Saturday, August 30, 2008

என் தேசம் எங்கே செல்கிறது

என்ன கருமங்க இது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி ...

போன electionலெ , தமிழகத்தில் வேலை வாய்ப்பு குறைந்து விட்டது என்றார்கள் , அதனால் நாங்க ஆட்சிக்கு வந்தால் மக்கள் கஷ்ட பட கூடாது என்று இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்றார்கள் .. ஆனால் வர போகும் Election யை மனதில் வைத்துக்கொண்டு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி ... என்கிறார்கள் ..

அப்படி என்றால் மக்களின் வாழ்க்கை தரமும் , மக்களின் வருமானமும் முன்பு இருந்ததை விட குறைந்து விட்டது அல்லவா . டேய் அரசியல் பன்னாடைகலா , மக்களை வாழவிடுங்கள் . ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்றாலும் அதை வாங்கும் வசதி மக்களுக்கு வர வேண்டும் அது அல்லவா சமூக முன்னேற்றம் . இரண்டு வாரம் முன்பு ஒரு வலை தளத்தில் படித்தேன் , இரண்டு உச்ச நீதிமன்டற நீதிபதிகள் சொன்ன வார்த்தை "Even god come to India also he cont save people from politician " என்று .ஒரு நீதிபதிக்கே அப்படி ஒரு வெறுப்பு வருகிறது என்றால் , சாமானிய மக்களுக்கு ஏன் வராது , இப்படி தான் , naxlites உருவாக்க படுகிறார்கள் .

என்ன ஒரு அவல நிலையில் உள்ளது நம் தேசம் .. நம்மை போன்ற மக்கள் we are proud to be INDIAN என்று தினமும் சொன்னாலும் , நம் தலைவனுக்கு அப்படி ஒரு சிந்தனையே இல்லை . இப்படி இருந்தால் எப்படி ஐய்யா தமிழகம் உருப்படும் . இருக்கிறவன் தொந்தரவு தாங்க முடியல என்றால் , கருப்பு MGR , சிகப்பு MGR , என்று புது புது தலைவர்கள் வேற ...
என்ன கொடுமைங்க இது ...

No comments: