Tuesday, November 4, 2008

பிளாக்கர் பொலிடிக்ஸ் ..


நேற்று சும்மா வெட்டியாக இருந்தேன் பல பிளாக்கிற்கு சென்றேன் .ஒரு பிளாக்கிற்கு சென்ற பொழுது .. அட ஒரே அடி தடி தான், நம்ப அரசியல் வாதிகள் மாதிரி எல்லாம் அறிக்கை போர்கள் பல நடக்குது , இவரு ஒருத்தரை பற்றி எதாவுது எழுதி வைக்க இவருக்கு ஒரு கோஸ்டி , அமாம் சாமி போட ..இவரால் அடி வாங்கினவரு சும்மா இருப்பாரா அவடோட பிளாக்கிளே இவர திட்ட அவருக்கும் ஒரு கோஸ்டி சேர்ந்து விடுகிறது

பிளாக்கிற்கு எப்பாவது வருபவர்களுக்கு எதுவும் புரியாது ஏன் என்றால் . கிசு கிசு எழுவது போல் பல விடு கதைகள் சொல்லி அவரு தான் இவரு தான் என்று சொல்கிறார்கள் அது இவரு தான் என்று கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது . இதில் யாரு இவரு அவரு என்று குழம்ப வேண்டாம் . நான் யாரையும் குறிப்பிடவில்லை

ஒரு பிரபல எழுத்தாளர் இருக்கிறார் , அவர் ஒரு தடவை அவருடைய இணைய தளத்தில் பிளாக்கர்ஸ் பற்றி கொஞ்சம் காட்டமாக விமர்சனம் செய்து இருந்தார் . அதற்க்கு பல கண்டன பதிவுகள் பலர் எழுதினார்கள் . ஆனால் இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் அவர் சொன்னது தவறு இல்லை என்று எனக்கு தோன்றுகிறது .

நண்பர்களே முதலில் நீங்கள் பெரிய எழுத்தாளர் என்று நீங்களே நினைத்தால் , விமர்சனங்களையும் ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் உங்களுக்கு வர வேண்டும் அந்த விமர்சனத்திற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் அதை மற்றவர்கள் மனம் புண் படாமல் தெரிவிக்க கற்றுக்கொள்ளுங்கள்

கண்ணுகளா இதை படித்து விட்டு இங்கு வந்து கும்மியெல்லாம் அடிக்கப்பிடாது சொல்லிப்புட்டேன் ..:) :)

No comments: