Friday, September 12, 2008

ஹமாம் operator ராசு- 1



நான் கேட்டதில் ரசித்த உண்மை சம்பவம் ....
நம்ப ஹீரோ பேரு ராசு , இவரு , தென் தமிழ்நாட்டில் இருந்து வந்து துபாய்யில் வேலை செய்யும் ஒரு ஹமாம் operator,

துபாய் வந்த பிறகு கல்யாண மார்கெட்டில் நம்ப ராசுவிர்க்கு மௌசு அதிகம் ஆகிவிட்டது . அவருக்கு பெண் பார்க்கும் படலம் தொடங்கியது , ஒரு முறை விட்டிற்க்கு அழைத்த அவனுக்கு ஒரு நல்ல செய்தியும் கிடைத்து தங்களது தூரத்து உறவில் ஒரு பெண் இருப்பதாகவும் சீர் செனத்தி சிறப்பாக செய்வார்கள் என்று ராசுவின் அம்மா கூறினார் .

பிறகு நாட்கள் உருண்டன இரண்டு வாரத்தில் தன் அம்மா அன்று சொன்ன அந்த பெண்ணின் போட்டோவை அனுப்பி வைத்துள்ளதாக கூறினார் . இரண்டு நாளில் கொரியரும் வந்து சேர்ந்தது .பிரித்து பார்த்த அவனுக்கு வயித்துக்குள் பட்டாம்புச்சி பறக்க தொடங்கியது தனது சமதத்தை தன் அம்மாவிடம் சொன்னான் . அதேபோல் அந்த பெண்ணுக்கும் அதே biological மாற்றம் ஏற்பட . .பெரியவர்கள் ஒன்று கூடி ஒரு தேதியில் கல்யாணம் என்று முடிவு செய்தார்கள் . அப்படியும் கல்யானத்துக்கு இரண்டு மாதம் இருத்தது ....
அப்பொழுது ராசுவிற்கும் அந்த பெண்ணுக்கும்

பசி இலலை


தூக்கம் இல்லை


நிமிடங்கள் ஒவ்வொன்றும் வருடங்கள் ஆகினா


நாட்கள் ஒவ்வொன்றும் நரகம் ஆகியது


கிரகாம் பில் அவன் குல தெய்வம் ஆனார்


missed call ஒவ்வொன்றும் மில்லியன் டாலேர் அவனுக்கு

(அட இது எல்லாம் இந்த Situation க்கு மிக அவசியங்க )

பிறகு அப்படி இப்படி என்று ஒரு மாதம் ஓடியது , பிறகு ஒரு நாள் தன் அம்மாவிடம் இருந்து ஒரு பார்சல் வந்தது , திறந்து பார்த்தால் அவனது கல்யாண பத்திரிக்கை , அவன் நண்பர்களுக்கு குடுக்க தன் அம்மா அனுப்பியதாக சொன்னார் . பத்திரிக்கையை திறந்து பார்த்த அவனுக்கு கடும் கோபம், அதை வாங்கி பார்த்த அவனது நண்பர்கள் அடக்கமுடியாமல் சிரித்தார்கள் கேளியும் , கிண்டலும் ராசுவை சூடேத்தியது .



பிறகு என்ன.. தன் அம்மாவிற்கு போனை போட்டு காச் மூச் என்று கத்தினான் , ஏன் ஹமாம் Operator என்று பத்திரிகையில் போட்டிர்கள் என்று கத்தினான் .

அதற்க்கு அவன் அம்மா சொன்ன பதில் "செய்யும் தொழிலே தெய்வம் டா .. அது ஒன்னும் தப்பு இல்லை நீ அங்க அந்த வேலை பார்த்து கஷ்ட படுவது தான் நாங்க இங்க மூன்று வேலையும் சாப்பிடுகிறோம் ".. என்று தான் அம்மா சொன்ன பிறகு தான் சற்று அமைதியானான் ராசு

ஹமாம் என்றால் அரபிக்யில் கக்குஸ் (Toilet) என்று அருத்தம் . இதை கேட்டதும் எனக்கு ஞாபகம் வந்தது நம்ப வடிவேல் தான் ...

2 comments:

Anonymous said...

:))


இது கற்பனை கதையா.....இல்லை உண்மை சம்பவமா???

ரொம்ப சுவாரஸியமாக இருந்தது. உங்கள் எழுத்து படிப்பதற்கு:))

Prabakar said...

இந்த ராசு பற்றிய கதைகள் எல்லாம் இங்கு நான் கேட்ட உண்மை சம்பவம் ஆனால் கருத்து கந்தசாமி மட்டும் நான் சேர்த்த .. மசாலா :) :) :)

வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க