Sunday, August 24, 2008

கல்லூரி காதல்




கல்லூரி வகுப்பறை சொல்லிக்கொடுத்த பாடத்தை விட
கல்லூரி வாசல் டீ கடையில் பாடங்கள் பல படித்தேன்

நம் வகுப்பரையின்
வண்ணத்துப்பூச்சி நீ அல்லவா !

கல்லூரிக்கு என்றாவது ஒரு நாள் வரும் என்னை
Assignment க்காக வெளி அனுப்பும் பொழுது
அப்பாவியாக பாவம் என்பாயே !

கல்லூரியே கலைந்த பின்னும்
Extra லேப் என்று உன் தோழிகளிடம் சொல்லிவிட்டு
எனக்காக காத்திருப்பாயே !

நம் கல்லூரி corridor சொல்லும் நாம்
கடலை போட்ட நாட்களை !

காலங்கள் நம் காதலை சொல்லும் என்று
கல்லூரி மரக்கிளையில்
நம் பெயரை எழுதினாயே !

நண்பர்கள் கேலி செய்தாலும்
பொதி சுமப்பது போல்
உன் புத்தகங்களை
எடுத்து வர செய்தாயே !



நம் கல்லூரி அதிசயத்தில் ஒன்று
நான் arrier இல்லாமல் பாசவுவது
அதற்க்கு முக்கிய காரணம் நீ தான் என்று யாருக்கு தெரியும் !


இப்படி !!

வலிய வந்தாய்
வாழ்கையே நீ தான் என்று உணரும்முன்
வலியை மட்டும் விட்டு சென்றாய் !

என் உயிர் நீ தான் என்றாய் ! ஆனால்
உயிரை விட்டு பிரிய உனக்கு எப்படி மனம் வந்தது

2 comments:

Divya said...

கவிதை சூப்பர்!!

ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க, ரசித்தேன்!!

வாழ்த்துக்கள்!!

Prabakar said...

நன்றிங்க திவ்யா ..