Friday, November 14, 2008

கேட்டதில் ரசித்தது ராசு -4

சென்ற ராசுவின் பதிவில் சொன்னது போல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து தங்கள் ஊருக்கு சென்றான் .தன் மனைவிக்கு ஆசை ஆசையாக வாங்கி வந்த செண்டு மற்றும் அனைத்து பொருளையும் எடுத்து கொடுத்து அசத்தினான் ..

வெற்றி கொடிகட்டு வடிவேலு மாதிரி ஊருக்குள் சுத்திக்கொண்டு இருந்தான் , அவன் எந்த வீட்டு விசேசத்திற்கு சென்றாலும் ஒரு மனம் அவனை தொடர்வது போல் உணர்ந்தான் .ஆனால் அது என்ன என்று மட்டும் அவனுக்கு தெரியவில்லை ,ஆனால் அது அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட மனமாக இருந்தது .

அப்படி தான் ஒரு நாள் தங்கள் உறவினர் வீட்டு திருமனத்திற்கு செல்ல வேண்டும் என்று கிளம்பிக்கொண்டு இருந்தான் , வழக்கம் போல் அவன் மனைவி அலங்காரம் பண்ணிக்கொண்டு வருவதற்குள் போது போதும் என்று ஆகிவிட்டது

"அடியே என்ன டி பண்ற அங்க .."

"எங்கனா போறதுனா சட்டுப்புட்டுன்னு கெளம்பறது இல்லை .. சிக்கிரம் வா"

"ஏயா கத்தற "

"கெளம்ப வேண்டாமா " என்று சொல்லிக்கொண்டு ஒரு பெரிய செண்டு எடுத்து அடித்துக்கொண்டால்

அதை பார்த்த ரசுவிர்கு பகிர் என்று இருந்தது ..

“அடியே என்ன டி பண்ற !!!!! ……… “

“அதை ஏன் டி எடுத்து அடிக்கிற “..

அவன் கேட்பது அவள் காதில் விழுவதாக தெரியவில்லை மீண்டும் மீண்டும் அடித்துக்கொண்டு இருந்தால் ..

“அடியே உன்னை தான் டி அதை எதுக்கு டி அடிக்கிற அந்த சின்ன பாட்டில் எல்லாம் எங்க , அதை என்ன பண்ணின “

“அந்த சின்ன பாட்டில் எல்லாம் பக்கத்து விட்டு அக்காவுக்கு கொடுத்துட்டேன்”

“அதை ஏன் டி கொடுத்த “

“அந்த அக்கா கேட்டுக்கிடே இருந்தாங்க அது தான் கொடுத்தேன் “

“ஐயோ ..பன்னாடை பன்னாடை “

“ஏயா என்னை திட்டற ..”

“கொடுத்தது தப்பு இல்லை ..ஆனா அதை ஏன் டி கொடுத்த ,”

“ மத்தது எல்லா சின்னதா இருந்தது அது தான் பெருசை எல்லாம் நான் வெச்சிக்கிட்டு , சின்ன பாட்டில் எல்லாம் அவுங்களுக்கு கொடுத்தேன் “

“அது இல்லை டி அது தான் செண்டு இது வீட்டிற்கு அடிக்கிற ரூம் ஸ்ப்ரே இதை friend ஒருத்தன் சும்மா கொடுத்தான் "

“எனக்கு என்ன தெரியும் இது எல்லாம் நீ தான் சொல்லி கொடுக்கணும்..”

இந்த சம்பவத்திர்க்கு பிறகு மனிதர் யார் ஒசியில் எது கொடுத்தாலும் அது அவனுக்கு பயன் படவில்லை என்றால் அதை வாங்க மாட்டான் .