை மிகவும் யேசிக்க செய்தது ..


எதற்காக தூக்கினார்கள் fake போட்ட காரணத்தால இல்லை ஒழுங்காக வேலை செய்யாத காரணத்தால ,அவர் வேலை செய்யவில்லை என்று அவர்களால் சொல்ல முடியாது ஏன் என்றால் இரண்டு வருடம் அவர் அங்கு தான் வேலை செய்கிறார் ,நன்றாக வேலை செய்யாவிட்டால் என்றோ தூக்கியிருப்பார்கள். அப்படி என்றால் அந்த ஒரு மாதம் fake போட்டது தான் காரணமா என்றால்..

ஆமாம் ..


பொய் சொல்வது தவறு என்றால் , முதலில் நீங்கள் சேய்வது எல்லாம் சரியா . மாத சம்பளம் 20000 ஆயிரம் 25000 ஆயிரம் என்று கொடுக்கும் நீங்கள் பண்ணும் billing சமாச்சாரம் எல்லாம் உங்கள் உழியர்க்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்று யோசித்து பாருங்கள்


இதற்கு fake போட்டுபவர்கள் எல்லாம் சுலபமாக வேலை வாங்கிவிடுவதாக நினைத்து விட வேண்டாம் , அவர்களும் பல கட்ட invterview யை கடந்து தான் அந்த வேலைக்கு வருகிறார்கள் , இல்லாத ஒன்றை இருப்பது போல் பேசுவது தான் மிகவும் கடினம் . இதில் பொய் சொல்வதை விட சொன்ன பொய்யை maintain பண்ணுவது மிக கொடுமை :) .


ஆகையால் நண்பர்களே Fake போடுவது சுலபம் இல்லை, original experience இருகிறவன் செய்வதை விட fake போட்டவன் அதிக வேலை செய்வான், அதுவும் மிக திறமையாக . இது தான் உண்மை ஏன் என்றால் . அவனுக்கு அந்த வேலையின் மதிப்பு நன்றாக தெரியும் , அந்த மதிப்பு தான் ஒரு software engineer என்று சொல்லிகொள்வது அல்ல, . ஏங்கே நாம் தெரியவில்லை என்று சொன்னால் தன்னை fake என்று கண்டு பிடித்துவிடுவர்காலோ என்ற பயம் என்றும் அவனுக்கு இருக்கும் . அது தான் அவனை மேலும் மேலும் படிக்க தூண்டும் ..


எத்தனை வருடம் என்று பார்காமல் வேலை இல்லாதவர்களை எல்லாம் fresher யாக எடுத்துக்கொண்டால் பிரச்சனை இல்லை ..
[தப்பு செய்பவனை விட தப்பு செய்ய தூண்டுபவனுக்கு தான் தண்டனை அதிகம் தர வேண்டும் அப்படி என்றால் software கம்பனிக்கு தான் தண்டனை அதிகம் ]


இந்த கொடுமை எல்லாம் software துறையில் மட்டும் தான் . fake யை பற்றி இவளவு பேசும் company கள் எல்லாம் ப்ராஜெக்ட் வாங்க என்ன செய்கிறது , fresher யை கூட இரண்டு வருடம் மூன்று வருடம் experience போட்டு client யிடம் காட்டித்தான் bill பனுவார்கள் , கம்பெனி செய்தால் அது management technique அதே ஒரு தனி நபர் செய்தால் அது தப்பு ...இது எந்த விதத்தில் ஞாயம் .


நானும் ஒரு கம்பெனி யில் interview panel லில் இருந்திருக்கிறேன் . பல original experience இருக்கும் நபர்களையும் interview செய்திருக்கிறேன் , fake experience இருப்பவர்களையும் interview செய்திருக்கிறேன்.. fake experience இருப்பவர்களை சுலபமாக கண்டுபிடித்து விடலாம் .. இதில் என்ன வேடிக்கை என்றால் original experience இருப்பவர்களை விட fake experience இருப்பவர்கள் நன்றாக பதில் அளிப்பார்கள், பல சமையம் அவர்கள் fake என்று தெரிந்தே எடுப்பேன் , எதற்காக தெரியுமா அவர்கள் அடிப்படை டெக்னாலஜியில் மிகவும் தெளிவாகவும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள் , அவர்களுக்கு இருக்கும் ஒரே குறைபாடு lack of domain knowledge , அது அவர்கள் வேலை செய்தால் மட்டும் தான் வரும் , அதுவும் வேலைக்கு வந்தவுடன் சுலபமாக கற்றுக்கொள்வார்கள் .



fake போட்டவர்களை எடுப்பது தவறு தான் ஆனால் அதற்காக நான் ஒரு பொது வருத்தப்பட்டது இல்லை ஏன் என்றால் , client க்கு தேவையான வேலையை தரமாக டெலிவரி செய்ய வேண்டிய நேரத்தில் செய்துவிடுவேன் . அது தானே கம்பனிக்கு வேண்டும் ,நான் பணி செய்தது சாதரண ஒரு இந்தியன் கம்பெனி


இதில் என்னொரு வேடிக்கையை சொல்கிறேன் . இப்பொழுது பல கம்பனியில் மேனேஜர் பதவியில் இருக்கும் பலர் y2k பிரச்சனை தலை தூக்கிய பொழுது இந்த துறைக்கு வந்தார்கள் , அதுவும் குறிப்பாக 1996 முதல் 2000 வரையில் யான காலக்கட்டத்தில் .. அப்பொழுது அவர்கள் என்ன செய்தார்கள் mainframe படித்துவிட்டு ஒரு fake experiance போட்டுக்கொண்டு அவர்கள் எல்லாம் அமெரிக்கா சென்றார்கள் . அப்பொழுது சுழ்நிலை அப்படி இருந்தது , பிறகு என்ன 2000 த்திர்க்கு பிறகு அவர்கள் எல்லாம் துரத்தி அடிக்கப்பட்டார்கள் அது வேற கதை .. அந்த மாதிரி மேனேஜர் எல்லாம் இப்பொழுது காந்தி மாதிரி பேசுகிறார்கள் . என்ன கொடுமைங்க இது

இவர்களின் மனைவிமார்கள் சிலர் திருமணத்தின் பொழுது வேலை இல்லாமல் இருப்பார்கள் அதன் பிறகு எதாவுது ஒரு கோர்ஸ் படிப்பது அதன் பிறகு தங்கள் கணவரின் நண்பர்கள் வேலை செய்யும் எதாவுது ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிடுவார்கள் , கேட்டால் இவர்கள் தான் work ethic , loyalty என்று பினத்துவர்கள் அட போங்க ஐயா ,,


இந்த மேனேஜர் தான் இப்படி என்றால் இந்த HR பத்தி சொல்கிறேன் கேளுங்கள் ,, தங்களுக்கு தெரிந்தவன் என்றால் தங்கள் நண்பர்கள் இருக்கும் panel க்கு அனுப்புவது , அந்த panel லில் இருப்பவர்க்கும் இவருக்கும் ஒரு under ground understanding போகும் , பிறகு என்ன அந்த நண்பர் CV forward செய்தல் சுலபமாக வேலை நடக்கும் , இந்த மாதிரி HR தான் என்று பல verification நடத்துகிறார்கள் .. முதலில் இவர்களை verification செய்ய வேண்டும்


இப்படி எல்லாம் இருக்கும் சூல்நிலையில் entry level employee மட்டும் என்ன பாவம் செய்தார்கள் இது எப்படி இருக்கிறது தெரியுமா , கோடி கோடியாய் ஊழல் பண்ணும் அரசியல் வாதியை விட்டு விட்டு , இந்த ஜட்டி திருடினவன் , கோழி முட்டை திருடினவன் பிடிக்கும் நம் போலீஸ் மாதிரி இருக்கு உங்கள் வெளக்கெண்ணை பாலிசி


இதற்காக fake போடுவது எல்லாம் சரி என்று நான் சொல்லவில்லை ஆனால் இந்த தவறுக்கான முடிவு கம்பனிகள் கையில் தான் இருக்கிறது .படித்து முடித்து ஒரு வருடம் ஆனா காரணத்தால் நீங்கள் எல்லாம் fresher இல்லை உங்களுக்கு வேலையும் இல்லை, என்ற காரணத்தால் தான் அவர்கள் fake போடும் சூழலுக்கு தள்ளபடுகிறார்கள் , ஆகையால் நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது கம்பெனிகளின் கையில் தான் இருக்கிறது . இல்லை என்றால் fake போடுபவர்களை உங்களால் என்றும் தடுக்க முடியாது . "இவளவு பேசும் நானும் காந்தியும் இல்லை கோட்சேவும் இல்லை "

Saturday, September 27, 2008

ராசு in துபாய் ..

இது ராசு முதல் முதலில் துபாய் வந்த கதை ...


திருச்சியில் இருந்து முதல் முதலில் flight ஏறுகிறார் ,அது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் அது கொழும்பு சென்றுவிட்டு அங்கு இருந்து மூன்று மணி நேரம் tansit க்கு பிறகு அபு தாபி வந்து சேறும் . நம்ப ராசுவும் கொழும்புவில் இருந்து அபு தாபி வரும் விமானத்தில் ஏறிவிட்டார் .. விமானம் பறக்க தொடங்கி விட்டது .. விமான பணி பெண் சரக்கு எடுத்து வர நம்ப ராசு நல்ல பிள்ளை மாதிரி அமர்ந்து இருந்தார் .


பக்கத்தில் இருந்த அறிவாளி நம்ப ராசுவை பார்த்து விட்டு .. சரக்கு எல்லாம் ஓசி தான் , நம்ப டிக்கெட் காசில் சரக்கும் சேத்திதான் வாங்கி இருக்கான் .. சும்மா வாங்கி குடிங்க என்று சொல்ல ..


"நெசமாவா .. எனக்கு சொல்லவே இல்லை " என்று சொல்லி விட்டு .. கச்சேரியை தொடங்கினார் ராசு ..


சிறிது நேரத்தில் அலப்பறை தாங்க முடியாமல் போக .. பணி பெண் ஊசி போட்டு .. சீரிய சிங்கத்தை அடக்கினார்கள் ..


விமானம் அபு தாபி வந்து சேர்ந்ததும் , பக்கத்தில் இருந்த அறிவாளி ராசுவை எழுப்பிவிட ..


"சிரித்துக்கொண்டே கொஞ்சம் ஓவரோ .."


"ஆமாம் ஆமாம் .." என்றான் ராசு ..


இப்பொழுதுதான் பெறும் அதிர்ச்சி காத்து இருந்தது ரசுவிர்க்கு ..


"ஆமாம் நீங்க துபாய் தானே போகவேண்டும் என்று சொன்னிங்க .. நீங்க ஏன் அபு தாபிக்கு வந்திங்க .. துபாய் வேற நாடு அபு தாபி வேற நாடு .." என்று அறிவாளி சொல்ல நம்ப ரசுவிர்க்கு .. ஒரு லார்ஜ் யை ராவா அடித்து போல் இருந்தது ..


"ஐயா சாமி என்ன சொல்றிங்க .."


"அட தெரியவில்லை என்றால் கேட்டுவிட்டு ஏறவேண்டியது தானே .. அட போயா இப்போ என்ன பண்ண போற , இந்த நாட்டில் சட்டம் கிட்டம் எல்லாம் ரொம்ப கண்டிசன் . பாத்து வேற விமானத்தை பிடித்து துபாய் போற வழியை பாரு "என்று சொல்லிவிட்டு நம்ப அறிவாளி எஸ்கேப் ..


ரசுவிர்க்கு ஒன்றும் புரியவில்லை ..



கண்களில் கண்ணிர் , இக்கத்தில் ஒரு மஞ்ச பை , கையில் ஒரு பை .. திருவிழாவில் தொலைந்த திருவாத்தான் போல் நிற்க ..


ராசுவின் அலப்பறையை விமானத்தில் பார்த்த ஒரு நல்ல மனுஷன் ..


"என்ன தம்பி என்ன ஆச்சு என்று கேட்க .."


"ஐயா சாமி இந்த மாதிரி தப்பு நடந்து போச்சு .எங்க அப்பன் ஆத்தா காடு கண்ணை வித்து துபாய் அனுப்பி வெச்சாங்க நான் தெரியா தனமா இந்த நாட்டுக்கு வந்துட்டேன் எதாவுது பண்ணுங்க ஐயா என்று கேட்க .."


"யாரு யா சொன்னா துபாய் வேற நாடு அபு தாபி வேற நாடுன்னு ரெண்டு ஒன்னு தான் எங்கே உன் passport யை காட்டு என்று வாங்கி அவன் விசாவை பார்த்து விட்டு ஒரு பெறும் விளக்கம் சொல்லி ராசுவை தேற்றினார் "


இதனால கருத்து கந்தசாமி என்ன சொல்றான் என்றால் " உதவி செய்யாவிட்டலும் உபத்திரமாவது செய்யாமல் இருக்கலாம் "

சும்மா சும்மா ஒரு மொக்கை

இந்த வார செவ்வாய் கிழமையோடு ரம்ஜான் நோம்பு முடிகிறது , செவ்வாய் கிழமை என்று உறிதியாக சொல்ல முடியாது புதன் கிழமை கூட வரலாம் .. ஆனால் எப்படி இருந்தாலும் ஒரு நாலு நாள் விடுமுறை வரும் . இந்த நாட்டில் அதிக நாள் விடுமுறை வருவது இப்பொழுதுதான் வேறு எந்த விடுமுறையும் இல்லை .

கடந்த 25 நாளாக தினமும் மத்தியம் விடுமுறை ரம்ஜான் முடிந்து விட்டால் இந்த leave க்கு ஆப்பு தான் . இந்த நான்கு நாள் விடுமுறையில் எங்கவுது செல்லலாம் என்று பல பிளான் போட்டு இருக்கிறோம் , பார்ப்போம் இது வோர்கௌட் ஆகுமா இல்லை flop ஆகுமா என்று

ஒரு உபயோகமான வேலை ஒன்றும் இல்லை அதனால் தான் இன்று இத்தனை பதிவுகள் .எதாவுது படிக்கலாம் என்று புத்தகத்தை திறந்தால் .. தாரே ஜாமீன் பார்ரில் அந்த சிறுவன் சொல்வதை போல் Words are dancing mam தான் .. செரி அதனால் தான் எதாவுது மொக்கை தனமாக எழுதலாம் என்று இந்த பதிவு ..

அப்புறம் என்ன .. ..

முந்தாநேத்து ராமன் தேடிய சீதை பார்த்தேன் .. ரொம்ப நல்ல படம் .. பசுபதியின் நடிப்பு அருமை .. சேரன் எப்பொழுதும் போல் செண்டிமென்டை புளிந்து எடுத்திருக்கார் , கடைசியில் சேரன் ஒரு கட்சியில் செண்டிமென்டை புளிய அது மிக பெரிய காமடி ஆகிவிட்டது , ஆனால் மொத்தத்தில் நல்ல படம்

அப்புறம் வேறு ஒன்றும் இல்லை அடுத்த பதிவில் பார்ப்போம்

Friday, September 26, 2008

Good link

Few days back one of my friend has referred this website it is a wonderful website for photography its has forum , and has few very good articles related to photography with thousands photos in different category . http://www.trekearth.com/ if you have time go through this site

NRI வாழ்க்கை

முதல் நாள் பள்ளிக்கூடம் போகும் குழந்தையும்
விடுமுறைக்காக தாயகம் சென்று வரும் NRI யும் ஒன்றுதான் !

ஒரு ஒற்றுமை " பிரிவு "
ஆனால் ஒரு சிறு வேறுபாடு

ஒருவரின் பிரிவு மணிகணக்கில்
மற்றொருவரின் பிரிவு வருடகணக்கில்

ஒருவர் வாழ்க்கையை தொடங்குகிறார்
மற்றொருவர் வாழ்க்கையை தொலைக்கிறார்

குழைந்தையின் தேடல் மகிழ்ச்சி
NRI யின் தேடல் பணம் , பதவி , பெருமை !
இதற்க்கு முக்கிய காரணம் கடமை
அந்த கடமையின் விளைவு

தந்தை முகம் மறந்த குழந்தைகள்
பிள்ளை முகம் பார்க்க ஏங்கும் தந்தை ..

பிரிவின் வலி உனக்கு மட்டும் இல்லை
எனக்கும் தான் என்று அறுதல் கூறும் மனைவி

என்ன ஒரு வாழ்க்கை என்று நினைக்கும் போது
கண்முன் வது நிற்கும் அந்த கடமை ..

இப்படி நாட்கள் நகர்ந்தது
மாதங்கள் கடந்து
வருடங்கள் ஓடின ..

ஆனால் வாழ்க்கை மட்டும்
ஒரே இடத்தில் சம்மணம் கால் போட்டு அமர்ந்தது !!

நன்றாக படிக்காதவன் எல்லாம்
நிம்மதியாக உள்ளுரில் இருக்கிறான்..

படித்த காரணத்தால் ,
தாய் தந்தை விட்டு ,
சகோதர சகோதரிகளை விட்டு
பிறந்த மண்ணை விட்டு
பழகிய நண்பர்களை விட்டு
அந்நிய தேசத்தில் அனாதைகள் ஆனோம்

இதையே உள்ளுரில் இருப்பவனிடம் சொன்னால்
அட போட .. உள்ளுரில் இருந்து
என்ன சுகத்தை கண்டோம் என்றான்
" இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை "
மனதை தேற்றிக்கொள்ள அருமையான வார்த்தை

Wednesday, September 17, 2008

என் வாழ்க்கை -- காலை மாலை இரவு

காலை
செல் போன் சத்தத்தில் தொடங்குகிறது
ஒவ்வொரு நாளும்

வாழ்க்கை எங்கே செல்கிறது
என்று தெரியவில்லை ஆனால்,
கால்கள் மட்டும்
என் அலுவலகம் செல்கிறது

சிறிதுநேரத்தில்
என் வாழ்க்கை பற்றி சிந்தனைகள் மறைந்து
முகம் தெரியாத முதலாளியின்
கனவை
நினைவாக்க சென்று விடுகிறேன் ...

மாலை
பல நாட்களில்
மணி ஆனது தெரியாமல்
moniter யிடம் மல்லுகட்டி கொண்டு இருப்பேன் ..

இரவு
வீடு திரும்பும்போது
மீண்டும் வாழ்க்கை பற்றிய சிந்தனை ..
அதற்குள் எனக்குள் தூங்கிக்கொண்டு
இருந்த லக்சிய சித்தனும்
கொள்கை கோமாலியும்
என் முன் சென்று
என்னை மானம் கெட திட்டுவார்கள்
அதற்குள் வீடு வந்து விடும்

சிறிது நேரத்தில்
உணவு அருந்திவிட்டு உறங்க சென்றால் ,
மற்றும் சிறிது நேரத்தில்
செல் போன் சிணுங்க தொடங்கும்
அடுத்த நாள் காலையில் ....

சரோஜா

முந்தாநேத்து இரவு எங்கள் ரூமிற்கு ஒரு புது நபர் வந்தார் ..பார்த்த உடனே அனைவருக்கும் ஒரே பரபரப்பு ... அவன் அவன் ஒரு பேரு வெச்சான் ..மல்லு ரசிகர் மன்றத்தில் இருந்து மீரா என்றும் ,, இன்னொருத்தன் மீனா என்றான் .. செரி நம்ப பங்கிற்கு நாமலும் ஒரு பேரு வைப்போமே என்று .. சரோஜா என்று வைத்தேன்


[ அப்போ தான் சரோஜா படம் பார்த்துக்கொண்டு இருந்தேன் அந்த effect ]..


அதை பார்த்த உடனே ஒருத்தன் .. ஆப்பிள் எடுக்கிறான் .. இன்னொருத்தன் காரட் குடுக்கிறான் ....சிறிது நேரம் அதை சுத்தியே எல்லோரும் உக்காந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம் ..



ஒருத்தன் இது நல்லா பேசும் டா என்றான் இன்னொருத்தன் நல்லா பாடும் என்றான் .. அதுக்குள்ளே தூக்கம் வர ..அதுக்கு ஒரு இடத்தை கொடுத்துட்டு .. அவன் அவன் தூங்க சென்றுவிட்டோம்


காலை 6 மணிக்கு ... கீ கீ னு கத்த தொடங்கிவிட்டது அட நம்ப சரோஜா தாங்க .. என்ன கொடுமை டா இதுன்னு ..




"டேய் அதுக்கு எவனாவுது சாப்பாடு குடுங்கடா என்றால் எவனும் எழுந்திரிக்கவில்லை ..."


அட பாவமே என்று நினைத்துக்கொண்டு காதை அடைத்து கொண்டேன் .. அதுக்குள் ஒரு நல்ல மனுசன் காரட் கொடுத்தாரு


அப்புறம் ஒரு 8 மணிக்கு கிளம்பி .. office க்கு சென்றுவிட்டோம் மத்தியம் வந்து பார்த்த சரோஜாவை காணவில்லை .. எங்கட என்று கேட்டால் .. நண்பர் ஒருத்தர் கேட்டாரு கொடுத்து விட்டேன் என்றார் ..


செரி ஓகே .. என்று சொல்லிவிட்டு .. வேலையை பார்க்க சென்றுவிட்டோம் ..


அட இன்னைக்கு office இருந்து வந்து பார்த்தால் .. மீண்டும் கீ கீ சத்தம் ரூம்லே . என்ன என்று கேட்டால் . நேத்து அவங்க விட்டில் காலை 5 மணிக்கே கீ கீ ஆரம்பமாம் .....

Friday, September 12, 2008

ஹமாம் operator ராசு- 1



நான் கேட்டதில் ரசித்த உண்மை சம்பவம் ....
நம்ப ஹீரோ பேரு ராசு , இவரு , தென் தமிழ்நாட்டில் இருந்து வந்து துபாய்யில் வேலை செய்யும் ஒரு ஹமாம் operator,

துபாய் வந்த பிறகு கல்யாண மார்கெட்டில் நம்ப ராசுவிர்க்கு மௌசு அதிகம் ஆகிவிட்டது . அவருக்கு பெண் பார்க்கும் படலம் தொடங்கியது , ஒரு முறை விட்டிற்க்கு அழைத்த அவனுக்கு ஒரு நல்ல செய்தியும் கிடைத்து தங்களது தூரத்து உறவில் ஒரு பெண் இருப்பதாகவும் சீர் செனத்தி சிறப்பாக செய்வார்கள் என்று ராசுவின் அம்மா கூறினார் .

பிறகு நாட்கள் உருண்டன இரண்டு வாரத்தில் தன் அம்மா அன்று சொன்ன அந்த பெண்ணின் போட்டோவை அனுப்பி வைத்துள்ளதாக கூறினார் . இரண்டு நாளில் கொரியரும் வந்து சேர்ந்தது .பிரித்து பார்த்த அவனுக்கு வயித்துக்குள் பட்டாம்புச்சி பறக்க தொடங்கியது தனது சமதத்தை தன் அம்மாவிடம் சொன்னான் . அதேபோல் அந்த பெண்ணுக்கும் அதே biological மாற்றம் ஏற்பட . .பெரியவர்கள் ஒன்று கூடி ஒரு தேதியில் கல்யாணம் என்று முடிவு செய்தார்கள் . அப்படியும் கல்யானத்துக்கு இரண்டு மாதம் இருத்தது ....
அப்பொழுது ராசுவிற்கும் அந்த பெண்ணுக்கும்

பசி இலலை


தூக்கம் இல்லை


நிமிடங்கள் ஒவ்வொன்றும் வருடங்கள் ஆகினா


நாட்கள் ஒவ்வொன்றும் நரகம் ஆகியது


கிரகாம் பில் அவன் குல தெய்வம் ஆனார்


missed call ஒவ்வொன்றும் மில்லியன் டாலேர் அவனுக்கு

(அட இது எல்லாம் இந்த Situation க்கு மிக அவசியங்க )

பிறகு அப்படி இப்படி என்று ஒரு மாதம் ஓடியது , பிறகு ஒரு நாள் தன் அம்மாவிடம் இருந்து ஒரு பார்சல் வந்தது , திறந்து பார்த்தால் அவனது கல்யாண பத்திரிக்கை , அவன் நண்பர்களுக்கு குடுக்க தன் அம்மா அனுப்பியதாக சொன்னார் . பத்திரிக்கையை திறந்து பார்த்த அவனுக்கு கடும் கோபம், அதை வாங்கி பார்த்த அவனது நண்பர்கள் அடக்கமுடியாமல் சிரித்தார்கள் கேளியும் , கிண்டலும் ராசுவை சூடேத்தியது .



பிறகு என்ன.. தன் அம்மாவிற்கு போனை போட்டு காச் மூச் என்று கத்தினான் , ஏன் ஹமாம் Operator என்று பத்திரிகையில் போட்டிர்கள் என்று கத்தினான் .

அதற்க்கு அவன் அம்மா சொன்ன பதில் "செய்யும் தொழிலே தெய்வம் டா .. அது ஒன்னும் தப்பு இல்லை நீ அங்க அந்த வேலை பார்த்து கஷ்ட படுவது தான் நாங்க இங்க மூன்று வேலையும் சாப்பிடுகிறோம் ".. என்று தான் அம்மா சொன்ன பிறகு தான் சற்று அமைதியானான் ராசு

ஹமாம் என்றால் அரபிக்யில் கக்குஸ் (Toilet) என்று அருத்தம் . இதை கேட்டதும் எனக்கு ஞாபகம் வந்தது நம்ப வடிவேல் தான் ...

Thursday, September 11, 2008

என் உயிர் காதலி

கார்மேகம் உனக்கு குடை பிடிக்கும்
ஏமாந்து விடாதே
மழை துளிகள் உன்னை முத்தம் மிட
நடக்கும் சதி வேலை அது

உன் கூந்தலில் இறுதி ஊர்வலம் செல்ல
பூக்கள் எல்லாம் உன்னை பார்த்து புன்னகைக்கும்
மயங்கி விடாதே

உன் பாதங்கள் பட்டு மோட்சம் அடைய
பனி துளிகள் உன் பாதையில் தவம் கிடக்கும்
பதட்டப்படாதே

நான் அவர்களை போல் சதிகாரனும் அல்ல
மயக்கி வைக்க மாயக்காரனும் அல்ல
உன்னை மணக்க துடிக்கும்
உன் மாமன் மகன்

Tuesday, September 9, 2008

காதலி







எனக்குள் நீ

உனக்குள் நான்

என்றும்.


என்றும்

எனக்கு இருக்கும்

ஒரே பதவி

உன் காதலன்

Monday, September 8, 2008

தும் ஹிந்தி மாலும் நகி

ஒவ்வொரு நாளும் நான் நம்ப அரசியால் வாதிகளை திட்டாத நாளே இல்லை

இந்த ஊரில் டாக்ஸி ஏறி ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும , அல்லது கடையில் போய் சோறு திங்க வேண்டும் என்றால் , ஹிந்தி தெரிந்தால் மிக மிக சௌகர்யமாக இருக்கும் .. ஏன் என்றால் இங்கு இருப்பவர்களில் பாதி பேர் , இந்தியா, பாகிஸ்தான் , பங்களாதேஷ் , ஸ்ரீலங்கா, நேபால் தான் , அதனால அவர்கள் அனைவரும் நன்றாக ஹிந்தி பேசுவார்கள்

இங்கு டாக்ஸி டிரைவர் எல்லாம் பாகிஸ்தான் காரர்கள் தான் , நமக்கு ஹிந்தி தெரியாது , அவர்களுக்கு இங்கிலீஷ் தெரியாது , என்ன செய்வது . இது தான் நான் டாக்ஸி ஏறினால் எனக்கும் அவர்களுக்கு நடக்கும் உரையாடல்


நான் : straight go .... 3 signal after left take then சிதா ஜா parking stop .. (Landmark தெரியவில்லை என்றால் இப்படி தான் சொல்வேன்). இதை கேட்ட அவன் கேட்கும் கேள்வி

டிரைவர் : you Srilanka ? (நம்ப கலரு அப்படி)

நான் : No Indian

டிரைவர் : தும் ஹிந்தி மாலும் நகி ?

நான் : நகி நகி

டிரைவர் : why Hindi no ?

நான் : my leader Hindi strike , so no Hindi

டிரைவர் : thummara rastra batsha Hindi , thum malum nagi ?
(டேய் லூசு பயலே உங்க National Language ஹிந்தி டா என்பான் )

நான் : my leader Hindi strike , so no Hindi only Tamil . I மதராசி....

டிரைவர் : pagal !!! (அடே பைத்தியகாரா !!!)

என்னங்க பண்றது , அவன் சொல்றது உண்மை தானே , நம்ப ஊரை விட்டு வெளியே வந்தால் , நமது மக்களை நாய் கூட சீண்டாது, ஹிந்தி படிக்காத விளைவு இங்கு வந்து தான் உணர்கிரேன் , இந்த கெழட்டு கம்னாட்டி கருணாநிதி ஊரை எல்லாம் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு , அவன் பேரண், பேத்திகளை ஹிந்தி படிக்க வைத்து இருக்கான் , பாவி பன்னாடை

எங்க அப்பா அப்பவே சொன்னாரு , நாங்க தான் ஹிந்தி போராட்டம் என்று போய் ஹிந்தி படிக்கலை , நீங்கலாவுது ஒழுங்கா ஹிந்தி படிங்கடா என்று , கேட்டேனா ,,


என்ன பண்றது பட்டால் தானே நமக்கு புத்தி வரும்...

Sunday, September 7, 2008

உன் பார்வையில்

பல வருடங்கள் முன்பு நாங்கள் மூன்று நண்பர்கள் ஈரோடு அபிராமி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு , பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கையெந்தி பவனில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம் அப்பொழுது ஒரு நண்பார் எதுத்த மாதிரி இருந்த ஒரு மிக பெரிய மருந்து கடையை பார்த்து சொன்னான் மச்சி சரியான பிசினஸ் டா ..இங்க atleast ஒரு நாளைக்கு ஐம்பது ஆயிரம் பிசினஸ் நடக்கும் டா என்றான் .....

நானும் ஓஹோ ஓஹோ அப்படியா என்று சொல்லிவிட்டு . omelet உண்பதில் மும்முரமாக இருந்தேன்...

இந்த நாண்பன் சொன்னதை சற்றும் கவனிக்காத இன்னொரு நாண்பன் சொன்னான்

இச்ச மக்களுக்கு எவளவு நோய் பாருடா ..

எவளவு மருந்து இதை அத்தனையும் நாம் தானே சாப்பிடுகிறோம் இச்ச பாவம் டா என்றான் ...

நான் அவனை சற்று வியப்புடன் பார்த்தான் !!

அப்பொழுது தான் "எல்லாமே நீ பார்க்கிற பார்வையில் தான் இருக்கு டா என்று என்றோ ஒரு நாள் யாரோ சொன்னது ஞபகம் வந்தது "

அது உண்மை தான் இப்பவும் பல சூல்நிலையில் எனக்கு இது உதவுகிறது