Wednesday, September 17, 2008

என் வாழ்க்கை -- காலை மாலை இரவு

காலை
செல் போன் சத்தத்தில் தொடங்குகிறது
ஒவ்வொரு நாளும்

வாழ்க்கை எங்கே செல்கிறது
என்று தெரியவில்லை ஆனால்,
கால்கள் மட்டும்
என் அலுவலகம் செல்கிறது

சிறிதுநேரத்தில்
என் வாழ்க்கை பற்றி சிந்தனைகள் மறைந்து
முகம் தெரியாத முதலாளியின்
கனவை
நினைவாக்க சென்று விடுகிறேன் ...

மாலை
பல நாட்களில்
மணி ஆனது தெரியாமல்
moniter யிடம் மல்லுகட்டி கொண்டு இருப்பேன் ..

இரவு
வீடு திரும்பும்போது
மீண்டும் வாழ்க்கை பற்றிய சிந்தனை ..
அதற்குள் எனக்குள் தூங்கிக்கொண்டு
இருந்த லக்சிய சித்தனும்
கொள்கை கோமாலியும்
என் முன் சென்று
என்னை மானம் கெட திட்டுவார்கள்
அதற்குள் வீடு வந்து விடும்

சிறிது நேரத்தில்
உணவு அருந்திவிட்டு உறங்க சென்றால் ,
மற்றும் சிறிது நேரத்தில்
செல் போன் சிணுங்க தொடங்கும்
அடுத்த நாள் காலையில் ....

2 comments:

Anonymous said...

good narration of the day today life of us .... me doin the same thing here..only diff is I switch off my mobile when I sleep and I woke up with the alarm sound .....

yengae pogirathu yen vaazkai ....? vidai theriyaatha kelvigal .....aanal vedai theriyamal irnthaal thaan vaangiya personal loan yellam adaika mudiyum .... :)

Prabakar said...

:) உண்மை தான் சதீஷ்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி