Tuesday, August 26, 2008

கோவை எக்ஸ்பிரஸ்

முதலில் TMS பாடினார்
பிறகு சுசிலா , இளையராஜா , சித்ரா என்று வரிசையாக ..பாடினார்கள்
இதற்க்கு நடுவில் மனதை வருடும் புல்லாங்குழல் இசை வேறு !
என்ன ஒரு மேதைகள் இவர்கள் என்று
நான் என்னும் முன்
என் முன் கையேந்தி நின்றார்கள் அந்த மேதைகள்




இடம் : கோவை எக்ஸ்பிரஸ்

எனக்கு தெரிந்து கடந்த ஆறு வருடமாக அவர்களை பார்க்கிறேன் , கடந்த இரண்டு மாதம் முன்பாக இந்தியா சென்ற போது கூட அந்த அற்புத மனிதர்களை பார்த்தேன் .கோவை எக்ஸ்பிரஸ்யில் பயணம் செய்த அனைவரும் ,நிச்சையாம் அவர்களை பார்க்க முடியும்


விழி தான் இல்லை ஆனால் ,
வாழ எங்களுக்கும் ஒரு வழி உண்டு என்று ,
எடுத்துக்காட்டும் மனிதர்கள் ,ஆனால் பாவம் கையேந்துகிறார்கள்

குறிப்பு : இந்த பகுதிக்காக கோவை எக்ஸ்பிரஸ் பற்றிய படம் தேடிய போதுதான் தெரியும் கோவை எக்ஸ்பிரஸ் இப்போ வோடபோன் ட்ரெயின் என்று அதாவுது, இப்பொழுது அதன் நிறம் சிகப்பு நிறமாக மாற்றப்பட்டு உள்ளது .

1 comment:

Divya said...

ஊர் ஞாபகம் வந்தது:(