Wednesday, September 17, 2008

சரோஜா

முந்தாநேத்து இரவு எங்கள் ரூமிற்கு ஒரு புது நபர் வந்தார் ..பார்த்த உடனே அனைவருக்கும் ஒரே பரபரப்பு ... அவன் அவன் ஒரு பேரு வெச்சான் ..மல்லு ரசிகர் மன்றத்தில் இருந்து மீரா என்றும் ,, இன்னொருத்தன் மீனா என்றான் .. செரி நம்ப பங்கிற்கு நாமலும் ஒரு பேரு வைப்போமே என்று .. சரோஜா என்று வைத்தேன்


[ அப்போ தான் சரோஜா படம் பார்த்துக்கொண்டு இருந்தேன் அந்த effect ]..


அதை பார்த்த உடனே ஒருத்தன் .. ஆப்பிள் எடுக்கிறான் .. இன்னொருத்தன் காரட் குடுக்கிறான் ....சிறிது நேரம் அதை சுத்தியே எல்லோரும் உக்காந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம் ..



ஒருத்தன் இது நல்லா பேசும் டா என்றான் இன்னொருத்தன் நல்லா பாடும் என்றான் .. அதுக்குள்ளே தூக்கம் வர ..அதுக்கு ஒரு இடத்தை கொடுத்துட்டு .. அவன் அவன் தூங்க சென்றுவிட்டோம்


காலை 6 மணிக்கு ... கீ கீ னு கத்த தொடங்கிவிட்டது அட நம்ப சரோஜா தாங்க .. என்ன கொடுமை டா இதுன்னு ..




"டேய் அதுக்கு எவனாவுது சாப்பாடு குடுங்கடா என்றால் எவனும் எழுந்திரிக்கவில்லை ..."


அட பாவமே என்று நினைத்துக்கொண்டு காதை அடைத்து கொண்டேன் .. அதுக்குள் ஒரு நல்ல மனுசன் காரட் கொடுத்தாரு


அப்புறம் ஒரு 8 மணிக்கு கிளம்பி .. office க்கு சென்றுவிட்டோம் மத்தியம் வந்து பார்த்த சரோஜாவை காணவில்லை .. எங்கட என்று கேட்டால் .. நண்பர் ஒருத்தர் கேட்டாரு கொடுத்து விட்டேன் என்றார் ..


செரி ஓகே .. என்று சொல்லிவிட்டு .. வேலையை பார்க்க சென்றுவிட்டோம் ..


அட இன்னைக்கு office இருந்து வந்து பார்த்தால் .. மீண்டும் கீ கீ சத்தம் ரூம்லே . என்ன என்று கேட்டால் . நேத்து அவங்க விட்டில் காலை 5 மணிக்கே கீ கீ ஆரம்பமாம் .....

No comments: